பலவந்தமாக பறிக்கப்படும் முஸ்லிம்களின் பூர்வீகம்
-ARA.Fareel
புத்த பெருமான் அகிம்சையையும், கருணையையுமே போதித்தார். அடாவடித்தனங்களையும், பலாத்காரங்களையும் எதிர்த்தார். கௌதம புத்தர் இன்று உயிருடன் இருந்திருந்தால் பௌத்த நாடான இலங்கையில், அவரது சீடர்களான பௌத்த தேரர்களின் நிலை கண்டு நிச்சயம் கண்கலங்கியிருப்பார்.
''இது பௌத்த நாடு. இந்நாடு எமக்குத்தான் சொந்தம். எமது நாட்டினை முஸ்லிம்களும், தமிழர்களும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். மாயக்கல்லி மலையடிவார காணியை போலி உறுதிகளுடன் முஸ்லிம்கள் அபகரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் காணிகளை விட்டுச் செல்ல வேண்டும்.''
கடந்த செவ்வாய்க்கிழமை அம்பாறை, மாவட்ட செயலகத்தில் அம்பாறை மாவட்ட அரச அதிபர் துசித்த வணிகசிங்க தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரும் கலந்து கொண்டிருந்தார். அங்கு அவர் தெரிவித்த கருத்துகளில் சிலவே இவை.
இறக்காமம், மாணிக்கமடு மாயக்கல்லி மலையடிவாரத்தின் காணியை சுவீகரிப்பதற்காக ஏற்பாடு செய்திருந்த இந்த உயர்மட்டக் கூட்டத்தில் மாகாண காணி ஆணையாளர் டீ.டீ.அனுர தர்மதாச, மாவட்ட உதவி காணி ஆணையாளர் டீ.டீ.எஸ்.தக் ஷிலா குணரத்ன, இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர், மாவட்ட நில அளவைத் திணைக்கள அதிகாரிகள், பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர், தீகவாபி மாணிக்கமடு, பரிவார சைத்திய ரஜமகாவிகாரையின் மகாநாயக்க அம்பகஹபிட்டியே சீலரத்ன தேரர். சிங்கள ராவய மற்றும் சிங்ஹலே அமைப்புகளின் தேரர்கள் கலந்து கொண்டனர்.
குறிப்பிட்ட மாநாட்டில் முஸ்லிம் தரப்பினர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாயக்கல்லி மலையடிவார காணிகளின் உரிமையாளர்கள் மற்றும் பிரதேச முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்தும் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாணத்திற்கென ஒரு முதலமைச்சர் பதவியில் இருக்கும் போது அவரிடம் இவ்விவகாரம் கலந்துரையாடப்படாமல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டமை பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
மாயக்கல்லி மலை
அம்பாறை மாவட்டத்தில் இறக்காமத்திலே முஸ்லிம்கள் ஆரம்பத்தில் குடியேறியதாக வரலாறு தெரிவிக்கிறது. இறக்காமம் வரிபத்தான்சேனை சந்தியில் இருந்து கிழக்கே வயல்கள் மற்றும் சிறு மலைகளினூடாக பிரதான பாதையொன்று ஊடறுத்துச் செல்கிறது.
வரிப்பத்தான் சேனை சந்தியில் இருந்து குடுவில் கிராமம் செல்லும் வரை வலது பக்கமாக நல்ல தண்ணி எனும் இடத்தில் முஸ்லிம்களும், மாணிக்கமடு எனும் இடத்தில் இந்துக்களும் வாழ்கிறார்கள். இப்பிரதேசங்கள் எவற்றிலும் பௌத்தரின் வாழ்விடங்கள் இல்லை.
இங்கே இருக்கும் மேட்டு நிலங்கள், வயல் காணிகள் அனைத்தும் முஸ்லிம்களுக்கு அரசினால் சட்டபூர்வமாக வழங்கப்பட்ட இடங்களாகும். இக்காணிகளுக்கு 1980 களில் காணி உத்தரவு பத்திரங்களும் 1990 ஆம் ஆண்டுகளில் LDO காணி அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த காணிகள் தொடர்ச்சியாக மழை பெய்தால் வெள்ளத்தில் மூழ்கக் கூடியனவாகும். இங்கு வீதியின் இடது பக்கமாக சில குன்றுகள் காணப்படுகின்றன.
