பல்கலைக்கழக மாணவர்கள் குறித்து மைத்தரி!


நாட்டின் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் கல்வி பயிலக்கூடிய சூழ்நிலை உருவாக்கிக் கொடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே இதனை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இதன்பொருட்டு உபவேந்தர்கள், பேராசிரியர்கள், பீடாதிபதிகள், ஒழுக்க நிர்வாகிகள் உள்ளிட்ட சகல தரப்பிரும் ஏனைய நிறுவகங்களுடன் கைகோர்த்து செயற்படும் வேலைத்திட்டம் எதிர்வரும் தினங்களில் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments