அக்குறணை அஸ்ஹர் பிரதி அதிபருக்கு விசேட காரணங்களுக்கமைய பிணை


இலஞ்சம் பெற்­ற­தாக கூறி கடந்த 23 ஆம் திகதி இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்­கு­ழு­வி­னரால் கைது­செய்­யப்­பட்ட அக்­கு­றணை அஸ்ஹர் கல்­லூ­ரியின் பிரதி அதி­ப­ருக்கு விசேட கார­ணங்­க­ளுக்­கமைய நேற்று பிணை வழங்­கப்­பட்­டுள்­ளது.

கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்றம் விசேட கார­ணங்­க­ளுக்­காக இரண்டு சரீ­ரப்­பிணை மற்றும் 10 ஆயிரம் ரூபா ரொக்­கப்­ பி­ணையில் பிரதி அதிபர் திரு­மதி ருகை­யாவை விடு­வித்­தது.

நேற்­றைய தினம் குறித்த விவ­காரம் தொடர்­பான வழக்கு விசா­ரணை கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்றில் இடம்பெற்றது.

பாட­சாலை சார்­பாக சட்­டத்­த­ர­ணி­க­ளான அனில் சில்வா மற்றும் என். எம்.சயீட் ஆகியோர் ஆஜ­ரா­கினர். 
இதன்­போது, பிரதி அதிபர் திரு­மதி ருகை­யா­வுக்­கான பிணை கோரிக்­கையை பிர­தி­வாதி சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ர­ணிகள் முன்­வைத்­தனர்.

இதே­வேளை, குறித்த பிரதி அதிபர் பாட­சா­லையில் நீண்ட கால சேவையில் ஈடு­பட்­ட­தா­கவும் அவர் சிறந்த பண்­பு­க­ளை­கொண்­டவர் என பலவேறு விட­யங்­களை குறிப்­பிட்டு பாட­சா­லையின் பெற்­றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் கையொப்­ப­மிட்ட நீதிச் சேவை ஆணைக்குழு மற்றும் இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு என்பவற்றிற்கு கையளித்த மகஜர் நீதி மன்­றுக்கு சமர்­பித்­த­தாக சட்­டத்­த­ரணி என்.எம்.சயீட் தெரி­வித்தார்.

அத்­துடன், அக்­கு­றணை அஷ்ஹர் தேசிய பாட­சாலை 1000 பாட­சா­லைகள் திட்­டத்தின் கீழ் உள்­வாங்­கப்­பட்­ட­மை­யினால் அதற்­கான போசனை பாட­சா­லை­க­ளி­லி­ருந்து மாண­வர்­களை உள்­ளீர்ப்­ப­தற்­காக 6 ஆம் தரத்­திற்கு ஆறு வகுப்­ப­றைகள் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தன. எனினும் இம்­முறை அதி­க­மான விண்­ணப்­பங்கள் கிடைத்­த­மை­யினால் மேல­தி­கமா ஒரு வகுப்­ப­றையை உரு­வாக்­கி­வேண்­டிய தேவை ஏற்­பட்­ட­தா­கவும் அதற்­காக பெற்­றோரின் தீர்­மா­னத்­திற்­க­மைய புதிய வகுப்­புக்­கான கதிரை மேசை­களை கொள்­வ­னவு செய்தல் உள்­ளிட்ட செல­வினங்­க­ளுக்­காக ஒவ்­வொரு பெற்­றோ­ரி­ட­மி­ருந்தும் 7500 பெறு­வ­தாக தீர்­மா­னிக்­கப்­பட்­ட­தாக நீதி­வானின் கவ­னத்­திற்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது.

இதற்­க­மை­யவே பாட­சா­லையில் நிதி சேக­ரிக்­கப்­பட்­ட­தா­கவும் அதற்­காக பெற்­றோர்கள் அடங்­கிய குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யி­லேயே பல­வந்­த­மாக பிரதி அதி­ப­ரிடம் பணம் ஒப்­ப­டைக்­கப்ட்­ட­தா­கவும் ஒது ஒரு சதி எனவும் நீதிமன்றில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

அத்­துடன் பிரதி அதி­பரின் மக­ளுக்கு எதிர்­வரும் ஐந்தாம் திகதி திரு­ம­ணத்­திற்­காக திகதி குறிக்­கப்­பட்­டி­ருப்­ப­தையும் இதன்­போது நீதி­மன்றின் கவ­னத்­திற்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது.

அத்­துடன் சதித்­திட்டம் குறித்தும் அதன் பின்­ன­ணியில் இருப்­ப­வர்கள் குறித்து நீதி­வா­னுக்கு பிர­தி­வா­தி­களின் சட்­டத்­த­ர­ணிகள் சுட்­டிக்­காட்­டினர்.

பிர­தி­வாதி தரப்பின் வாதங்­களை ஆராய்ந்த கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்ற நீதிபதி பிரதி அதிபர் திருமதி ருகையாவை ஒரு இலட்சம் பெறுமதியான இரு சரீரப்பிணைகள் மற்றும் 10 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

அத்துடன் எதிர்வரும் 28 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் அறிவித்தார்.

Comments