மாஷா அல்லாஹ்: கிண்ணியா துவரங்குள பகுதியில் வீடில்லாத முஸ்லிம் குடும்பத்துக்கு பலன் கிட்டும் தருணம்

நான் கடந்த 22.04.2017. ம் திகதி சுட்டி காட்டிய கிண்ணியா துவரங்குளத்தில் மிக ஏழ்மையாக வாழும் பிச்சை தம்பி சம்சுதீன் ( அஷ்ரப்) என்பவறுடைய குடிசை பதிவு பல மீடியாக்களின் பார்வையை கவர்ந்ததுள்ளது. அத்துடன் இவறுக்கு உதவ பலர் பின்னூட்டம் செய்திருந்தீர்கள்.

பல இளைஞர்கள் அவர்களது வீடுகளை நோக்கி வந்து நலம் விசாரித்ததுடன் அவர்களுக்கு உதவ முன் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது அல்லாஹ் உங்கள் என்னதுக்கு நற்கூலி தர எமது பிராத்தனைகள்.

அஷ்ரப் என்பவரது வீட்டுக்கருகில் சுமார் 20 அடி ஆழமான கிணறுள்ளது இதனை தோண்டிய அஷ்ரப் தண்ணீர் வராததால் பணமில்லாததால் மேலும் அதனை தோண்டி எடுக்கும் முயற்சியை கைவிட்டுள்ளார்.

இது எவ்வித பாதுகாப்புமில்லாமல் இருப்பதுடன் இங்குள்ள மாற்றுதிரனாளிகளாக காணப்படும் குழந்தைகள் அடிக்கடி பாதுகாப்பில்லாமல் நடமாடுவது மேலும் கவலையளிக்கிறது.

இன்று 24.04.2017 காலையில் ஒரு கிண்ணியா இளைஞன் தன்னை இனங்காட்டி கொள்ளாத ஒருவர் அங்கு ஒரு வீட்டை கட்ட வேண்டும் என்ற என்னதுடன் 2 டிப்பர் 6’x9′ கருங்கல் 6 கியூப் கொடுத்து உதவியதுடன் 3 கியூப் டிப்பர் மண்ணும் கொடுத்துவியுள்ளார்.

இவரது என்னங்கள் பாராட்ட பட வேண்டும் என்பதுடன் இது போன்ற உதவிகள் மேலும் அவ்வீட்டை கட்ட தேவைப்படுகிறது.

யா அல்லாஹ் எவ்வித எதிர்பார்ப்புமில்லாமல் உனது திருப்ப பொருத்திற்காக மாத்திரம் செயற்படும் இவர் போன்ற இளைஞர்களின் சொத்துக்களில் பெருக்கத்தில் அருள்புரிந்துவிடு.

அவறுக்கும் அங்குடும்பதுக்கு உதவி செய்ய முன் வந்த அனைவறுக்கும் உதவி செய்திடுவாயாக. அவர்களது ஆரோக்கியத்தை பாதுகாத்தருள் ரப்பே!ஆமீன்

உதவி செய்ய விரும்புவோர் அவரது கணக்கிலக்கதுக்கு உதவும்.

தெடர்பு: துவரங்குளம் (பள்ளிக்கருகில் )
கிண்ணியா
0766708811

PICHAITHAMPI SAMSUDEEN 094-2-002-9-0048079
Peoples Bank-மக்கள் வங்கி

Comments