வில்பத்து வன பிரகடனம் வாபஸ் பெறப்படுமா?


ஜனாதிபதி செயலகத்தில் இன்று அவசர கூட்டம்
வில்­பத்து சர­ணா­ல­யத்­துக்கு வடக்கே அமைந்­துள்ள நான்கு பாது­காக்­கப்­பட்ட வனங்­களை பிர­க­ட­னப்­ப­டுத்தும் வர்த்­த­மானி அறி­வித்­தலை சிவில் சமூக அமைப்­புகள் இரத்துச் செய்­யு­மாறு கோரி­ய­தை­ய­டுத்தும், அப்­பி­ர­தேச மக்கள் போராட்­டங்­களை நடத்­தி­ய­தை­ய­டுத்தும் ஜனா­தி­பதி இன்று சிவில் சமூக பிர­தி­நி­தி­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­ட­லொன்றை ஏற்­பாடு செய்­துள்ளார்.

இதற்­கென ஜனா­தி­ப­தியின் செய­லாளர் தலை­மையில் கமிட்­டி­யொன்­றி­னையும் நிய­மித்­துள்­ள­துடன் கலந்­து­ரை­யா­டலில் மன்னார் மாவட்ட அர­சாங்க அதி­பரும் கலந்து கொள்­ள­வுள்ளார்.

நேற்று ஜனா­தி­பதி, கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் மற்றும் தேசிய ஐக்கிய முன்­ன­ணியின்   தலைவர் அசாத் சாலி ஆகி­யோ­ருடன் இவ்­வி­வ­காரம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டினார்.

ஜனா­தி­பதி இன்று சிவில் சமூகப் பிர­தி­நி­தி­க­ளுடன் கலந்­து­ரை­யா­ட­லொன்­றுக்கு ஏற்­பாடு செய்­துள்­ள­தை­ய­டுத்து கொழும்பில் இன்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த ஆர்ப்­பாட்டப் பேரணி நடத்­தப்­ப­ட­மாட்­டா­தெ­னவும் ஜனா­தி­ப­தி­யிடம் நேரில் கைய­ளிக்கத் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்த மகஜர் கைய­ளிக்­கப்­ப­ட­மாட்­டா­தெ­னவும் நேற்று மாலை கொழும்பு ரமதா ஹோட்­டலில் நடை­பெற்ற சிவில் சமூக அமைப்­பு­களின் ஊடக மாநாட்டில் தெரி­விக்­கப்­பட்­டது.

இன்று நடை­பெ­ற­வுள்ள கலந்­து­ரை­யா­டலில் சுமு­க­மான தீர்வு எட்­டப்­ப­டா­விட்டால் நாட­ளா­விய ரீதியில் போராட்­டங்கள் ஏற்­பாடு செய்­யப்­ப­டு­மெ­னவும் தெரி­விக்­கப்­பட்­டது.

ஊடக மாநாட்டில் தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அசாத் சாலி கருத்து தெரி­விக்­கையில், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நான்கு பிர­தே­சங்­களை உள்­ள­டக்கி வன பிர­தே­ச­மாக வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யிட்­ட­மையை அறிந்து நாம் அதிர்ச்­சி­ய­டைந்தோம். மக்­க­ளுக்கு கால அவ­காசம் வழங்­காமல் இந்த அறி­வித்தல் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

ஜனா­தி­ப­தி­யுடன் இவ்­வி­காரம் தொடர்பில் நானும் அமைச்சர் ரிஷாதும் கலந்­து­ரை­யா­டினோம். இந்தப் பிர­க­ட­னத்தில் எந்­தவோர் பள்­ளி­வா­சலும் பாட­சா­லையும் மக்கள் வாழ்­வி­டங்­களோ உள்­வாங்­கப்­ப­ட­மாட்­டாது எனத் தெரி­வித்தார்.

இது தொடர்­பாக ஜனா­தி­பதி செய­லகம் அறிக்­கை­யொன்­றி­னையும் வெளி­யிட்­டுள்­ளது.

நாளை (இன்று) இவ்­வி­வ­காரம் தொடர்பில் எமக்கு சாத­க­மான தீர்­வுகள் கிடைக்­கா­விட்டால் நாம் போராட்­டங்­களை நடத்­துவோம். ஜனா­தி­பதி இந்த வன பிர­தே­சங்கள் தொடர்­பாக ஆணைக்­கு­ழு­வொன்­றினை நிய­மித்து விசா­ரணை செய்த பின்பே தீர்­மா­னங்கள் மேற்­கொள்ள வேண்டும்.

ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் இவ்­வி­கா­ரத்­துக்கு சுமு­க­மான தீர்வு பெற்றுத் தரு­வ­தாகக் கூறி­யுள்­ளார்கள். ஜனா­தி­ப­தியின் செய­லாளர் போராட்­டங்­களை நிறுத்­தும்­ப­டியும் சுமுகத் தீர்­வு­களை கலந்­து­ரை­யாடல் மூலம் எட்­டலாம் எனவும் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

ஜனா­தி­பதி நாமல்­கம குடி­யேற்ற வன பிர­தே­சத்­துக்கு வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டாது தவிர்த்து முஸ்­லிம்கள் பாரம்­ப­ரி­ய­மாக வாழ்ந்து வந்த பிர­தே­சங்­க­ளையே வன பிர­தே­ச­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யுள்ளார்.