குன்றுகளின் அடிவாரத்தில் நெற்காணிகள் காணப்படுகின்றன. இக்காணிகளுக்கும் LDO உத்தரவு பத்திரங்கள் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இக்குன்றுகளில் சில சிதைவடைந்து படிக்கட்டுகள், நீர்த்தடாகம் போன்ற அமைப்புகள் காணப்படுகின்றன. இவை பண்டைய ராஜதானிகளின் சுவடுகளாக இருக்கலாம் என்று தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அம்பாறை மாவட்டச் செயலக கூட்டத்தில் தீர்மானம்
அம்பாறை மாவட்டச் செயலகத்தில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாயக்கல்லி மலையடிவாரத்தினுள்ள முஸ்லிம்கள் இருவருக்குச் சொந்தமான 2 ½ ஏக்கர் காணியை பௌத்த விகாரை நிர்மாணிப்பதற்கு சுவீகரிப்பதென தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. காணிகள் பள்ளியான் செயினுதீன் மற்றும் ஆதம்லெவ்வை சமீமா ஆகியோருக்குச் சொந்தமானவையாகும்.
சுவீகரிக்கப்படவுள்ள காணிகளின் சொந்தக்காரர்களுக்கு எதிர்த்திசையில் பாதைக்கு அருகில் மாற்றுக் காணிகள் வழங்கப்படுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீரைத் தவிர முஸ்லிம் தரப்பில் எவரும் கலந்து கொள்ளாததால் காணிச் சொந்தக் காரர்கள் இருவருக்கும் கடந்த புதன்கிழமை இறக்காமம் பிரதேச செயலாளர் காரியாலயத்துக்கு பேச்சுவார்த்தையொன்றுக்கு சமுகமளிக்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
காணி சுவீகரிப்பு மற்றும் மாற்றுக் காணிகள் வழங்கல் தொடர்பாக காணிச் சொந்தக்காரர்கள் இருவருடனும் உதவி காணி ஆணையாளர் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும் குறிப்பிட்ட இருவரும் அங்கு செல்லவில்லை.
அவர்கள் வீடுகளில் இல்லை. வெளியில் சென்றிருப்பதாக அறிவிக்கப்பட்டதாக இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் தெரிவித்தார். மீண்டும் அவர்களுக்கு பதிவுத்தபால் மூலம் கடிதங்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
விகாரைக்கான காணி அளவீடு
கடந்த செவ்வாய்க்கிழமை அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தினையடுத்து மறுதினம் கடந்த புதன்கிழமை மாயக்கல்லி மலையடிவார காணி அளவீடு ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
புதன்கிழமை காலை இறக்காமம் பிரதேச செயலகத்துக்கு திடீரென வருகைதந்த மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.குணசேகர இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீருடன் கலந்துரையாடிய பின்பு நில அளவைத் திணைக்கள அதிகாரிகளினால் புதன்கிழமை காணி அளவீடுகள் ஆரம்பிக்கப்பட்டன.
முஸ்லிம்களுக்கு சொந்தமான 2 ½ ஏக்கர் காணி பௌத்த விகாரை அமைப்பதற்காக அளவீடு செய்யப்பட்டு எல்லையிடப்பட்டுள்ளன. அம்பாறை மேலதிக மாவட்ட நீதிமன்றம் எதிர்வரும் மே மாதம் 17 ஆம் திகதி வரை குறிப்பிட்ட மாயக்கல்லி மலைப் பிரதேசத்திற்குள் உள்நுழைய கூடாது என இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலே காணி அளவீடுகள் இடம்பெற்றுள்ளன.
காணி அளவீடு நடைபெறும் போது இறக்காமம் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ.மன்சூர் காணிச் சொந்தக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக பலத்த எதிர்ப்பினைத் தெரிவித்தார். அங்கு சமுகமளித்திருந்த பொலிஸ் உயர் அதிகாரிகளும் நில அளவையாளர்களும் உயர் அதிகாரிகளின் பணிப்புரைக்கமையவே காணி அளவீடு மேற்கொள்வதாகத் தெரிவித்தனர். நில அளவைத் திணைக்கள பட வரைபில் குறிப்பிட்டதற்கமைவாக பிரிவு 52 தொடக்கம் 55 வரை (4 LOT) 2.5 ஏக்கர் காணி அளவிடப்பட்டு எல்லைகற்கள் பதிக்கப்பட்டன.
கிழக்கு மாகாண சபையில் அவசர பிரேரணை
மாயக்கல்லி மலையில் 06 மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட புத்தர் சிலையும் அதன் அண்மையிலுள்ள காணிப்பிணக்குகளும் தொடர்பாக கடந்த செவ்வாயன்று ஆம் திகதி நடைபெற்ற கிழக்கு மாகாண சபை அமர்வில் சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீனினால் அவசர பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இவ்விவகாரத்தை ஆராய்வதற்காக கிழக்கு முதலமைச்சர் ஏ.நஸீர் அஹமட் தலைமையில் குழுவொன்றும் சபையால் நியமிக்கப்பட்டது. இக்குழுவின் அங்கத்தவர்களாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலப்பதி, கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ். தண்டாயுதபாணி, மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் மற்றும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து மாகாண சபை உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். குழு அவசரமாகக் கூடி ஆராய்ந்து அடுத்த சபை அமர்வு மே மாதம் 23 ஆம் திகதிக்கு முன்பு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குழுவின் கூட்டத்திற்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், இறக்காமம் பிரதேச செயலாளர், மாகாண காணி ஆணையாளர், மாகாண காணி திணைக்கள அதிகாரிகள், இறக்காமம் பிரதேச சபை செயலாளர், அம்பாறை தொல்பொருள் திணைக்கள உதவி பணிப்பாளர், பிரதி பொலிஸ்மா அதிபர், உதவி பொலிஸ் அத்தியட்சகர், தமண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் அழைக்கப்படவுள்ளனர்.
எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளக்கூடாது
கிழக்கு முதலமைச்சரின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழு பொருத்தமான தீர்மானமொன்றினை மேற்கொள்ளும்வரை குறிப்பிட்ட இடத்தில் எந்தத் தரப்பினருக்கும், எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்வதற்கு அனுமதிக்கக்கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்டவர்களுக்கு இது தொடர்பில் அறிவித்து அவ்விடத்தில் எவ்வித நடவடிக்கைகளுக்கும் அனுமதிகள் வழங்கக்கூடாதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை மாயக்கல்லி மலையடிவாரத்தில் மேற்கொள்ளப்பட்ட நில அளவீடுகள் பூர்த்தியானதன் பின்பே குறிப்பிட்ட அறிவித்தல்கள் சம்பந்தப்பட்டவர்களுக்குச் சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம்
மாயக்கல்லி மலை விவகாரத்தில் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ள கருத்துகள் மிகவும் முக்கியமானதாகும். நாட்டிலுள்ள தொல்பொருட்களை சாதி, சமய பேதமின்றி பாதுகாப்பதே தொல்பொருள் திணைக்களத்தின் கடமை. தொல்பொருள் பிரதேசங்களில் மதஸ்தலங்களை நிறுவ வேண்டும் என தொல்பொருள் சட்டம் தெரிவிக்கவில்லை.
மாயக்கல்லி மலையடிவாரத்தில் தொல்பொருள் பிரதேசத்தை மாத்திரம் நாம் எல்லையிட்டு பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுத்துள்ளோம். சிலை வைப்பதற்கும் அத்தோடு விகாரை அமைக்கும் முயற்சிக்கும் எமக்கும் எவ்வித தொடர்புகளுமில்லை. இவ்விடயத்தில் மதங்களுக்கு இடையில் முரண்பாடுகள் உருவாவது நல்லதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
இது போன்ற கருத்தினையே தொல்பொருள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் நீல்மல்கொடவும் தெரிவித்துள்ளார்.
“தொல்பொருள் திணைக்களம் மாயக்கல்லி மலையடிவாரத்தில் தொல்பொருள் பகுதிகளை எல்லையிட்டு சுற்றி வேலியிட்டுள்ளது. இந்த எல்லைக்குள் எவ்வித நிர்மாணப் பணிகளுக்கும் இடமளிக்கப்படமாட்டாது. காணி ஆணையாளரினால் எல்லையிடப்பட்டு வழங்கப்படும் பகுதியிலே நிர்மாணப் பணிகளை முன்னெடுக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
அம்பகஹபிட்டியே சீலரத்ன தேரர்
தீகபாவி மாணிக்கமடு பரிவார சைத்திய ரஜமகா விகாரையின் மகாநாயக்க அம்பகஹபிட்டியே சீலரத்ன தேரர் எதிர்வரும் மே மாதம் 1 ஆம் திகதி விகாரை நிர்மாணப்பணிகளுக்கான பூஜை வழிபாடுகளையும் மத வழிபாடுகளையும் நடத்தவுள்ளதாக சூளுரைத்துள்ளார். அரசாங்க அதிபரின் எழுத்து மூல உத்தரவு கிடைத்ததும் விகாரை நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.
இது பௌத்த நாடு. பௌத்த மக்களுக்கு உரித்தான காணியில் விகாரையமைக்க எவரும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது எனவும் அதிகார தோரணையில் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களில் அடிப்படை வாத குழுவினரே மதஸ்தலங்கள் நிறுவுவதை எதிர்க்கின்றனர். முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமது அரசியல் சுயநலம் கருதி நல்லவோர் காரியத்தை தவறானதாகச் சித்திரிக்கின்றனர். கிழக்கில் முஸ்லிம்களும் சிங்களவர்களும் தமிழர்களும் விட்டுக் கொடுப்புடன் இன நல்லுறவுடன் வாழ வேண்டுமென்பதையே நாம் விரும்புகிறோம்.
மதஸ்தலங்கள் தீவிரவாதத்தைப் பரப்புவதற்காக நிர்மாணிக்கப்படுவதில்லை. மக்களை நல்வழிப்படுத்துவதற்காகவே நிர்மாணிக்கப்படுகின்றன. இப்பிரதேசம் பௌத்தர்களின் வரலாற்றுப் பிரதேசமென்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மு.கா.வின் முன்னாள் பொதுச் செயலாளர்
மாயக்கல்லி மலையடிவாரத்தில் முஸ்லிம்களின் காணி சுவீகரிக்கப்பட்டு விகாரை நிர்மாணிப்பதற்கு தீர்மானித்திருப்பதை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலளர் எம்.ரி. ஹசன் அலி வன்மையாகக் கண்டித்துள்ளார்.
