பொலிஸ் பொறுப்பதிகாரி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!


மருதானை பொலிஸ் நிலையத்தின் பிரஜைகள் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனது உத்தியோகபூர்வ அறையில் தூக்கில் தொங்கிய நிலையிலைலேயே அவர் மீட்கப்பட்டுள்ளார்.

பிரேத பரிசோதனை இன்றைய தினம் மேற்கொள்ளப்படவுள்ளது.

பொலிஸ் திணைக்களத்தினால் இது தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Comments