இறக்காமம் காணி அபகரிப்பை கண்டித்து அம்­பா­றை முழுவதும் போராட்டத்திற்கு அழைப்பு

(ரீ.கே.றஹ்­மத்­துல்லா)

இறக்­காமம், மாணிக்­க­மடு மாயக்­கல்லி மலை பிர­தே­சத்தில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் ஆக்­கி­ர­மிப்­புக்கு கண்­டனம் தெரி­வித்து இன்­றைய தினம் அம்­பாறை மாவட்டம் முழுதும் பாரிய கவ­ன­யீர்ப்பு போராட்­ட­த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



இறக்­காமம் பிர­தேச   அமைப்புகள்  இதற்­கான அழைப்பை விடுத்­துள்ளன.

இது குறித்து விடுக்கப்பட்டுள்ள அழைப்பில், 
இறக்­காமம், மாணிக்­க­மடு மாயக்­கல்லி மலை பிர­தே­சத்தில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் ஆக்­கி­ர­மிப்­புக்கு எதி­ராக சிறு­பான்மை சமூ­கங்கள் இணைந்து ஹர்த்தால் மற்றும்   பாரிய கண்­டன பேர­ணி­யொன்றை நடத்த ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

சிங்­கள பௌத்த மக்கள் வாழாத சிறு­பான்மை இனத்தைச் சேர்ந்த எமது பூர்­வீக காணியில் சட்ட விரோ­த­மாக பௌத்த விகாரை அமைப்­பது எந்த விதத்­திலும் நியா­யப்­ப­டுத்த முடி­யாது. நாம் பேச்­சு­வார்த்­தை­யூ­டாக இதனை தீர்த்­துக்­கொள்ள முயற்­சித்தோம்.

சம்­பவ இடத்­திற்கு விஜயம் செய்த அம்­பாறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும்  கிழக்கு மாகாண சபை உறுப்­பி­னர்கள் பலரும் பெரும் பான்மை சமூ­கத்­தி­ன­ரிடம் எமது நியா­யங்­களை எடுத்துக் கூறிய போதும் அது பய­ன­ளிக்­க­வில்லை.

இதற்கு மேல­தி­க­மாக கிழக்கு மாகாண சபையில் விகாரை அமைப்­ப­தற்கு எதி­ராக பிரே­ரணை கொண்டு வந்து நிறை­வேற்­றப்­பட்­டது. இவ்­வாறு ஜன­நா­யக ரீதி­யி­லான பல முன்­னெ­டுப்­புகள் மேற்­கொள்­ளப்­பட்டும் அவை கண்­டு­கொள்­ளப்­ப­ட­வில்லை.

இந்­நி­லையில் அம்­பாறை மாவட்­டத்­தி­லுள்ள தமிழ் முஸ்லிம் சமூ­கத்தின் எதிர்ப்பை காட்ட இன்­றைய தினம் கவ­ன­யீர்ப்பு போராட்­ட­மொன்றை முன்­னெ­டுக்­க­வுள்ளோம். இத­னூ­டாக சிறு­பான்மை மக்­களின் இலக்கை அடை­யலாம்.

எமது ஜன­நா­யக ரீதி­யி­லான கோரிக்­கை­களை அர­சாங்­கமும் பேரி­ன­வா­தி­களும் ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும். 

அந்த அடிப்­ப­டையில் இன்று வெள்ளிக் கிழமை அம்­பாறை மாவட்டம் முழு­வதும் கடை­ய­டைப்பு போராட்­டத்தை மேற்கொள்வதோடு ஜும்ஆ தொழு­கையின் பின்பு சகல பள்ளிவாசல்களிலும் கண்­டன பேர­ணி­யொன்­றையும் நடாத்­து­வ­தற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

 போராட்டத்தில் கட்சி பேதங்களுக்கு அப்பால் சகல மக்களும் கலந்து கொண்டு  ஒவ்வொரு பிரதேசத்திலும்    இப் போராட்டத்தை நடாத்துமாறு வேண்டிக் கொள்கிறோம்.

Comments