கிழக்கில் பல பிரதேசங்களில் முஸ்லிம் காணிகள் தொல்பொருள் பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. மாயக்கல்லி மலையடிவாரம் போல் எதிர்காலத்தில் பல காணிகள் சுவீகரிக்கப்படுவதற்கு இதுவே ஆரம்பமாக அமையலாம்.
தொல்பொருள் பிரதேசம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக்கருத்து இல்லை. என்றாலும் மத ரீதியான காணி ஆக்கிரமிப்புகளுக்கு இடமளிக்கக் கூடாது இவ்வாறான செயல்கள் இனி மேல் இடம்பெறக்கூடாதென்றே முன்னைய மஹிந்த ராஜபக் ஷ வின் அரசாங்கத்தை முஸ்லிம்கள் எதிர்த்தார்கள். தோல்வியடையச் செய்வதில் பங்குதாரர்கள் ஆனார்கள்.
என்றாலும் முஸ்லிம்கள் தொடர்பில் கடந்த கால அரசாங்கத்துக்கும் இன்றைய அரசாங்கத்துக்கும் எந்த வேறுபாடுகளுமில்லை என்று ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர்
கிழக்கு மாகாண சபை அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமா லெப்பை மாயக்கல்லி மலை விவகாரம் சிங்கள, முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார். உண்மையில் தற்போது அப்பிரதேசத்தில் சிங்கள, முஸ்லிம் மக்களின் நல்லுறவில் விரிசல்கள் ஆரம்பித்துள்ளன.
மாயக்கல்லி மலையில் பலவந்தமாக புத்தர் சிலையொன்றினை நிறுவிவிட்டு அம்மலை அருகிலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளில் அத்துமீறி பௌத்த விகாரை அமைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவிட்டு சிங்கள ஊடகங்களில் மாணிக்கமடு பிரதேத்தில் பௌத்த விகாரை அமைப்பதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பினை தெரிவிப்பதாக தவறான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
இவ்வாறான நடவடிக்கைகள் இந் நாட்டில் வாழும் முஸ்லிம்– சிங்கள சமூகங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்துவதற்கான முயற்சியாகும். சிங்கள மக்கள் பௌத்த விகாரை அமைப்பதற்கு முஸ்லிம் மக்கள் ஒரு போதும் எதிர்ப்பினைத் தெரிவிக்கவில்லை. ஆனால் தொல்பொருள் பிரதேசம் எனக்கூறி கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் பூர்வீகக் காணிகள் அபகரிக்கப்படக்கூடாது. முஸ்லிம்களுக்குச் சொந்தமான பூர்வீகக் காணியில் அத்துமீறி பௌத்த விகாரை அமைப்பதையே மக்கள் எதிர்க்கிறார்கள் என்று தெரிவித்துள்ளமை நோக்கப்பாலது.
சுமுகத் தீர்வு கிட்டுமா?
மாயக்கல்லி மலையடிவாரத்தில் விகாரை அமைத்தே தீருவது என பௌத்த பேரினவாதிகள் சூளுரைத்துள்ளார்கள். அதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேவேளை முஸ்லிம்கள் தமது பூர்வீகக் காணிகளை விட்டுக்கொடுக்க முடியாது என வாதிடுகிறார்கள்.
பௌத்தர்களே குடியிருக்காத பகுதியில் எதற்கு விகாரைகள்? உண்மைதான் நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமங்களில், நகரங்களில் உள்ள பள்ளிவாசல்களை புனர்நிர்மாணம் செய்வதற்குக் கூட எதிர்ப்பு தெரிவித்து பேரினவாதிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறார்கள்.
தம்புள்ளை பள்ளிவாசலுக்கு 80 பேர்ச் காணி வழங்குவதற்குக் கூட எத்தனையோ இழுத்தடிப்புகள். வருடங்கள் 5 கடந்தும் எதுவும் நடைபெறவில்லை. அனைத்தும் மந்த கதியில் நகர்கின்றன.
இந்நிலையில் மாயக்கல்லியில் ஏன் இந்த அவசரம். இரண்டு தினங்களில் காணி அளவீடுகள் பூர்த்தியாகி சில தினங்களில் நிர்மாணப் பணிகளுக்கான பூஜை வழிபாடுகளும் நடைபெறவுள்ளன.
இதுதான் உண்மை. பாராளுமன்றத்தில் எம்மைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எமது பிரதிநிதிகள் 21 பேரும் என்ன செய்யப்போகிறார்கள். சமூகம் தீர்வுகளுக்காக காத்துக் கிடக்கிறது.
