புதிய ஒழுங்கு விதி முறையை அறிமுகப்படுத்தும் இலங்கை!
மின் கடத்தும் வடங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு இடையில் இருக்க வேண்டிய குறைந்த பட்ச இடைவெளி தொடர்பான புதிய ஒழுங்குவிதியை இலங்கை அறிமுகப்படுத்துகின்றது.
இந்த ஒழுங்குவிதி மூலம் நுகர்வோர்கள் மற்றும் சொத்துகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார விநியோக கம்பிகளுக்கு அருகில் பாதுகாப்பற்ற கட்டிடங்களை நிர்மாணிப்பதை தவிர்க்க புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து இலங்கை பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு மேலும் தெரிவிக்கையில்,
இதற்கமைய, மின்சார விநியோக கம்பி மற்றும் கட்டிடங்களுக்கு இடையாலன குறைந்தபட்ச இடைவெளி தொடர்பில் புதிய ஒழுங்குவிதி நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
1000 வோல்ட் மின்சாரத்தை விநியோகிக்கும் கம்பிகளுக்கும், கட்டிடங்களுக்கும் இடையில் குறைந்தது 2.4 மீற்றர் இடைவெளி காணப்பட வேண்டும்.
அத்துடன், அதிக வோல்ட் மின்சாரத்தை விநியோகிக்கும் மின்சார கம்பிகளுக்கும், கட்டிங்களுக்கும் இடையில் அதிக இடைவெளி காணப்பட வேண்டும்.
குறைந்தபட்ச இடைவெளிக்கும் குறைவான இடைவெளியில் புதிய கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படுமாயின், அது சட்டவிரோதமாகும் என பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய புதிய கட்டிடங்களை நிர்மாணிக்க அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் போது குறித்த விடயங்கள் கவனத்திற்கொள்ளப்படவுள்ளது.


Comments
Post a Comment