வசீம் தாஜுதீனின் படுகொலையை மூடி மறைக்க அரசாங்கம் முயற்சி
சபையில் ஜே.வி.பி குற்றச்சாட்டு
வசீம் தாஜுதீன், லசந்த விக்கிரமதுங்க, பிரகீத் எக்னலியகொட ஆகியோரை படுகொலை செய்தவர்களை மூடிமறைப்பதற்கு அரசாங்கம் பெரும் முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் , எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இலஞ்ச அல்லது ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவின் இலஞ்சம் தொடர்பான திடீர் சோதனை முற்பண வரையறையில் திருத்தம் மேற்கொள்ளல் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
நாட்டில் ஊழல் மோசடிக்கார்களை தண்டிப்பதாக கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் மக்கள் ஆணையை மீறி செயற்படுகின்றனர். மோசடிக் காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வந்தவர்கள் மோசடிகளை மூடி மறைக்கின்றனர்.
இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் தில்ருக்ஷி விக்கிரமசிங்க மிகவும் நேர்மையாக செயற்பட்டு வந்தார். துரித கதியில் மோசடிக்காரர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தார். எனினும் அவரை நீக்கிவிட்டனர். இவர் மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை செய்தனர். ஏனெனில் தற்போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கு எதிராக விசாரணை செய்தமைக்காகவே இவ்வாறு செயற்பட்டனர்.
எனினும் தற்போது நல்லாட்சி அரசாங்கத்திலும் மோசடிகள் நடக்கின்றன அதுமாத்திரமின்றி வசீம் தாஜுதீன், லசந்த விக்கிரமதுங்க, பிரகீத் எக்னலியகொட ஆகியோரை படுகொலை செய்தவர்களை மூடிமறைப்பதற்கு அரசாங்கம் பெரும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது.
எனவே, மக்களின் ஆணையை பாதுகாக்க வேண்டும். ஊழல் மோசடிகளுக்கு எதிரான செயற்பாடுகளை அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டும். தராதரம் பாராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
வசீம் தாஜுதீன், லசந்த விக்கிரமதுங்க, பிரகீத் எக்னலியகொட ஆகியோரை படுகொலை செய்தவர்களை மூடிமறைப்பதற்கு அரசாங்கம் பெரும் முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் , எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இலஞ்ச அல்லது ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவின் இலஞ்சம் தொடர்பான திடீர் சோதனை முற்பண வரையறையில் திருத்தம் மேற்கொள்ளல் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
நாட்டில் ஊழல் மோசடிக்கார்களை தண்டிப்பதாக கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் மக்கள் ஆணையை மீறி செயற்படுகின்றனர். மோசடிக் காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வந்தவர்கள் மோசடிகளை மூடி மறைக்கின்றனர்.
இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் தில்ருக்ஷி விக்கிரமசிங்க மிகவும் நேர்மையாக செயற்பட்டு வந்தார். துரித கதியில் மோசடிக்காரர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தார். எனினும் அவரை நீக்கிவிட்டனர். இவர் மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை செய்தனர். ஏனெனில் தற்போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கு எதிராக விசாரணை செய்தமைக்காகவே இவ்வாறு செயற்பட்டனர்.
எனினும் தற்போது நல்லாட்சி அரசாங்கத்திலும் மோசடிகள் நடக்கின்றன அதுமாத்திரமின்றி வசீம் தாஜுதீன், லசந்த விக்கிரமதுங்க, பிரகீத் எக்னலியகொட ஆகியோரை படுகொலை செய்தவர்களை மூடிமறைப்பதற்கு அரசாங்கம் பெரும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது.
எனவே, மக்களின் ஆணையை பாதுகாக்க வேண்டும். ஊழல் மோசடிகளுக்கு எதிரான செயற்பாடுகளை அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டும். தராதரம் பாராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Comments
Post a Comment