புத்த பெருமான் அகிம்சையையும், கருணையையுமே போதித்தார். அடாவடித்தனங்களையும், பலாத்காரங்களையும் எதிர்த்தார். கௌதம புத்தர் இன்று உயிருடன் இருந்திருந்தால் பௌத்த நாடான இலங்கையில், அவரது சீடர்களான பௌத்த தேரர்களின் நிலை கண்டு நிச்சயம் கண்கலங்கியிருப்பார்.
''இது பௌத்த நாடு. இந்நாடு எமக்குத்தான் சொந்தம். எமது நாட்டினை முஸ்லிம்களும், தமிழர்களும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். மாயக்கல்லி மலையடிவார காணியை போலி உறுதிகளுடன் முஸ்லிம்கள் அபகரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் காணிகளை விட்டுச் செல்ல வேண்டும்.''
கடந்த செவ்வாய்க்கிழமை அம்பாறை, மாவட்ட செயலகத்தில் அம்பாறை மாவட்ட அரச அதிபர் துசித்த வணிகசிங்க தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரும் கலந்து கொண்டிருந்தார். அங்கு அவர் தெரிவித்த கருத்துகளில் சிலவே இவை.
இறக்காமம், மாணிக்கமடு மாயக்கல்லி மலையடிவாரத்தின் காணியை சுவீகரிப்பதற்காக ஏற்பாடு செய்திருந்த இந்த உயர்மட்டக் கூட்டத்தில் மாகாண காணி ஆணையாளர் டீ.டீ.அனுர தர்மதாச, மாவட்ட உதவி காணி ஆணையாளர் டீ.டீ.எஸ்.தக் ஷிலா குணரத்ன, இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர், மாவட்ட நில அளவைத் திணைக்கள அதிகாரிகள், பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர், தீகவாபி மாணிக்கமடு, பரிவார சைத்திய ரஜமகாவிகாரையின் மகாநாயக்க அம்பகஹபிட்டியே சீலரத்ன தேரர். சிங்கள ராவய மற்றும் சிங்ஹலே அமைப்புகளின் தேரர்கள் கலந்து கொண்டனர்.
குறிப்பிட்ட மாநாட்டில் முஸ்லிம் தரப்பினர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாயக்கல்லி மலையடிவார காணிகளின் உரிமையாளர்கள் மற்றும் பிரதேச முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்தும் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாணத்திற்கென ஒரு முதலமைச்சர் பதவியில் இருக்கும் போது அவரிடம் இவ்விவகாரம் கலந்துரையாடப்படாமல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டமை பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
மாயக்கல்லி மலை
அம்பாறை மாவட்டத்தில் இறக்காமத்திலே முஸ்லிம்கள் ஆரம்பத்தில் குடியேறியதாக வரலாறு தெரிவிக்கிறது. இறக்காமம் வரிபத்தான்சேனை சந்தியில் இருந்து கிழக்கே வயல்கள் மற்றும் சிறு மலைகளினூடாக பிரதான பாதையொன்று ஊடறுத்துச் செல்கிறது.
வரிப்பத்தான் சேனை சந்தியில் இருந்து குடுவில் கிராமம் செல்லும் வரை வலது பக்கமாக நல்ல தண்ணி எனும் இடத்தில் முஸ்லிம்களும், மாணிக்கமடு எனும் இடத்தில் இந்துக்களும் வாழ்கிறார்கள். இப்பிரதேசங்கள் எவற்றிலும் பௌத்தரின் வாழ்விடங்கள் இல்லை.
இங்கே இருக்கும் மேட்டு நிலங்கள், வயல் காணிகள் அனைத்தும் முஸ்லிம்களுக்கு அரசினால் சட்டபூர்வமாக வழங்கப்பட்ட இடங்களாகும். இக்காணிகளுக்கு 1980 களில் காணி உத்தரவு பத்திரங்களும் 1990 ஆம் ஆண்டுகளில் LDO காணி அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த காணிகள் தொடர்ச்சியாக மழை பெய்தால் வெள்ளத்தில் மூழ்கக் கூடியனவாகும். இங்கு வீதியின் இடது பக்கமாக சில குன்றுகள் காணப்படுகின்றன.
குன்றுகளின் அடிவாரத்தில் நெற்காணிகள் காணப்படுகின்றன. இக்காணிகளுக்கும் LDO உத்தரவு பத்திரங்கள் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இக்குன்றுகளில் சில சிதைவடைந்து படிக்கட்டுகள், நீர்த்தடாகம் போன்ற அமைப்புகள் காணப்படுகின்றன. இவை பண்டைய ராஜதானிகளின் சுவடுகளாக இருக்கலாம் என்று தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அம்பாறை மாவட்டச் செயலக கூட்டத்தில் தீர்மானம்
அம்பாறை மாவட்டச் செயலகத்தில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாயக்கல்லி மலையடிவாரத்தினுள்ள முஸ்லிம்கள் இருவருக்குச் சொந்தமான 2 ½ ஏக்கர் காணியை பௌத்த விகாரை நிர்மாணிப்பதற்கு சுவீகரிப்பதென தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. காணிகள் பள்ளியான் செயினுதீன் மற்றும் ஆதம்லெவ்வை சமீமா ஆகியோருக்குச் சொந்தமானவையாகும்.
