தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள் : பஷீரிடம் வாக்குமூலம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூதிடம் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு நேற்று விஷேட விசாரணை ஒன்றினை முன்னெடுத்தது.
முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் செய்த முறைப்பாடுகள் மீதான விசாரணைகள் தொடர்பிலேயே நேற்று சுமார் மூன்று மணிநேரம் வரையில் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டன. தெமட்டகொடையில் உள்ள கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டு அங்கு வைத்தே பஷீர் சேகுதாவூதிடம் இவ்விசாரணைகள் நடத்தப்பட்டன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருஸ்ஸலாம் தொடர்பில் ‘தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள்’ எனும் நூலொன்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாருஸ்ஸலாம் மீட்பு முன்னணி எனும் அமைப்பினால் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நூலிற்கு எதிராக அக்கட்சியின் (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்) தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மான் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடொன்றை செய்திருந்தார். இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு மாளிகாகந்தை பிரதம நீதிவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ளது.
'தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள்' புத்தகம் சமூகத்தில் பொய்யான தகவல்களைப் பரப்பும் நோக்கிலும் அரசியல் தேவை கருதியும் ஒருசிலரால் அச்சிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்து இம்முறைப்பாடுகள் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதன் பிரகாரம், விசாரணைகளை மேற்கொண்ட கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர், மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
கடந்த தவணை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு விடயங்கள் தொடர்பில் வேறொரு நீதிமன்றத்தில் விசாரணை இடம்பெற்று வருவதாகவும், அதில் முக்கிய சில அரசியல்வாதிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு நீதிமன்றில் சுட்டிக்காட்டியிருந்தது.
இந்நிலையில் குறித்த தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட உண்மைகள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்க நீதிமன்றம் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையிலேயே நேற்று இது தொடர்பிலான விசாரணைகளுக்காக முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
தனது சட்டத்தரணி ஊடாக நேற்று அங்கு நண்பகல் வேளையில் பிரசன்னமான அவரிடம் சுமார் மூன்று மணிநேரம் வரை விசாரணை செய்யப்பட்டு வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டது.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிசாந்த சொய்ஸா, உதவி பொலிஸ் அத்தியட்சகர் சந்திரதிலக மற்றும் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நெவில் டி சில்வா ஆகியோரின் கட்டுப்பாட்டில் இந்த விசாரணைகள் இடம்பெற்றன.
முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் செய்த முறைப்பாடுகள் மீதான விசாரணைகள் தொடர்பிலேயே நேற்று சுமார் மூன்று மணிநேரம் வரையில் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டன. தெமட்டகொடையில் உள்ள கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டு அங்கு வைத்தே பஷீர் சேகுதாவூதிடம் இவ்விசாரணைகள் நடத்தப்பட்டன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருஸ்ஸலாம் தொடர்பில் ‘தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள்’ எனும் நூலொன்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாருஸ்ஸலாம் மீட்பு முன்னணி எனும் அமைப்பினால் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நூலிற்கு எதிராக அக்கட்சியின் (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்) தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மான் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடொன்றை செய்திருந்தார். இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு மாளிகாகந்தை பிரதம நீதிவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ளது.
'தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள்' புத்தகம் சமூகத்தில் பொய்யான தகவல்களைப் பரப்பும் நோக்கிலும் அரசியல் தேவை கருதியும் ஒருசிலரால் அச்சிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்து இம்முறைப்பாடுகள் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதன் பிரகாரம், விசாரணைகளை மேற்கொண்ட கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர், மாளிகாகந்தை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
கடந்த தவணை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு விடயங்கள் தொடர்பில் வேறொரு நீதிமன்றத்தில் விசாரணை இடம்பெற்று வருவதாகவும், அதில் முக்கிய சில அரசியல்வாதிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு நீதிமன்றில் சுட்டிக்காட்டியிருந்தது.
இந்நிலையில் குறித்த தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட உண்மைகள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்க நீதிமன்றம் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையிலேயே நேற்று இது தொடர்பிலான விசாரணைகளுக்காக முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
தனது சட்டத்தரணி ஊடாக நேற்று அங்கு நண்பகல் வேளையில் பிரசன்னமான அவரிடம் சுமார் மூன்று மணிநேரம் வரை விசாரணை செய்யப்பட்டு வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டது.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிசாந்த சொய்ஸா, உதவி பொலிஸ் அத்தியட்சகர் சந்திரதிலக மற்றும் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நெவில் டி சில்வா ஆகியோரின் கட்டுப்பாட்டில் இந்த விசாரணைகள் இடம்பெற்றன.


Comments
Post a Comment