சிகரட் புகைக்கும் பிக்கு – கடும் கோபத்தில் சிங்களவர்கள்!


இலங்கையில் தற்போது பௌத்த மதம் அழிந்து கொண்டு வருவதாக பல தரப்பினரால் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்ற நிலையில் பிக்கு ஒருவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரம்புக்கனை பிரதேசத்தைச் சேர்ந்த பிக்கு ஒருவர் சிகரட் புகைக்கும் காணொளி ஒன்று இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இவ்வாறான ஓர் செயலில் ஈடுபட்டமை தொடர்பில் அனைத்து தரப்பினரால் இவர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகின்றது.

பௌத்த மதத்தினர் குறித்த பிக்குவை தண்டிக்க வேண்டும் என தேடிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments