பொதுமக்களுக்கு சமைத்த உணவு வழங்க அனுமதி பெற வேண்டும்
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் தெரிவிப்பு
அம்பாறை, இறக்காமம் பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட உணவு ஒவ்வாமை அனர்த்தத்தினையடுத்து கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளருக்குட்பட்ட பிரதேசங்களில்; நடைபெரும் பாரியளவிலான விசேட நிகழ்விகளில் சமைக்கப்படும் உணவுகளை பொது மக்களுக்கு வழங்குவதற்கு முன்னர் சுகாதார அதிகாரிகளின் அனுமதியை பெற வேண்டும் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல் முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.
இறக்காமம் பிரதேசத்தில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பாக சுகதார துறை உயரதிகளுடனான கலந்துரையாடலுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அகமட்டினால் கல்முனை மாநாகர சபையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இறக்காமம், வாங்காமம் பிரதேசத்தில் அன்மையில் ஏற்பட்ட உணவு ஒவ்வாமையினால் ஏற்பட்ட அனர்த்தம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் இதனால் இறக்காமம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் அதிகமானோர் சிகச்சையை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் இதுவரை 3 பேர் மரணித்துள்ளனர். 950 பேர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு 03 கட்டங்களாகமாக வைத்திய சேவைகள் வழங்கப்பட்டன.
கல்முனை பிராந்திய ஆதார வைத்தியசாலைகளிலும், பிரதேச வைத்தியசாலைகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அம்பாறை போதனா வைத்தியசாலையில் இருவர் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிகக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாவர்களில் அதிகமானோர் சிகிச்சையை பெற்று வெளியேறியுள்ளனர். தற்போது 20 பேருக்கும் குறைவானவர்களே தொடர்ந்தும் சிகிச்சையை பெற்று வருகின்றனர்.
இவ்வனர்த்தத்தில் மரணித்தவர்களுக்கு நஸ்ட ஈடு வழங்குவது தொடர்பாகவும், மேற்படி திடீர் அனர்தங்களின் போது வைத்தியசாலைகள், உள்ளுராட்சி மன்றங்கள், சுகாதார துறை உத்தியோகத்தர்களின் அவசர செயற்பாடுகள் அhப்பணிப்பு மிக்கனவாக அமைய வேண்டும்.
முரணித்தவர்களின் மரணத்திற்கான மருத்துவ அறிக்கை கிடைக்கவுள்ளதுடன், குறித்த பிரச்சினைகள் தொடர்பான முழுமையான அறிக்கையை உhயி அதிகாரிகள் உடனடியாக சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை இப்பிரதேசத்தில் சில நாட்களுக்கு தொடர்ந்தும் வைத்தியர்கள், தாதியர்களை விசேட கடமையில் ஈடுபடுவதற்கும் 24மணிநேர வெளிநேயாளர்பிரிவை இயக்க வைப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன் போது கிழக்கு மாகாண முதலமைச்சா், முதலமைச்சின் செயலாளர் அதன் அதிகாரிகள், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் அதன் அதிகாரிகள் பிராந்திய வைத்திய பணிப்பாளர், உள்ளுராட்சி திணைக்கள செயலாளர்கள் உள்ளிட்டவர்களுடன் பல முக்கியஸ்தர்கள் கலந்துகொணடனர் .


Comments
Post a Comment