சுவீகரிக்கப்படவுள்ள காணிகளின் சொந்தக்காரர்களுக்கு எதிர்த்திசையில் பாதைக்கு அருகில் மாற்றுக் காணிகள் வழங்கப்படுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீரைத் தவிர முஸ்லிம் தரப்பில் எவரும் கலந்து கொள்ளாததால் காணிச் சொந்தக் காரர்கள் இருவருக்கும் கடந்த புதன்கிழமை இறக்காமம் பிரதேச செயலாளர் காரியாலயத்துக்கு பேச்சுவார்த்தையொன்றுக்கு சமுகமளிக்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
காணி சுவீகரிப்பு மற்றும் மாற்றுக் காணிகள் வழங்கல் தொடர்பாக காணிச் சொந்தக்காரர்கள் இருவருடனும் உதவி காணி ஆணையாளர் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும் குறிப்பிட்ட இருவரும் அங்கு செல்லவில்லை.
அவர்கள் வீடுகளில் இல்லை. வெளியில் சென்றிருப்பதாக அறிவிக்கப்பட்டதாக இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் தெரிவித்தார். மீண்டும் அவர்களுக்கு பதிவுத்தபால் மூலம் கடிதங்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
விகாரைக்கான காணி அளவீடு
கடந்த செவ்வாய்க்கிழமை அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தினையடுத்து மறுதினம் கடந்த புதன்கிழமை மாயக்கல்லி மலையடிவார காணி அளவீடு ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
புதன்கிழமை காலை இறக்காமம் பிரதேச செயலகத்துக்கு திடீரென வருகைதந்த மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.குணசேகர இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீருடன் கலந்துரையாடிய பின்பு நில அளவைத் திணைக்கள அதிகாரிகளினால் புதன்கிழமை காணி அளவீடுகள் ஆரம்பிக்கப்பட்டன.
முஸ்லிம்களுக்கு சொந்தமான 2 ½ ஏக்கர் காணி பௌத்த விகாரை அமைப்பதற்காக அளவீடு செய்யப்பட்டு எல்லையிடப்பட்டுள்ளன. அம்பாறை மேலதிக மாவட்ட நீதிமன்றம் எதிர்வரும் மே மாதம் 17 ஆம் திகதி வரை குறிப்பிட்ட மாயக்கல்லி மலைப் பிரதேசத்திற்குள் உள்நுழைய கூடாது என இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலே காணி அளவீடுகள் இடம்பெற்றுள்ளன.
காணி அளவீடு நடைபெறும் போது இறக்காமம் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ.மன்சூர் காணிச் சொந்தக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக பலத்த எதிர்ப்பினைத் தெரிவித்தார். அங்கு சமுகமளித்திருந்த பொலிஸ் உயர் அதிகாரிகளும் நில அளவையாளர்களும் உயர் அதிகாரிகளின் பணிப்புரைக்கமையவே காணி அளவீடு மேற்கொள்வதாகத் தெரிவித்தனர். நில அளவைத் திணைக்கள பட வரைபில் குறிப்பிட்டதற்கமைவாக பிரிவு 52 தொடக்கம் 55 வரை (4 LOT) 2.5 ஏக்கர் காணி அளவிடப்பட்டு எல்லைகற்கள் பதிக்கப்பட்டன.
கிழக்கு மாகாண சபையில் அவசர பிரேரணை
மாயக்கல்லி மலையில் 06 மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட புத்தர் சிலையும் அதன் அண்மையிலுள்ள காணிப்பிணக்குகளும் தொடர்பாக கடந்த செவ்வாயன்று ஆம் திகதி நடைபெற்ற கிழக்கு மாகாண சபை அமர்வில் சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீனினால் அவசர பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இவ்விவகாரத்தை ஆராய்வதற்காக கிழக்கு முதலமைச்சர் ஏ.நஸீர் அஹமட் தலைமையில் குழுவொன்றும் சபையால் நியமிக்கப்பட்டது. இக்குழுவின் அங்கத்தவர்களாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலப்பதி, கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ். தண்டாயுதபாணி, மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் மற்றும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து மாகாண சபை உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். குழு அவசரமாகக் கூடி ஆராய்ந்து அடுத்த சபை அமர்வு மே மாதம் 23 ஆம் திகதிக்கு முன்பு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குழுவின் கூட்டத்திற்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், இறக்காமம் பிரதேச செயலாளர், மாகாண காணி ஆணையாளர், மாகாண காணி திணைக்கள அதிகாரிகள், இறக்காமம் பிரதேச சபை செயலாளர், அம்பாறை தொல்பொருள் திணைக்கள உதவி பணிப்பாளர், பிரதி பொலிஸ்மா அதிபர், உதவி பொலிஸ் அத்தியட்சகர், தமண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் அழைக்கப்படவுள்ளனர்.
எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளக்கூடாது
கிழக்கு முதலமைச்சரின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழு பொருத்தமான தீர்மானமொன்றினை மேற்கொள்ளும்வரை குறிப்பிட்ட இடத்தில் எந்தத் தரப்பினருக்கும், எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்வதற்கு அனுமதிக்கக்கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்டவர்களுக்கு இது தொடர்பில் அறிவித்து அவ்விடத்தில் எவ்வித நடவடிக்கைகளுக்கும் அனுமதிகள் வழங்கக்கூடாதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை மாயக்கல்லி மலையடிவாரத்தில் மேற்கொள்ளப்பட்ட நில அளவீடுகள் பூர்த்தியானதன் பின்பே குறிப்பிட்ட அறிவித்தல்கள் சம்பந்தப்பட்டவர்களுக்குச் சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம்
மாயக்கல்லி மலை விவகாரத்தில் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ள கருத்துகள் மிகவும் முக்கியமானதாகும். நாட்டிலுள்ள தொல்பொருட்களை சாதி, சமய பேதமின்றி பாதுகாப்பதே தொல்பொருள் திணைக்களத்தின் கடமை. தொல்பொருள் பிரதேசங்களில் மதஸ்தலங்களை நிறுவ வேண்டும் என தொல்பொருள் சட்டம் தெரிவிக்கவில்லை.
மாயக்கல்லி மலையடிவாரத்தில் தொல்பொருள் பிரதேசத்தை மாத்திரம் நாம் எல்லையிட்டு பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுத்துள்ளோம். சிலை வைப்பதற்கும் அத்தோடு விகாரை அமைக்கும் முயற்சிக்கும் எமக்கும் எவ்வித தொடர்புகளுமில்லை. இவ்விடயத்தில் மதங்களுக்கு இடையில் முரண்பாடுகள் உருவாவது நல்லதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
இது போன்ற கருத்தினையே தொல்பொருள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் நீல்மல்கொடவும் தெரிவித்துள்ளார்.
“தொல்பொருள் திணைக்களம் மாயக்கல்லி மலையடிவாரத்தில் தொல்பொருள் பகுதிகளை எல்லையிட்டு சுற்றி வேலியிட்டுள்ளது. இந்த எல்லைக்குள் எவ்வித நிர்மாணப் பணிகளுக்கும் இடமளிக்கப்படமாட்டாது. காணி ஆணையாளரினால் எல்லையிடப்பட்டு வழங்கப்படும் பகுதியிலே நிர்மாணப் பணிகளை முன்னெடுக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
அம்பகஹபிட்டியே சீலரத்ன தேரர்
தீகபாவி மாணிக்கமடு பரிவார சைத்திய ரஜமகா விகாரையின் மகாநாயக்க அம்பகஹபிட்டியே சீலரத்ன தேரர் எதிர்வரும் மே மாதம் 1 ஆம் திகதி விகாரை நிர்மாணப்பணிகளுக்கான பூஜை வழிபாடுகளையும் மத வழிபாடுகளையும் நடத்தவுள்ளதாக சூளுரைத்துள்ளார். அரசாங்க அதிபரின் எழுத்து மூல உத்தரவு கிடைத்ததும் விகாரை நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.
இது பௌத்த நாடு. பௌத்த மக்களுக்கு உரித்தான காணியில் விகாரையமைக்க எவரும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது எனவும் அதிகார தோரணையில் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களில் அடிப்படை வாத குழுவினரே மதஸ்தலங்கள் நிறுவுவதை எதிர்க்கின்றனர். முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமது அரசியல் சுயநலம் கருதி நல்லவோர் காரியத்தை தவறானதாகச் சித்திரிக்கின்றனர். கிழக்கில் முஸ்லிம்களும் சிங்களவர்களும் தமிழர்களும் விட்டுக் கொடுப்புடன் இன நல்லுறவுடன் வாழ வேண்டுமென்பதையே நாம் விரும்புகிறோம்.
மதஸ்தலங்கள் தீவிரவாதத்தைப் பரப்புவதற்காக நிர்மாணிக்கப்படுவதில்லை. மக்களை நல்வழிப்படுத்துவதற்காகவே நிர்மாணிக்கப்படுகின்றன. இப்பிரதேசம் பௌத்தர்களின் வரலாற்றுப் பிரதேசமென்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மு.கா.வின் முன்னாள் பொதுச் செயலாளர்
மாயக்கல்லி மலையடிவாரத்தில் முஸ்லிம்களின் காணி சுவீகரிக்கப்பட்டு விகாரை நிர்மாணிப்பதற்கு தீர்மானித்திருப்பதை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலளர் எம்.ரி. ஹசன் அலி வன்மையாகக் கண்டித்துள்ளார்.
கிழக்கில் பல பிரதேசங்களில் முஸ்லிம் காணிகள் தொல்பொருள் பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. மாயக்கல்லி மலையடிவாரம் போல் எதிர்காலத்தில் பல காணிகள் சுவீகரிக்கப்படுவதற்கு இதுவே ஆரம்பமாக அமையலாம்.
தொல்பொருள் பிரதேசம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக்கருத்து இல்லை. என்றாலும் மத ரீதியான காணி ஆக்கிரமிப்புகளுக்கு இடமளிக்கக் கூடாது இவ்வாறான செயல்கள் இனி மேல் இடம்பெறக்கூடாதென்றே முன்னைய மஹிந்த ராஜபக் ஷ வின் அரசாங்கத்தை முஸ்லிம்கள் எதிர்த்தார்கள். தோல்வியடையச் செய்வதில் பங்குதாரர்கள் ஆனார்கள்.
என்றாலும் முஸ்லிம்கள் தொடர்பில் கடந்த கால அரசாங்கத்துக்கும் இன்றைய அரசாங்கத்துக்கும் எந்த வேறுபாடுகளுமில்லை என்று ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர்
கிழக்கு மாகாண சபை அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமா லெப்பை மாயக்கல்லி மலை விவகாரம் சிங்கள, முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார். உண்மையில் தற்போது அப்பிரதேசத்தில் சிங்கள, முஸ்லிம் மக்களின் நல்லுறவில் விரிசல்கள் ஆரம்பித்துள்ளன.
மாயக்கல்லி மலையில் பலவந்தமாக புத்தர் சிலையொன்றினை நிறுவிவிட்டு அம்மலை அருகிலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளில் அத்துமீறி பௌத்த விகாரை அமைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவிட்டு சிங்கள ஊடகங்களில் மாணிக்கமடு பிரதேத்தில் பௌத்த விகாரை அமைப்பதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பினை தெரிவிப்பதாக தவறான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
இவ்வாறான நடவடிக்கைகள் இந் நாட்டில் வாழும் முஸ்லிம்– சிங்கள சமூகங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்துவதற்கான முயற்சியாகும். சிங்கள மக்கள் பௌத்த விகாரை அமைப்பதற்கு முஸ்லிம் மக்கள் ஒரு போதும் எதிர்ப்பினைத் தெரிவிக்கவில்லை. ஆனால் தொல்பொருள் பிரதேசம் எனக்கூறி கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் பூர்வீகக் காணிகள் அபகரிக்கப்படக்கூடாது. முஸ்லிம்களுக்குச் சொந்தமான பூர்வீகக் காணியில் அத்துமீறி பௌத்த விகாரை அமைப்பதையே மக்கள் எதிர்க்கிறார்கள் என்று தெரிவித்துள்ளமை நோக்கப்பாலது.
சுமுகத் தீர்வு கிட்டுமா?
மாயக்கல்லி மலையடிவாரத்தில் விகாரை அமைத்தே தீருவது என பௌத்த பேரினவாதிகள் சூளுரைத்துள்ளார்கள். அதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேவேளை முஸ்லிம்கள் தமது பூர்வீகக் காணிகளை விட்டுக்கொடுக்க முடியாது என வாதிடுகிறார்கள்.
பௌத்தர்களே குடியிருக்காத பகுதியில் எதற்கு விகாரைகள்? உண்மைதான் நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமங்களில், நகரங்களில் உள்ள பள்ளிவாசல்களை புனர்நிர்மாணம் செய்வதற்குக் கூட எதிர்ப்பு தெரிவித்து பேரினவாதிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறார்கள்.
தம்புள்ளை பள்ளிவாசலுக்கு 80 பேர்ச் காணி வழங்குவதற்குக் கூட எத்தனையோ இழுத்தடிப்புகள். வருடங்கள் 5 கடந்தும் எதுவும் நடைபெறவில்லை. அனைத்தும் மந்த கதியில் நகர்கின்றன.
இந்நிலையில் மாயக்கல்லியில் ஏன் இந்த அவசரம். இரண்டு தினங்களில் காணி அளவீடுகள் பூர்த்தியாகி சில தினங்களில் நிர்மாணப் பணிகளுக்கான பூஜை வழிபாடுகளும் நடைபெறவுள்ளன.
இதுதான் உண்மை. பாராளுமன்றத்தில் எம்மைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எமது பிரதிநிதிகள் 21 பேரும் என்ன செய்யப்போகிறார்கள். சமூகம் தீர்வுகளுக்காக காத்துக் கிடக்கிறது.


Comments
Post a Comment