பிறர் உங்களை மதிக்க வில்லையே என்ற வருத்தமா?


உங்களை பிறர் மதிக்க வில்லை எனில் , அவர்களுக்கு உங்களிடம் காரியம் இல்லை என்று தான் அர்த்தம். எவரும் இவ்வுலகில் உங்களை மதிப்பதற்காக பிறக்கவில்லை.
தான் வாழ என்ன கிடைக்கும் என்பதற்காகவே, பிறரிடம் அனைத்து உயிரினமும் தொடர்பில் உள்ளது.

காரியம் இல்லா இடத்தில் தொடர்பு இல்லை. தொடர்பு இல்லா இடத்தில் எங்கிருந்து மதிப்பு கிடைக்கும்? உங்களிடம் அவர் ஏற்படுத்தும் தொடர்பினால் அவருக்கு எந்த பயனும் இல்லை.

அதனால், பிறர் உங்களுக்கு கொடுக்கும் மதிப்பிர்க்காக ஏங்காதீர்கள். அவர்களும் உங்களைப் போன்ற ஒரு மனிதர் தான். உங்களுக்கு என்ன சரியாக வேண்டும் என பாருங்கள். அந்த பயன் வட்டத்தில் உள்ளவர்கள் தானாக உங்களுக்கு மதிப்பளிப்பார்கள்.

Comments