நிறுத்தாமல் சென்ற கார் மடக்கிப்பிடிப்பு: இருவர் கைது



திருகோணமலையிலிருந்து அனுராதபுரம் சென்ற கரொன்றினை பொலிஸார் இரண்டு இடங்களில் நிறுத்தியும் நிறுத்தாமல் பயணித்துக்கொண்டிருந்த போது ரொட்டவெவ பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் வீதியை மறித்து தடுப்புக்கடவையினை இட்டு வாகனத்தை நிறுத்தியதாக மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இக்காரில் பயணித்த இரண்டு பேர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இருந்தபோதிலும் தடுப்புக்கடவையினையும் மோதுன்டு செல்ல முற்பட்ட போது கட்டப்பட்ட கானுடன் மோதியதாகவும் காரை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

Comments