முசலி பிரதேச மக்கள் போராட்டத்தில்...
மன்னார் முசலி பிரதேசத்தில் உள்ள அதிகமான பூர்வீக இடங்களை வில்பத்து வன பகுதிக்கான எல்லையாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன புதிய வர்த்தமானியில் கையொப்பம் இட்டதை தொடர்ந்து வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக ஜனாதிபதி ரத்துச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் நேற்று மாலை மறிச்சிகட்டி, பாலைக்குழி மற்றும் கரடிக்குழி மக்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
நேற்றையதினம் போட்டத்தை ஆரம்பித்த அம்மக்கள் இதுகுறித்து தெரிவிக்கையில்,
பல வருடகாலமாக நாங்கள் வாழ்ந்த காணிகளை வில்பத்து பிரதேசமாக பிரகடனப்படுத்தியதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஓரு போதும் எங்கள் தாய் மண்ணை விட்டு வெளியேற மாட்டோம் என்றும் நேற்றுக்கூட ஜனாதிபதிக்கு எங்கள் கோரிக்கையினை முசலி பிரதேசத்தில் உள்ள அனைத்து சமூக மட்ட அமைப்புக்கள் ஊடாக அனுப்பி இருக்கின்றோம்.
கடந்த ஆட்சி காலத்தில் எங்களுக்கு அநியாயம் இடம்பெற்றதாகத் தெரிவித்து தான் இந்த நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கினோம். ஆனால் இந்த அரசாங்கம் எங்களுக்கு நல்லதை செய்யாமல் எங்கள் உறவுகள் பரம்பரையாக வாழ்ந்த காணியினை கொள்ளை அடிக்கும் சூழ்ச்சி வேலைகளை செய்துள்ளது.
எங்கள் போராட்டத்திற்கு கட்சி அரசியலுக்கு அப்பால் அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றுசேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம். இதற்கு ஜனாதிபதி நீதியான தீர்வொன்றினை வழங்கும்வரை போராட்டம் தொடருமெனத் தெரிவித்துள்ளனர்.


Comments
Post a Comment