கிழக்கு மாகாண அமைப்பாளராக இம்ரான் நியமனம்
(ihzana fareed)
கிழக்கு மாகாண தமிழ் முஸ்லிம் பிரதேசங்களுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளராக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து கட்சியை மீளவும் கட்டியெழுப்புவது தொடர்பான கூட்டமொன்று கடந்த வெள்ளிக்கிழமை கட்சியின் செயலாளர் கபீர் ஹாஷிம் தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் கிழக்கு மாகான ஐக்கியதேசியக் கட்சி முக்கியஸ்தர்கள், செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் கிழக்கு மாகாண தமிழ், முஸ்லிம் பிரதேசங்களின் அமைப்பாளராக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே திருகோணமலை மாவட்ட தவிசாளராகவும் முதூர், திருகோணமலை தொகுதி அமைப்பாளராகவும் கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது
அத்துடன் கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய சிறிகொத்தாவில் அலுவலகம் ஒன்றை அமைத்து அவ்வலுவலகத்தின் ஊடாக கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுகொடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இதற்கான உத்தியோகத்தர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, இதன் முதற்கட்டமாக அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களின் ஐக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளர்களுடனான சந்திப்பொன்றும் கடந்த வெள்ளிக் கிழமை இடம்பெற்றது.
இதில் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஜெய்னுலாப்தீன் (லாபிர் ஹாஜியார்) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கிழக்கு மாகாண தமிழ் முஸ்லிம் பிரதேசங்களுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளராக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து கட்சியை மீளவும் கட்டியெழுப்புவது தொடர்பான கூட்டமொன்று கடந்த வெள்ளிக்கிழமை கட்சியின் செயலாளர் கபீர் ஹாஷிம் தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் கிழக்கு மாகான ஐக்கியதேசியக் கட்சி முக்கியஸ்தர்கள், செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் கிழக்கு மாகாண தமிழ், முஸ்லிம் பிரதேசங்களின் அமைப்பாளராக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே திருகோணமலை மாவட்ட தவிசாளராகவும் முதூர், திருகோணமலை தொகுதி அமைப்பாளராகவும் கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது
அத்துடன் கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய சிறிகொத்தாவில் அலுவலகம் ஒன்றை அமைத்து அவ்வலுவலகத்தின் ஊடாக கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுகொடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இதற்கான உத்தியோகத்தர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, இதன் முதற்கட்டமாக அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களின் ஐக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளர்களுடனான சந்திப்பொன்றும் கடந்த வெள்ளிக் கிழமை இடம்பெற்றது.
இதில் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஜெய்னுலாப்தீன் (லாபிர் ஹாஜியார்) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Comments
Post a Comment