இறக்­காமம் மாணிக்­க­மடு பிர­தே­சத்­திற்கு மாகாண காணி ஆணை­யாளர் விஜயம்

எம்.ஏ.றமீஸ்

அம்­பாறை மாவட்டம் இறக்­காமம் பிர­தேச செய­லாளர் பிரி­விற்­குட்­பட்ட மாணிக்­க­மடு பிர­தே­சத்தில் உள்ள மாயக்­கல்லி மலை உச்­சியில் கடந்த ஒக்­டோபர் மாதம் 29ஆம் திகதி குழு­வொன்­றினால் பௌத்த சிலை நிறு­வப்­பட்­ட­தனைத் தொடர்ந்து அப்­ப­கு­தியில் அசா­தா­ரண நிலை தொடர்ந்து கொண்டு வந்­தது.

இப்­ப­கு­தியில் உள்ள காணியின் அமை­விடம் மற்றும் இதன் உண்மைத்தன்மை ஆகி­ய­வற்­றினை அறிந்து அதற்­கான தீர்­வினைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் கிழக்கு மாகாண காணி ஆணை­யாளர் அநுர தர்­ம­தாச தலை­மை­யி­லான குழு­வினர் அப்­ப­கு­திக்கு திடீர் விஜ­ய­மொன்றை மேற்­கொண்­டனர்.

இக்­கு­ழு­வி­ன­ருடன் கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உது­மா­லெவ்வை, இறக்­காமம் உதவிப் பிர­தேச செய­லாளர் பாத்­திமா நஹீஜா உள்­ளிட்ட அரச உயர் அதி­கா­ரிகள், பாதிக்­கப்­பட்ட காணி உரி­மை­யா­ளர்கள் எனப் பலர் கலந்து கொண்­டனர்.

இறக்­காமம் பிர­தேச செய­ல­கத்தில் இடம்­பெற்ற விசேட கலந்­து­ரை­யா­ட­லின்­போது, குறிப்­பிட்ட மலை­யினை அண்­டி­யுள்ள பிர­தேசத்­தினைச் சேர்ந்த காணி உரி­மை­யா­ளர்கள் தமது நியா­யங்­க­ளையும் ஆதா­ரங்­க­ளையும் முன்­வைத்­தனர்.

இப்­பி­ர­தே­சத்தில் நீண்ட கால­மாக காணி உரிமைப் பத்­திரம் வைத்­தி­ருந்த காணி உரி­மை­யா­ளர்கள் மற்றும் அரச அதி­கா­ரிகள் போன்­றோரின் கோரிக்­கை­க­ளையும் கருத்­துக்­க­ளையும் கேட்­ட­றிந்து கொண்ட கிழக்கு மாகாண காணி ஆணை­யாளர், சம்­பந்­தப்­பட்ட தரப்­பி­ன­ருடன் மிக விரைவில் சமா­தா­ன­மான முறையில் கலந்­து­ரை­யாடி தீர்­வினைப் பெற்றுத் தரு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­ட­வுள்­ள­தா­கவும் அது­வ­ரையில் இப்­பி­ர­தே­சத்தில் நிர்­மா­ணப்­பணிகள் போன்ற நட­வ­டி­க்கை­களில் ஈடு­ப­டா­ம­லிக்­கு­மாறும் வேண்­டிக்­கொண்டார்.

குறித்த மாணிக்­க­மடு மாயக்­கல்லி மலை சுற்­று­வட்­டா­ரத்­தி­னையும் இக்­கு­ழு­வினர் பார்­வை­யிட்­ட­துடன் இதனை அண்­டிய பகு­தியில் நீண்டகால­மாக விவ­சாயச் செய்­கை­யினை மேற்­கொண்டு வந்த சம்மாந்துறைப் பிரதேச விவசாயக் காணியினையும் இக்குழுவினர் பார்வையிட்டனர்.

இதற்கான தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளை தாம் மேற்கொள்வதாக மாகாண காணி ஆணையாளர் தெரிவித்தார்.

Comments