12 ஆயிரம் முன்னாள் புலி­களை மீண்டும் கைது ­செய்­ய­வேண்டும்


சர்­வ­தேச நீதி­ப­தி­களை அனு­ம­திக்க அர­சாங்கம் தயா­ராக இல்லை; சர்­வ­தேச நீதி­ப­தி­களை அனு­ம­தித்து தமிழ் மக்­களின் நீதியை பெற்­று­க்கொ­டுக்க முடியும் என தமிழர் தரப்பு எதிர்­பார்க்­கின்­றது என்றால் அது தமி­ழீ­ழத்தை தர­வேண்டும் என்று கோரு­வ­தற்கு சம­னாகும் என்று   அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க  தெரி­வித்தார். 

இரா­ணுவம் விதி­மு­றை­களை மீறி செயற்­பட்­டி­ருந்தால் அது தொடர்பில்  ஆரா­ய­வேண்டும். அதே­போன்று புலி­களின் செயற்­பா­டுகள் குறித்தும் விசா­ரிக்­க­வேண்டும். விடு­த­லைப்­பு­லிகள் உறுப்­பி­னர்கள் 12 ஆயிரம் பேரை மீண்டும் கைது செய்­ய­வேண்டும்   எனவும் அவர் குறிப்­பிடார். 

சர்­வ­தேச நீதி­ப­தி­களை வர­வ­ழைத்து சர்­வ­தேச விசா­ர­ணை­களின் மூல­மாக தமிழ் மக்­க­ளுக்கு நீதியை பெற்­று­கொ­டுப்­பது தொடர்பில் ஆராய வேண்டும் என வட­மா­காண முதல்வர் தெரி­வித்­துள்ள நிலையில் இது குறித்து அர­சாங்­கத்தின் நிலைப்­பாட்டை வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில், 

இலங்­கையின் அர­சியல் பிரச்­சி­னைகள் தொடர்பில்  தீர்­வு­களை பெற்­றுக்­கொ­டுக்­கவோ அல்­லது அதி­காரப் பகிர்வு தீர்வு  தொடர்பில் செயற்­ப­டவோ இவர்கள் சர்­வ­தேச நீதி­ப­தி­களை அழைக்­க­வில்லை.

அதற்­கான தேவையும் இல்லை. அர­சியல் பிரச்­சி­னைகள் தொடர்பில்  அர­சாங்கம் அக்­கறை செலுத்தி வரு­கின்­றது. ஆனால் யுத்த குற்­றங்கள் தொடர்பில் ஆரா­யவும் புலி­க­ளுக்கு நீதியை பெற்றுக் கொடுக்­கவும் இரா­ணு­வத்தை தண்­டிக்­க­வுமே இவர்கள் சர்­வ­தேச நீதி­ப­தி­களை வர­வ­ழைக்­கப்­பார்க்­கின்­றனர்.  

அவ்­வாறு இவர்கள் சர்­வ­தேச நீதி­ப­தி­களை வர­வ­ழைக்க வேண்டும் என்றால் ஈழம் வேண்டும் என்­பதா தமிழர் தரப்பின் கோரிக்கை என்­பதை அவர்கள் வெளிப்­ப­டுத்த வேண்டும் . யுத்த குற்றம் தொடர்பில் ஆரா­யப்­பட வேண்டும் என்­பதில் தவ­றில்லை. 

இலங்கை இரா­ணுவம் யுத்த விதி­மு­றைக்கு முர­ணாக மனித உரிமை மீறல்­களை மேற்­கொண்­டி­ருப்பின்  அவற்றை ஆராய வேண்டும். அதேபோல் விடு­தலைப் புலி­களின் குற்­றங்­க­ளையும் விசா­ரிக்க வேண்டும்.உல­க­ளா­விய ரீதியில் தடை­செய்­யப்­பட்ட ஆயுத குழுவின் நட­வ­டிக்­கைகள் மற்றும்  பொது­மக்­களை பணயம் வைத்து அவர்கள் மேற்­கொண்ட அரா­ஜக நட­வ­டிக்­கைகள் தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு அவர்­களை தண்­டிக்க வேண்டும். 

இறுதி யுத்­தத்தில் கைது­செய்­யப்­பட்ட மற்றும் சர­ண­டைந்த விடு­த­லைப்­பு­லிகள் உறுப்­பி­னகள் 12ஆயிரம் பேரை முன்­னைய அர­சாங்கம் விடு­தலை செய்­துள்­ளது. அவர்­களை மீண்டும் கைது­செய்ய வேண்டும். ஜன­நா­யகம் நீதி நிலை­நாட்­டப்­பட வேண்­டு­மாயின் இரு தரப்­பி­னரின்   நியா­யங்­க­ளையும் கவ­னத்தில் கொள்ள வேண்டும். நாட்டை காப்­பாற்றி பாது­காத்து வரும் இரா­ணு­வத்தை தண்­டித்து சர்­வ­தேச பயங்­க­ர­வாத அமைப்பை நியா­யப்­ப­டுத்­து­வது எந்த வகை­யிலும் நியா­ய­மாக அமை­யாது.

சர்­வ­தேச விசா­ர­ணை­களை மேற்­கொண்­டாலோ அல்­லது உள்­ளக விசா­ர­ணை­களை மேற்­கொண்­டாலோ இரு தரப்பின் குற்­றங்­க­ளையும் விசா­ரிக்க வேண்டும். அதேபோல் அவ்­வா­றான நகர்வில் சர்­வ­தேச அமைப்­பு­க­ளுடன் செயற்­பட்டு வரும் புலி­களின் உறுப்­பி­னர்­களை கைது­செய்து அவர்­களை இலங்­கை­யிடம்  ஒப்­ப­டைக்க வேண்டும். 

இன்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் அர­சியல் கட்­சி­யாக ஜன­நா­யக ரீதியில் செயற்­பட்டு வந்­தாலும் ஆரம்­பத்தில் இவர்­களும் புலி­களின் கூட்­ட­ணியில் இருந்­த­வர்கள். இன்று பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்கும் தமி­ழர்கள் அன்று ஆயுதம் ஏந்தி எமக்கு எதி­ராக போரா­டி­ய­வர்கள் என்­பதை மறந்­து­வி­டக்­கூ­டாது. 

ஆகவே வெறும் அர­சியல் நட­வ­டிக்­கை­க­ளுக்­காக வார்த்­தை­களை வெளிப்­ப­டுத்தி மக்­களை குழப்பும் நட­வ­டிக்­கை­களை தமிழர் தரப்பு விடவேண்டும். இன்று நாட்டில் ஜனநாயக ரீதியில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சகல பகுதிகளிலும் நல்லிணக்க வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். அவ்வாறு இருக்கையில்  ஒரு சாராரின் கொள்கைகள், பிரிவினைவாத செயற்பாடுகள் மூலம் நாட்டின் ஜனநாயகத்தை குழப்பக் கூடாது. அவை நாட்டுக்குள் செல்லுபடியாகாது  என்றார். 

Comments