நிபந்தனையுடனேயே சைற்றத்திற்கு அனுமதி வழங்கியிருந்தேன்!
சைற்றம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு தனது ஆட்சிக்காலத்தில் பல்வேறு நிபந்தனைகளுனேயே அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.
அவன்கார்ட் விவகாரம் தொடர்பாக வழக்கு விசாரணை நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நிலையில் அந்த வழக்கை அவதானிப்பதற்காக கொழும்பு அழுத்தகடை நீதிமன்ற வளாகத்திற்கு அவர் வருகை தந்திருந்த போது ஊடகவியலாளர்களினால் சைற்றம் விவகாரம் தொடர்பாக அவரிடம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
”உங்களின் ஆட்சிக்காலத்திலேயே சைற்றம் உருவானது அது தொடர்பான பொறுப்புகளை நீங்களே ஏற்கவேண்டுமென்ற குற்றச்சாட்டுகள் நிலவுகின்றதே” என ஊடகவியலாளர்கள் அவரிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மகிந்த ராஜபக்ஷ தெரிவிக்கையில்,
”நான் சைற்றத்திற்கு நிபந்தனைகளை விதித்தே அனுமதி வழங்கியிருந்தேன்.
பல்வேறு வகையான நிபந்தனைகள் அதில் இருந்தன” என அவர் தெரிவித்துள்ளார்.


Comments
Post a Comment