‘பால்’ குடித்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் விமல்
கடந்த எட்டு நாளாக உண்ணாவிரதமிருந்து வந்த விமல் வீரவன்ச இன்று அவரை நலம் விசாரிக்கச் சென்ற பௌத்த துறவிகளின் வேண்டுகோளின் பின்னணியில் ‘பால்’ அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டுள்ளார்.
அரச வாகன துஷ்பிரயோக விவகாரத்தில் கைதாகியுள்ள அவருக்கு எதிர்வரும் ஏப்ரல் 3ம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
அவரது பிணை மனு உயர் நீதிமன்றிலும் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிணை கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்த விமல் நேற்றைய தினம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தர்.
இந்நிலையிலேயே இன்று உண்ணாரவிரதத்தை முடித்துக் கொண்டுள்ளார்.
நாற்பதுக்கும் அதிகமான வாகனங்களை துஷ்பிரயோகம் செய்து 90 மில்லியன் ரூபா இழப்பை ஏற்படுத்தியிருந்ததாக அவர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளமையும் இதே குற்றச்சாட்டில் கைதான அவரது சகோதரரும் கட்சிப் பேச்சாளர் முசம்மிலும் குழந்தைகளின் நலனுக்காக விசேட காரணங்கள் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமையும் நினைவூட்டத்தக்கது.


Comments
Post a Comment