மீதொட்­ட­முல்ல விவ­காரம் : பலி­யா­ன­வர்­களின் குடும்­பங்­க­ளுக்கு ஒரு இலட்சம் ரூபா வழங்க நட­வ­டிக்கை


பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு வீடு வழங்­கவும் அரசாங்கம் திட்டம்
மீதொட்­ட­முல்ல குப்பை மேடு சரிந்து விழுந்­ததால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நஷ்­ட­ஈடு வழங்கப்படவுள்ளது. 

இதற்­க­மைய, சம்­ப­வத்தில் இறந்­த­வர்­களின் குடும்­பங்­க­ளுக்கு தலா 100,000 ரூபாவும், உட­மைகள் சேத­ம­டைந்­த­வர்­களின் குடும்­பங்­க­ளுக்கு, அதி­க­பட்­ச­மாக 2.5 மில்­லியன் ரூபா வரை­யிலும் வழங்கப்படவுள்ளதாக, நிதி அமைச்சு குறிப்­பிட்­டுள்­ளது. 

இதே­வேளை, பாதிக்­கப்­பட்ட நபர்­க­ளுக்­கான  அரச நிதி கிட்­டு­மாயின் புதிய வீடு­களை வழங்­கு­வ­தற்கு துரி­த­மாக நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும் எனவும்  அமைச்சர் பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்­துள்ளார். 

மீதொட்­ட­முல்­லயில் குப்­பை­மேடு சரிந்து விழுந்­தமை தொடர்­பாக வெளி­யிட்­டுள்ள இந்த அறிக்­கையில் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க இந்த விட­யங்­களை குறிப்­பிட்­டுள்ளார். அவ­ரது அறிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்பட்டுள்ளதாவது, 

மீதொட்­ட­முல்­லயில் குப்­பை­மேடு தொடர்பில் இந்த குப்­பை­களை அகற்­று­வ­தற்­கான சகல நட­வ­டிக்­கை­க­ளையும் அர­சாங்கம்  மேற்­கொண்டு வந்த நிலையில் எதிர்­பா­ராத வித­மாக இந்த சம்­பவம் இட­பெற்­றுள்­ளது.

எனினும் இந்த விடயம் தொடர்பில் அர­சாங்கம் கூடிய கவனம் செலுத்தி வரு­கின்­றது. 

அதேபோல் எதிர்­வரும் மே மாதம் முதலாம் திகதி தொடக்கம்  நகர அபி­வி­ருத்தி அதி­கா­ர­ச­பைக்கு உட்­பட்ட காணி­களில் குப்­பை­களை கொட்­டப்­ப­டு­வதை தடை­செய்ய  நகரம் மற்றும் மேல்­மா­காண அபி­வி­ருத்தி அமைச்சு தீர்­மா­னித்­துள்­ளது.

இதற்­க­மை­வாக எந்­த­வொரு உள்­ளூ­ராட்சி மன்ற நிறு­வ­னத்­திற்கு அல்­லது அரச நிறு­வ­னங்­க­ளுக்கு உட்­பட்ட பகு­தி­களில் குப்­பை­களை கொட்­டு­வ­தற்கு காணி தேவைப்­ப­டு­மாயின் இந்த நிறு­வ­னங்கள் கொண்­டுள்ள மானி­யங்­களை பயன்­ப­டுத்தி அதற்­கான கொடுப்­ப­ன­வு­களை செலுத்­த­வேண்டும். 

மேலும் பாதிக்­கப்­பட்ட நபர்­க­ளுக்­கான  அரச நிதி கிட்­டு­மாயின் புதிய வீடு­களை வழங்­கு­வ­தற்கு துரி­த­மாக நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும்.  

கடந்த பெப்­ர­வரி மாதத்தில் மீதொட்டமுல்ல குப்­பை­மேடு தொடர்­பாக ஆவ­ண­மொன்று பெரு­ந­கர மற்றும் மேல்­மா­காண அமைச்­சினால்  அமைச்­ச­ர­வைக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்கமைவாக மீதொட்டமுல்ல குப்பைமேட்டில் குப்பைகள் கொட்டப்படுவதை இடைநிறுத்துவதற்கும் இதற்கான மாற்று இடத்தை அடையாளம் காண்பதற்கும் கொழும்பு மாநகர சபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments