கதுருவெலை நகரில் டெங்கு பரவலை கட்டுப்படுத்த நூற்றுக்கும் அதிகமான பொலிசார் மற்றும் ஊர் காவல் படையினருடன்
Ariff s naleem
கதுருவெலை நகரில் டெங்கு பரவலை கட்டுப்படுத்த நூற்றுக்கும் அதிகமான பொலிசார் மற்றும் ஊர் காவல் படையினருடன் இணைந்து பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று காலை முதல் களத்தில்.
இன்று காலை முதல் பொது சுகாதார பரிசோதகர்களுடன் பொலன்னறுவை பொலிசாரும் ஊர்காவல் படையினரும் இணைந்து கதுருவெலை முஸ்லிம் கொலனி வடக்கு/தெற்கில் உள்ள ஒவ்வொரு வீடுவீடாக சென்று பரிசோதனை மேற்கொண்டு.குடம்பிகள் கண்டறியப்படின் அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க ஏற்பாடு.டெங்கு நோயினை பரப்பும் நுளம்பு குடம்பிகள் காணப்படின் 25000/வரை தண்டப்பணம் செலுத்தவேண்டி வரும் என தமன்கடுவை பிரதேசத்துக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் அபுல் ஹசன் தெரிவித்தார்.


Comments
Post a Comment