காத்­தான்­குடி: பொது இடங்­களில் மார்க்கப் பிர­சா­ரங்­க­ளுக்கு தடை


அமை­திக்கும் சமா­தா­னத்­திற்கும் குந்­தகம் ஏற்­ப­டுத்தும் வகையில் காத்­தான்­குடி பிர­தே­சத்தில் பொது இடங்­களில் மற்றும் வீதி­யோ­ரங்­களில் மார்க்­கப்­ பி­ர­சாரக் கூட்­டங்­களை நடத்­து­வ­தற்கு தடை விதிப்­ப­தென தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

காத்­தான்­கு­டியில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இரண்டு குழுக்­க­ளுக்­கி­டையில் நடை­பெற்ற மோதல் சம்­ப­வத்­தை­ய­டுத்து அது தொடர்­பாக ஆராயும் விஷேட மாநாடு ஒன்று நேற்று புதன்­கி­ழமை  காத்­தான்­குடி பிர­தேச செய­லக மண்­ட­பத்தில் நடை­பெற்­றது.

 காத்­தான்­குடி பிர­தேச செய­லாளர் எஸ்.எச்.முஸம்­மிலின் தலை­மையில் நடை­பெற்ற இந்த மாநாட்டில் காத்­தான்­குடி பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி ஏ.பி.வெத­கெ­தர மற்றும் காத்­தான்­குடி நகர சபை செய­லாளர் எஸ்.எம்.ஸபி மற்றும் உதவி பிர­தேச செய­லாளர் ஏ.சி.அகமட் அப்கர் மற்றும் காத்­தான்­குடி ஜம்இய்­யத்துல் உலமா சபை பிர­தி­நி­திகள், காத்­தான்­குடி பள்­ளி­வாசல்­களின் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ளன பிரதிநிதிகள், காத்­தான்­குடி வர்த்­தக சங்க பிரதிநிதிகள், கிராம உத்­தி­யோ­கத்­தர்கள் கலந்து கொண்­டனர்.

 இதன் போது காத்­தான்­கு­டியில் கடந்த (10) வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று இரண்டு குழுக்­க­ளுக்­கி­டையில் நடை­பெற்ற மோதல் சம்­பவம் தொடர்­பாக ஆரா­யப்­பட்­டன.

 இந்த மாநாட்டின் இறு­தியில் இரண்டு தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­டன.

அதில் காத்­தான்­கு­டியில் அமை­திக்கும் சம­ாதா­னத்­திற்கும் குந்­தகம் ஏற்­ப­டுத்தும் வகையில் காத்­தான்­குடி பிர­தே­ச­ததில் பொது இடங்­களில் மற்றும் வீதி­யோ­ரங்­களில் மார்க்­கப்­பி­ர­சாரக் கூட்­டங்­களை நடாத்­து­வ­தற்கு தடை விதிப்­ப­தெ­னவும் மற்றும் அதான் சொல்­லுதல், பொது அறி­வித்­தல்கள் வாசித்தல், இரு பெரு­நாட்கள் ஆகியவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து விட­யங்கள் மற்றும் வைபவங்­களின் போதும் வெளி ஒலிபெருக்கி பாவிப்­பதை முற்­றாக தடை செய்தல் என இதன் போது ஏகமன­தாக தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது.

கடந்த (10)  வெள்­ளிக்­கி­ழமை காத்­தான்­கு­டியில் இடம்பெற்ற இந்த சம்­ப­வத்தில் காத்­தான்­கு­டி­யி­லுள்ள இரண்டு சிறிய குழுக்­களே சம்­பந்­தப்­பட்­டுள்­ளன.

இந்த இரண்டு சிறிய குழுக்­களின் மோதல் சம்­ப­வத்­தினால் காத்­தான்­கு­டியை வெளி­ப்பி­ர­தேசங்­க­ளிலும் மற்றும் சர்­வ­தேச ரீதி­யா­கவும் கேவ­லப்­ப­டுத்­து­வ­தற்கு சிலர் முற்சி செய்­கின்­றனர்.

இந்த சம்­ப­வங்­க­ளுக்கும் காத்­தான்­குடி மக்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது எனவும் இதில் காத்தான்குடியையும் காத்தான்குடியிலுள்ள பெரும்பான்மையான மக்களையும் கேவலப்படுத்தி காட்ட வேண்டாமெனவும் இதில் கலந்து கொண்ட பிரமுகர்களினால் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

Comments