மதத் தலை­வர்­களின் வழி­காட்­டல்­களே சர்­வ­தேச சண்­டை­க­ளுக்கு தீர்வு தரும்

எம்.ஆர்.எம்.வஸீம்) 

சர்­வ­தேச இஸ்­லா­மிய மாநாட்டில் ஜனா­தி­பதி மைத்­திரி
உலகில் இடம்­பெறும் சண்டை மற்றும் பிரச்­சி­னை­க­ளுக்கு அர­சியல் வாதி­களால் வழங்­கப்­படும் தீர்­வு­க­ளை­விட மதத்­த­லை­வர்­களால் வழங்­கப்­படும் வழி­காட்டல் மற்றும் தீர்­வு­களே சிறப்­பா­னது.

அத்­துடன் உலகில் இருக்கும் அனைத்து நாட்டு அரச தலை­வர்­களும் போர் ஆயு­தங்­களை தயா­ரிப்­பதை தடை­செய்­வார்களாக இருந்தால் அதுவே உலகில் சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு சிறந்த வழி­யாகும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெர­வித்தார்.

ஸ்ரீலங்கா இஸ்­லா­மிய நிலையம் சவூதி அரே­பி­யாவின் இஸ்­லா­மிய விவ­காரம் மற்றும் வழி­காட்­டல்கள் அமைச்­சுடன் இணைந்து நடத்தும் 'இஸ்­லா­மிய யதார்த்­தமும் சம­கால சவால்­களும்' எனும் தொனிப்­பொ­ரு­ளி­லான சர்­வ­தேச இஸ்­லா­மிய மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு நேற்று அல­ரி­மா­ளி­கையில் இடம்­பெற்­றது. இதில் பிர­தம அதி­தி­யாகக் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,
இஸ்­லாத்தின் மகிமை அது எதிர்­கொள்ளும் சவால்கள் தொடர்­பாக பலரும் இங்கு உரை­யாற்­றினர். சமூக வாழ்வில் அனைத்து துறை­க­ளிலும் பிரச்­சி­னைகள் மற்றும் சவால்கள் இருப்­பது சாதா­ர­ண­வி­டயம்.

சமூக ரீதி­யிலும் கலா­சார முறை­மை­களை பின்­பற்­றும்­போதும் அர­சியல் நிர­வாகம் மற்றும் மொழி ரீதியில் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னைகள், சவால்கள் போன்று அனைத்து துறை­க­ளிலும் பிரச்­சி­னைகள் சவால்கள் இருக்­கின்­றன. ஆனால் இவற்­றி­னூ­டாக ஆரோக்­கி­ய­மா­ன­தொரு நிலைக்கு செல்­லவே மனித சமூகம் எதிர்­பார்க்­கின்­றது. 

அன்­றாட மற்றும் சமூ­க­வாழ்வில் மனி­தர்கள் எவ்­வாறு நடந்­து­கொள்­ள­வேண்டும் என்­பது தொடர்­பாக நபிகள் நாய­கத்தின் போத­னை­களில் தெளி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. உலகில் இடம்­பெறும் சண்டை மற்றும் பிரச்­சி­னை­க­ளுக்கு அர­சியல்வாதி­களால் வழங்­கப்­படும் தீர்­வு­க­ளை­விட மதத்­த­லை­வர்­களால் வழங்­கப்­படும் வழி­காட்டல் மற்றும் தீர்­வு­களே சிறப்­பா­னது என நான் நம்­பு­கின்றேன். 

அதே­போன்று அல் குர்ஆன், பைபிள், பக­வத்­கீதை மற்றும் பௌத்த போத­னைகள் அனைத்தும் ஒழுக்­க­முள்ள மனித சமூ­கத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான வழி­காட்­டல்­கள்தான் இன்­றைய நவீன் தொழி­நுட்­பத்­து­ட­னான மனித வாழ்வின் சிறந்த எதிர்­கா­லத்­துக்கும் நல்­லி­ணக்­கத்­துக்கும் அடிப்­ப­டை­யாக இருந்­து­வ­ரு­கின்­றன. இன்று உலகில் இடம்­பெறும் பிரச்­சி­னைகள், சச்­ச­ர­வுகள் தொடர்­பாக பலரும் கதைக்­கின்­றனர். இந்தப் பிரச்­சி­னைகள் சண்­டைகள் அனைத்தும்  அதி­கா­ரத்­துக்கும் வரு­மா­னத்­துக்­குமே மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. இதன் இறுதித் தீர்­வா­வது மனிதன் மற்ற மனி­தனை கொலை­செய்­வ­திலே முடி­வ­டை­கின்­றது

