ரயில் பெட்டியில் சித்திரம் வரைந்த வெளிநாட்டவர்களுக்கு நேர்ந்த கதி : காலியில் சம்பவம்


ரயில் பெட்டியில் சித்திரம் வரைந்த இரு வெளிநாட்டு பிரஜைகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் காலியில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருதாவது,

அனுமதியின்றி காலி ரயில் நிலையத்துக்குள் கடந்த வெள்ளிக்கிழமை மாலை நுழைந்த இரு பிரான்ஸ் பிரஜைகள், ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயில் ஒன்றின் பெட்டியில் சித்திரம் வரைந்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த நபர்கள் ரயில்வே பாதுகாப்பு சேவை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு காலி பிரதான மஜிஸ்திரேட் நீதிமன்றில் நேற்று சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது வெளிநாட்டு பிரஜைகளை நாளை (12) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அழிக்க முடியாத பெயின்ட் மூலம் சித்திரம் வரையப்பட்டுள்ளதாகவும் இதனால் ரயில் பெட்டிக்கு முழுவதும் பெயின்ட் பூசும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் ரயில்வே அதிகாரிகள் ரயில்வே திணைக்களத்துக்கு 64 ஆயிரத்து 440 ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Comments