காத்­தான்­குடி மோதல் தொடர்பில் சட்­டத்தை நிலை­நாட்ட வேண்டும்


பொலிஸ் மா அதி­ப­ருக்கு முஸ்லிம் கவுன்சில் கடிதம்
காத்­தான்­குடி பிர­தே­சத்தில் இரு குழுக்­க­ளுக்­கி­டையே இடம்­பெற்ற மோதல் சம்­பவம் தொடர்பில் உரிய விசா­ர­ணை­களை நடத்தி சட்­டத்தை நிலை­நாட்­டு­மாறு முஸ்லிம் கவுன்சில், பொலிஸ் மா அதி­பரைக் கோரி­யுள்­ளது.

இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ர­வுக்கு முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன் நேற்று அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, 

காத்­தான்­கு­டியில் தீவிரப் போக்­கு­டைய இரு சிறு குழுக்­க­ளுக்­கி­டையில் ஏற்­பட்ட மோதல் கார­ண­மாக இரு தரப்­பிலும் பலர் காய­ம­டைந்த சம்­பவம் தொடர்பில் இன்று ஊட­கங்­களில் தொட­ராக முக்­கி­யத்­து­வ­ம­ளிக்­கப்­பட்டு செய்­திகள் வெளி­யி­டப்­ப­டு­கின்­றன. 

எனினும் இந்த துர­திஷ்­ட­வ­ச­மான சம்­ப­வ­மா­னது இலங்­கையில் வாழு­கின்ற முஸ்­லிம்­க­ளுக்­கி­டை­யி­லான மோத­லா­கவும் காத்­தான்­குடி மக்­க­ளி­டை­யே­யான மோத­லா­கவும் சித்­தி­ரிக்­கப்­ப­டு­கி­றது.

முஸ்லிம் கவுன்­சி­ல் ­ஒரு போதும் இந்த வன்­முறைச் சம்­ப­வத்தை ஏற்றுக் கொள்­ள­வில்லை.

அத்­துடன் இந்த சம்­பவம் தொடர்பில் பக்­கச்­சார்­பற்ற நீதி­யான விசா­ரணை ஒன்றை நடத்­து­மாறும் இந்த சம்­ப­வத்­திற்குக் கார­ண­மா­க­வி­ருந்­த­வர்­களை கண்டறிந்து நீதியின் முன் நிறுத்துமாறும் உங்களை வேண்டிக் கொள்கிறது என அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments