நிந்தவூரில் அமைச்சர் ஹக்கீமுக்கு எதிர்ப்புத் தெரிவித்து டயர் எரிப்பு: மக்களிடம் பரபரப்பு (photo)

(ihzana fareed)

நிந்தவூரில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சற்று முன்னர் டயர் எரிக்கப்பட்டள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று மாலை நிந்தவூருக்கு அமைச்சர் ஹக்கீம் வரவுள்ள நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அமைச்சர் ஹக்கீமின் கூட்டம் நடைபெறவுள்ள இடத்திற்கு அருகில் உள்ள வீதியில் டயர் எரிக்கப்பட்டுள்ளது.

நிந்தவூர் பொதுமக்கள ரவூப் ஹக்கீமுக்கு தமது எதிர்ப்பை காட்டுமுகமாக இந்த எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

டயர் எரிக்கப்பட்டதனால் நிந்தவூர் பிரதேசத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக அறிய வருகின்றது.


Comments