புதிய பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் பதவிப்பிரமாணம்


சிரேஷ்ட நீதி­ய­ர­சர்­ பிரி­யசாத் டெப், பிர­தம நீதி­ய­ரசராக இன்று காலை ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

இலங்­கையின் 44 ஆவது பிர­தம நீதி­ய­ர­ச­ராக கே.ஸ்ரீபவன் கடந்த 2015 ஜன­வரி 30 ஆம் திகதி தனது கடமையைப் பெறுப்பேற்றார். பிர­தம நீதி­ய­ரசர் கே.ஸ்ரீபவன் கடந்த 28 ஆம் திக­தி­யுடன் ஓய்­வு­பெ­ற்ற நிலையிலேயே பிரியசாத் டெப் 45 ஆவது நீதியரசாராக இன்று பதவியேற்றுள்ளார்.

ஜனா­தி­ப­தி­யினால்  அர­சி­ய­ல­மைப்பு சபையின் நிறை­வேற்றுக் குழுவுக்கு இரு நீதி­ய­ர­சர்­களின் பெயர்கள் பரிந்­து­ரைக்­கப்பட்டு அதில் ஒரு­வரை நீதி­ய­ர­ச­ராக தெரிவு செய்­யு­மாறு கோரப்பட்­டி­ருந்­தது. சிரேஷ்ட நீதி­ய­ர­சர்­க­ளான பிரி­யசாத் டெப் மற்றும் கே.டி. சித்­ர­சிறி ஆகி­யோரின் பெயர்­களே நிறை­வேற்­றுக்குக் குழு­வுக்கு பரிந்­துரை செய்­யப்பட்­டன.


இந் நிலையில் புதிய பிர­தம நீதி­ய­ர­சரை தெரிவு செய்­வ­தற்­கான அர­சி­ய­ல­மைப்பு பேர­வையின் நிறை­வேற்றுக் குழு கூடி­, பிரதம நீதியரசராக பிரியசாத் டெப்பை தெரிவு செய்வதென தீர்மானிக்கப்பட்டு ஜனாதிபதிக்கு சிபாரிசு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இன்று 45 ஆவது பிரதம நீதியரசராக பதவியேற்றுள்ளார்.

இதேவேளை, தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் புதிய பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் பதவியேற்றுள்ளதாக குறிப்பிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments