கிண்ணியா வைத்திய சாலை மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்படவேண்டும்

(அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்)

சுமார் 85000 மக்களையும் சுமார் 70000 வாக்காளர்களை கொண்ட கிண்ணியா மூன்று ஆளும் கட்சி எம்.பி களையும் மாகாண சபை உறுப்பினரையும் கொண்டு இருந்த போதும் பாரிய வரலாற்று தவறை  செய்து இருப்பதை மறுக்க முடியாது.

சுனாமி அநர்த்தத்தினால் இலங்கையில் மிகவும் பாதிக்கப்பட்ட வைத்திய சாலை கிண்ணியா வைத்திய சாலையாகும்.

பாதிப்பு அடைந்த இந்த வைத்திய சாலை அங்கு இருந்த அரசியல் தலைமைகளின் கண்ணில் தென்பட இல்லை என்றால் அவர்கள் மக்கள் நலன் அற்ற முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளின் என குறிப்பிட்டால் மிகை ஆகாது.

சுனாமிக்கு பின் சரியான முறையில் திட்டமிட்ட முறையில் அபிவிருத்தி செய்யப்பட்டு இருந்தால் இன்று டெங்கு எனும் பெரும் ஆபத்தை தடுத்து இருப்பதுடன் அதன் தாக்கத்தையும் குறைத்து இருக்கலாம்.

இருப்பினும் கடந்து வந்த சோகத்தை கருத்தில் கொண்டு உடனடியாக கிண்ணியா தள வைத்திய சாலை மத்திய அரசின் கீழ் கொண்டு வரப்படுவதுடன் உடனடியாக தேவைப்படும் வைத்தியர்களும் பரிசோதனைக்கருவிகளும் அதனை கையாளும் நிபுணர்களும் உடன் கொண்டு வரப்பட வேண்டும். 

Comments