முஸ்­லிம்கள் தமக்குப் பாது­காப்பும் உரி­மை­களும் கிடைக்கும் என்­ப­தற்­கா­கவே ஜனா­தி­ப­தியைத் தெரிவு செய்­தார்கள் என்றார்.

புதிய இட­து­சாரி முன்­ன­ணியின் தலைவர் விக்­கி­ர­ம­பாகு கரு­ணா­ரத்ன பேசு­கையில்;
பாது­காக்­கப்­பட்ட வன பிர­தேச பிர­க­ட­னத்தை அறி­விப்புச் செய்­வ­தற்கு இன­வா­தி­களே ஜனா­தி­ப­தியை வழி நடத்­தி­யி­ருக்­கி­றார்கள். முன்பு பௌத்த இன­வாதக் குழுக்கள் வில்­பத்து வன பிர­தே­சத்தை முஸ்­லிம்கள் ஆக்­கி­ர­மித்­துள்­ள­தாக ஜனா­தி­ப­தி­யிடம் முறை­யிட்­ட­போது முஸ்­லிம்கள் ஒரு அங்­குலம் கூட ஆக்­கி­ர­மிப்பு செய்­ய­வில்லை என உறு­தி­யாகக் கூறிய ஜனா­தி­பதி இன்று பிர­க­டனம் ஒன்றில் கைச்­சாத்­திட்­டுள்­ளமை வேடிக்­கை­யாக இருக்­கி­றது. இவ்­வி­ட­யத்தில் ஜனா­தி­பதி தவ­றி­ழைத்­தி­ருக்­கிறார். 

விடு­தலைப் புலி­க­ளினால் விரட்­டப்­பட்ட முஸ்­லிம்கள் மீண்டும் பலாத்­கா­ர­மாக குடி­யே­ற­வில்லை. அர­சாங்க அதி­கா­ரிகள் அப்­பி­ர­தே­சத்தில் சூழல் மாசு­ப­டுமா, வன பிர­தேசம் அழி­வுக்­குள்­ளா­குமா என்று ஆராய்ந்து பார்த்­ததன் பின்பே மக்­களை மீள் குடி­யேற்­றி­யி­ருக்­கி­றார்கள்.

ஜனா­தி­பதி, தான் எடுக்கும் எந்த தீர்­மா­னத்­தையும் பிர­த­ம­ருடன் கலந்­தா­லோ­சித்து பின்பு அமைச்­ச­ர­வையில் ஆலோ­சித்தே மேற்­கொள்­வ­தாக ஆரம்­பத்தில் கூறி­யி­ருந்தார். அப்­ப­டி­யென்றால் வனப்­பி­ர­தேச பிர­க­டனம் தொடர்பில் பிர­த­மரும், அமைச்­ச­ர­வை­யிலும் கலந்­து­ரை­யா­டி­னாரா என்­பதை அவர் நாட்டு மக்­க­ளுக்கு தெரி­விக்க வேண்டும்.

இவ்­வி­வ­கா­ரத்தில் ஜன­நா­யகம், நீதி நிலை நிறுத்­தப்­பட வேண்டும். இல்­லையேல் அனை­வரும் ஒன்­று­பட்டு இதற்கு எதி­ராக போரா­டு­வ­துடன் இவ்­வி­வ­கா­ரத்தை சர்­வ­தே­சத்­துக்கும் கொண்டு செல்ல வேண்டும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்­ஸிலின் தலைவர் என்.எம்.அமீன் உரை­யாற்­று­கையில்;
2012 ஆம் ஆண்டு வெளி­யி­டப்­பட்ட வர்த்­த­மானி அறி­வித்­தலில் 15 ஆயிரம் ஹெக்­டே­ய­ருக்கு 2017 ஆம் ஆண்டு 40 ஆயிரம் ஹெக்­டே­யரும் வனப்­பி­ர­தே­ச­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இது மக்­களின் பூர்­வீக வாழ்­வி­டங்­களை உள்­ள­டக்­கிய பிரதேசங்களாகும். இது தொடர்பில் ஜனாதிபதி மீள் பரிசீலனை செய்ய வேண்டும். 2012, 2017 ஆம் ஆண்டுகளின் வர்த்தமானி அறிவித்தல் இரத்துச்செய்யப்பட வேண்டும். இப்பிரதேசம் மீள் குடியேற்றம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என்றார். 

நிகழ்வில் தேசிய சூரா சபை, வை.எம்.எம்.ஏ, மலைநாட்டு சிவில் சமூகம், ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில், ஆர்.ஆர்.ரி அமைப்பு உட்பட பல அமைப்புகளின் பிரதிநிதிகள்  கலந்து கொண்டனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் உப தலைவர் ஹில்மி அஹமட், ஆர்.ஆர்.ரி அமைப்பின் செயலாளர் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், ஸ்ரீமஸ்ரீ ஹப்பு ஆரச்சி ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.   

Comments