மனைவியை வெட்டிக் கொன்ற கணவன் :  கல்கிசையில் சம்பவம் 

(எம்.எப்.எம்.பஸீர்)

கல்கிசை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அத்திடிய பகுதியில் பெண்ணொருவர் தலையில் வெட்டப்பட்டு கணவனால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

இச் சம்பவம் இன்று (23) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்தனர். 35 வயதான மொஹமட் முஸ்தபா பாத்திமா அரூசியா எனும் பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

குடும்ப பிரச்சினை காரணமாக இக்கொலை இடம்பெற்றுள்ளதாகவும் சந்தேக நபரான கணவரை கொலைக்கு பயன்படுத்திய கத்தியுடன் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டினர்.

Comments