டெங்கு காய்ச்சலினால் தோப்பூரில் ஒருவர் பலி
திருமலையில் பலியானோர் தொகை 16 ஆக அதிகரிப்பு
தோப்பூர், அல்லை நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் டெங்கு காய்ச் சலினால் பாதிக்கப்பட்டு நேற்றையதினம் மரணமானார்.
திருமணமாகி ஒரு மாதமேயான 25 வயதான முகம்மது நுபைர் என்பவரே இவ்வாறு காலமானவராவார்.
இவருடன் கிண்ணியாவில் 12 பேரும் திருகோணமலையில் ஒருவரும், குச்சவெளியில் ஒருவருமாக திருமலை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்தவர்களின் தொகை 15 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை நேற்றுமுன்தினம், ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை பள்ளத் தோட்டத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப்பெண் (29) டெங்கு நோயின் காரணமாக சிகிச்சை பயனின்றி திருகோணமலை பொது வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் மரணமானார்.
கர்ப்பப்பைக்கு வெளியே கர்ப்பம் தரித்திருந்த குறித்த பெண்னிற்கு டெங்கு நோயும் தாக்கியிருந்ததன் காரணமாக சிகிச்சை மிகவும் கடினமாக இருந்தாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கடந்த வியாழக்கிழமை, திருகோணமலை, சண்முக வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 6 வயது சிறுமி ஒருவர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
திருகோணமலை, உவர்மலை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட குறித்த சிறுமி அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் திருகோணமலையில் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்தோரின் தொகை 16 ஆக அதிகரித்துள்ளது.


Comments
Post a Comment