அரசாங்கம் முன்னெடுக்கும் கடல்நீரை குடிநீராக்கும் புதிய செயற்திட்டம் !

கடல்நீரை குடிநீராக்கும் புதிய செயற்திட்டம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா இதனை தெரிவித்துள்ளார்.

குழாய் நீர் நிர்மாணம் தொடர்பில் எதிர்காலத்தில் கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மாஒயாவில் மணல் அகழும் செயற்பாடுகளை மூன்று வருடத்துக்கு நிறுத்துவதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

Comments