முசலி பிர­தே­ச மக்கள் போராட்­டத்தில்...


மன்னார் முசலி பிர­தே­சத்தில் உள்ள அதி­க­மான பூர்­வீக இடங்­களை வில்­பத்து வன பகு­திக்­கான எல்­லை­யாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிரி­சேன புதிய வர்த்­த­மா­னியில் கையொப்பம் இட்­டதை தொடர்ந்து வர்த்­த­­மானி அறி­வித்­தலை உட­ன­டி­யாக ஜனா­தி­பதி ரத்துச் செய்ய வேண்டும் என்ற கோரிக்­கை­யுடன் நேற்று மாலை மறிச்­சி­கட்டி, பாலைக்­குழி மற்றும் கர­டிக்­குழி மக்கள் போராட்­டத்தை ஆரம்­பித்துள்­ளனர்.

நேற்­றை­ய­தினம் போட்­டத்தை ஆரம்­பித்த அம்­மக்கள் இது­கு­றித்து தெரி­விக்­கையில், 
பல வரு­ட­கா­ல­மாக நாங்கள் வாழ்ந்த காணி­களை வில்­பத்து பிர­தே­ச­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யதை நாங்கள் வன்­மை­யாகக் கண்­டிக்­கின்றோம். ஓரு போதும் எங்கள் தாய் மண்ணை விட்டு வெளி­யேற மாட்டோம் என்றும் நேற்றுக்கூட ஜனா­தி­ப­திக்கு எங்கள் கோரிக்­கை­யினை முசலி பிர­தே­சத்தில் உள்ள அனைத்து சமூக மட்ட அமைப்­புக்கள் ஊடாக அனுப்பி இருக்­கின்றோம்.

கடந்த ஆட்சி காலத்தில் எங்­க­ளுக்கு அநி­யாயம் இடம்­பெற்­ற­தாகத் தெரி­வித்து தான் இந்த நல்­லாட்சி அர­சாங்­கத்தை உரு­வாக்­கினோம். ஆனால் இந்த அர­சாங்கம் எங்­க­ளுக்கு நல்­லதை செய்­யாமல் எங்கள் உற­வுகள் பரம்­ப­ரை­யாக வாழ்ந்த காணி­யினை கொள்ளை அடிக்கும் சூழ்ச்சி வேலை­களை செய்துள்ளது.

எங்கள் போராட்­டத்­திற்கு கட்சி அர­சி­ய­லுக்கு அப்பால் அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றுசேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம். இதற்கு ஜனாதிபதி நீதியான தீர்வொன்றினை வழங்கும்வரை போராட்டம் தொடருமெனத் தெரிவித்துள்ளனர்.

Comments