பீஜிங் பறக்கிறார் பிரதமர்.!
சீனாவுடன் செய்து கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக உடன்பாடு தொடர்பாக பேச்சு நடத்துவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் மே மாதம் பீஜிங் செல்லவுள்ளார்.
இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு பீஜிங்கில் நேற்று விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்நிகழ்வில் சீனாவுக்கான இலங்கை தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு விசேட அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.


Comments
Post a Comment