அத­போன்று இன்று உலக நாடுகள் யுத்­தங்கள் இடம்­பெ­று­வதை தடுப்­ப­தற்­காக கலந்­தா­லோ­ச­னை­களை மேற்­கொண்­டு­வ­ரு­கி­ன்றனர். ஆனால் கலந்­து­ரை­யா­டல்கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டி­யது யுத்தம் இடம்­பெறும் நாடு­க­ளுடன் அல்ல. மாறாக யுத்­தத்­துக்கு தேவை­யான ஆயு­தங்­களை தயா­ரிக்கும் தயா­ரிப்­பா­ளர்­க­ளு­டனே கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொள்­ள­வேண்டும் என நான் நம்­பு­கின்றேன். அத்­துடன் உலகில் யுத்த ஆயு­தங்­களை தயா­ரிக்கும் தயா­ரிப்­பா­ளர்கள் அதன் மூலம் தங்கள் வரு­மா­னத்தை ஈட்­டிக்­கொள்­ளாமல் வேறு முறை­களில் வரு­மா­னத்தை தேடிக்­கொள்ள முயற்­சித்தால் உலகில் எங்கும் யுத்தம் இடம்­பெ­றாது.

என­றாலும் அனே­க­மா­ன­வர்கள் யுத்­தத்தை மேற்­கொள்ளும் இரு தரப்­பி­னர்­க­ளுடன் மாத்­தி­ரமே  பேச்­சு­வார்த்­தை­களை நடத்­து­கின்­றனர்.ஆனால் உலகில் இருக்கும் அனைத்து நாட்டு அரச தலை­வர்­களும் யுத்த ஆயு­தங்­களை தயா­ரிப்­பதை தடை­செய்­யு­மாக இருந்தால் அதுவே உலகில் சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு சிறந்த வழி­யாகும் என நான்  நம்­பு­கின்றேன்

மேலும் எமது நாடு பிரித்­தா­னிய ஆட்­சியின் கீழ் இருக்­கும்­போது சிங்­கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அனை­வரும் ஒற்­று­மை­யாக வாழ்ந்­து­வந்­தனர். சகல இனத் தலை­வர்­களும் ஒன்­று­பட்டு போரா­டி­யதால் எமது நாடு பிரித்­தா­னிய ஆட்­சி­யி­லி­ருந்து சுதந்­தி­ர­ம­டைய முடி­யு­மா­கி­யது. என்­றாலும் பிரித்­தா­னிய ஆட்­சி­யி­லி­ருந்து நாங்கள் சுதந்­தி­ர­ம­டைந்­ததன் பின்னர் குறிப்­பாக அர­சியல் அதி­கா­ரத்­துக்காக நாங்கள் பிள­வு­பட ஆரம்­பித்தோம்

நாங்கள் அனைத்து இன­மக்­களும் ஒற்­று­மை­யாக புரிந்­து­ணர்­வுடன் இலங்­கையர் என்ற அடிப்­ப­டையில் வாழ்­வதை இலட்­சி­ய­மா­கக்­கொண்டு செயற்பட்டால் நாங்கள் எதிர்பார்க்கும் சமாதானமான சமூகம் ஒன்றை கட்டியெழுப்பமுடியும்.  நாங்கள் கதைக்கும் நல்லிணக்கத்தை அடைந்துகொள்வதென்றால் எங்களை விட மற்றவர்களின்  உரிமைகளை மதித்து  ஒற்றுமையாக வாழ்வதற்கு முயற்சிக்கவேண்டும் 

எனவே, ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையம் சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரம் மற்றும் வழிகாட்டல்கள் அமைச்சுடன் இணைந்து நடத்தும் இம்மாநாட்டின் ஊடாக நாட்டில் நல்லிணக்கம் மற்றும் இனங்களுக்கிடையிலான சகவாழ்வு ஏற்படப் பிரார்த்திக்கின்றேன் என்றார்.

Comments