முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு ஞாயிறன்று


ஸ்ரீ.ல.முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு எதிர்­வரும் 12ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை காலை 9.30 மணிக்கு கொழும்பு பண்­டார நாயக்க ஞாப­கார்த்த மாநாட்டு மண்­ட­பத்தில் நடை­பெ­ற­வுள்­ளது. அனைத்து தேர்தல் தொகு­தி­க­ளி­லி­ருந்தும் பேரா­ளர்கள் இம்­மா­நாட்டில் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.

கட்­டாய உயர்­பீட கூட்­டத்தில் தெரிவு செய்­யப்­பட்ட கட்­சியின் பதவி வழி நிர்­வா­கி­களின் பெயர் விப­ரங்கள் இக்­கூட்­டத்தில் அறி­விக்­கப்­படும்.

கட்­சியின் தவி­சாளர் பஷிர்­சே­கு­தாவூத் பத­வி­யி­லி­ருந்தும் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் கட்டாய உயர்பீட கூட்டத்திலும் பேராளர் மா நாட்டிலும், கட்சியின் யாப்பின்படி அவரால் கலந்துகொள்ள முடியாது.

இதேவேளை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் கட்­டாய அர­சியல் உயர்­பீட கூட்டம் எதிர்­வரும் 11ஆம் திகதி சனிக்­கி­ழமை தாருஸ்­ஸ­லாமில் நடை­பெ­ற­வுள்­ளது. இக்­கட்­டாய உயர்­பீடக் கூட்­டத்தில் கட்­சியின் தலைவர், செய­லாளர், பொரு­ளாளர், தவி­சாளர் உட்­பட பதவி வழி உத்­தி­யோ­கத்­தர்கள் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர்.

Comments