இன்னும் என்னை விசாரிக்காதது ஏன்?''
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பதவியிலிருந்து என்னை இடை நிறுத்தம் செய்து சில மாதங்கள் கடந்துவிட்டபோதும் என் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படவில்லை. அது ஏனென்று தெரியவில்லை.
என் மீது தவறுகள் இருந்தால் விசாரணை நடத்தியிருக்க வேண்டும்' என முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பதவியிலிருந்து இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத்திடம் அவரது அரசியல் எதிர்காலம் தொடர்பில் வினவியபோதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்;
'எதிர்காலத்தில் நான் பிரநிதித்துவ அரசியல் செய்வதில்லை என்று தீர்மானித்திருக்கிறேன். தேர்தல்களில் போட்டியிடாது கருத்து உருவாக்கியாக்கியாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளேன்.
எனது கடந்த கால அரசியல் வாழ்க்கையில் நான் விட்ட பிழைகள் ஊடாகவும், நான் செய்த சரியானவைகள் ஊடாகவும் நான் பெற்ற அனுபவங்களை ஏனையோருடன் பகிர்ந்து கொள்ளத் தீர்மானித்துள்ளேன்.
புதிய அரசியல் மாற்றங்களுக்காக முஸ்லிம் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளேன். கட்சிகளின் தலைவர்களுடன் எனது அனுபவங்களைப் பகிர்ந்து புதிய கருத்து உருவாக்கியாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
தற்போதைக்கு முஸ்லிம் அரசியல் கட்சிகள், அமைப்புகளுடனே கலந்துரையாடல்களை செய்து வருகிறேன். தேவையேற்படும் போது ஏனைய பெரும்பான்மைக் கட்சிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வேன்.
என் மீது விசாரணை நடத்துவதற்கு எப்போது அழைப்பு விடுக்கப்படும் எனத் தெரியவில்லை. என்றாலும் விசாரணையை எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன்' என்றார்.


Comments
Post a Comment