அரச நிறுவனங்களுக்கு நேர்ந்த கதி!

நட்டமடைந்து வரும் அரச நிறுவனங்களை விற்பனை செய்ய வேண்டும் அல்லது அவற்றை தனியார் மயப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அரசாங்கத்தின் சிரேஸ்ட ஆலோசகர் ஒருவர் அழுத்தம் பிரயோகித்து வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறு நட்டமடைந்து வரும் நிறுவனத் பிரதானிகளை அழைத்து குறித்த சிரேஸ்ட ஆலோசகர் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு நிறுவனங்களை விற்பனை செய்வதற்காக நடைபெறும் கூட்டங்கள் அமைச்சர்களுக்கு தெரியாமல் நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பிரச்சினையால் அரச நிறுவனங்களின் பிரதானிகள் பெரும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

Comments