சவுதியின் Vision 2030 : இலங்கை பூரண ஒத்துழைப்பு

2030ம் ஆண்டளவில் சவுதி அரேபியாவை தகவல் தொழிநுட்பம், அபிவிருத்தி மற்றும் பிராந்தியத்தின் முன்னணி நாடாக மாற்றும் சவுதியின் Vision 2030 திட்டத்திற்கு இலங்கை பூரண ஒத்துழைப்பை வழங்கும் என சவுதிக்கான தூதர் பைசர் மக்கீன் தெரிவித்துள்ளார்.

ஜித்தா ஆளுனருடனான சந்திப்பின் போதே இலங்கையின் ஒத்துழைப்பு குறித்து விளக்கப்பட்டுள்ள அதேவேளை சவுதி அரேபியாவிலிருந்து இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகள் மிகவும் திருப்தியாக திரும்பிச் செல்வதுடன் மீண்டும் இலங்கைக்கு விஜயம் செய்யும் நிலையே காணப்படுவதாகவும் அங்கு கருத்துப் பரிமாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments