காதல் விவகாரத்தால் வசீம் தாஜுதீன் பழி தீர்க்கப்பட்டார் – வெளிவரும் புதிய தகவல்
றக்பி வீரர் வசீம் தாஜுதீனின் மரணம் காதலுடன் தொடர்புபட்டதாகும். பெண் ஒருவர் தனது காதலனைக் கைவிட்டு வசீம் தாஜுதீனைக் காதலித்தனாலேயே அவர் மீது பழி தீர்க்கப்பட்டது என சுகாதாரம் போசனை மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
நேற்று மதியம் அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் பதிலளிக்கையில்;
‘மத்திய வங்கியின் பிணை முறியுடன் சம்பந்தப்பட்ட அர்ஜுன மகேந்திரனின் மருமகன் அலோசியஸ் மற்றும் சிலர் கைது செய்யப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் ஷ பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.
இவர்கள் இருவரும் அன்று காதலர்களாக பழகியவர்கள். இன்று அலோசியஸ் மறுதரப்பு ஆதரவாளராக இருக்கின்றமையினாலேயே இவ்வாறு தெரிவிக்கிறார். அவர்கள் காதலர்கள் போன்று அன்பாக இருந்தவர்கள் நெருங்கிப் பழகியவர்கள்.
அரசியலில் தம்முடன் நெருங்கிப் பழகியவர்கள் எதிர்த்தரப்பினை ஆதரிக்கும்போது பழிவாங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதுவே இன்று நடக்கிறது. வசீம் தாஜுதீனின் மரணமும் இவ்வாறே காதல் காரணமாக பழி தீர்க்கப்பட்டது.
காதலுக்காக இந்தக் கொலை நடைபெற்றுள்ளது.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ சந்தேக நபர் மாத்திரமே. அவரை சிறையில் அடைத்துள்ளதாக சிலர் பிரசாரம் செய்கிறார்கள். அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் பீ அறிக்கையை பொலிஸார் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளார்கள்.
40 அரச வாகனங்களை அவர் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். 40 வாகனங்களில் 14 வாகனங்கள் நெருங்கிய உறவினர்களின் பாவனைக்கு வழங்கியுள்ளார். 5 வாகனங்கள் வாடகை சேவைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதனாலேயே அவருக்குப் பிணை வழங்கப்படவில்லை.
இதேவேளை, விமல் வீரவன்ஸவின் வாகன மோசடி தொடர்பில் லசந்த அழகியவன்னவையும் முன்னாள் பொறியியல் கூட்டுத்தாபனத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆஷு மாரசிங்கவையும் கைது செய்ய வேண்டுமென நாமல் ராஜபக் ஷ கூறுகிறார்.
வாகன மோசடியில் நேரடியாகத் தொடர்புபட்டவர் முன்னாள் அமைச்சராக இருந்த விமல் வீரவன்ஸவே அதனாலே அவர் கைது செய்யப்பட்டார் என்றார்.
நேற்று மதியம் அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் பதிலளிக்கையில்;
‘மத்திய வங்கியின் பிணை முறியுடன் சம்பந்தப்பட்ட அர்ஜுன மகேந்திரனின் மருமகன் அலோசியஸ் மற்றும் சிலர் கைது செய்யப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் ஷ பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.
இவர்கள் இருவரும் அன்று காதலர்களாக பழகியவர்கள். இன்று அலோசியஸ் மறுதரப்பு ஆதரவாளராக இருக்கின்றமையினாலேயே இவ்வாறு தெரிவிக்கிறார். அவர்கள் காதலர்கள் போன்று அன்பாக இருந்தவர்கள் நெருங்கிப் பழகியவர்கள்.
அரசியலில் தம்முடன் நெருங்கிப் பழகியவர்கள் எதிர்த்தரப்பினை ஆதரிக்கும்போது பழிவாங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதுவே இன்று நடக்கிறது. வசீம் தாஜுதீனின் மரணமும் இவ்வாறே காதல் காரணமாக பழி தீர்க்கப்பட்டது.
காதலுக்காக இந்தக் கொலை நடைபெற்றுள்ளது.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ சந்தேக நபர் மாத்திரமே. அவரை சிறையில் அடைத்துள்ளதாக சிலர் பிரசாரம் செய்கிறார்கள். அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் பீ அறிக்கையை பொலிஸார் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளார்கள்.
40 அரச வாகனங்களை அவர் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். 40 வாகனங்களில் 14 வாகனங்கள் நெருங்கிய உறவினர்களின் பாவனைக்கு வழங்கியுள்ளார். 5 வாகனங்கள் வாடகை சேவைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதனாலேயே அவருக்குப் பிணை வழங்கப்படவில்லை.
இதேவேளை, விமல் வீரவன்ஸவின் வாகன மோசடி தொடர்பில் லசந்த அழகியவன்னவையும் முன்னாள் பொறியியல் கூட்டுத்தாபனத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆஷு மாரசிங்கவையும் கைது செய்ய வேண்டுமென நாமல் ராஜபக் ஷ கூறுகிறார்.
வாகன மோசடியில் நேரடியாகத் தொடர்புபட்டவர் முன்னாள் அமைச்சராக இருந்த விமல் வீரவன்ஸவே அதனாலே அவர் கைது செய்யப்பட்டார் என்றார்.


Comments
Post a Comment