சீகிரியவில் சுற்றுலாப் பயணிகளுக்கு வந்த ‘சோதனை’


சீகிரிய சுற்றுலாத் தளத்தின் கழிப்பிட வசதிகள் பழுது பார்க்கும் நிலை தோன்றியிருப்பதால் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அருகில் உள்ள வனப்பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுவதாக அறியமுடிகிறது.

சீகிரிய மொரகமுல வாகன தரிப்பிடத்தில் இதற்கென நியமிக்கப்பட்டுள்ள ஊழியர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் இவ்வாறே அறிவுறுத்தி வருகின்ற அதேவேளை சுற்றுலாப் பயணிகள் தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments