தேர்தல் தாமதமாவதற்கு மஹிந்த அரசே காரணம்


முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு
கடந்த அர­சாங்­கத்­தினால் எல்லை நிர்­ணய செயற்­பா­டுகள் முறை­யாக நடந்­தி­ருக்­கு­மாயின் தற்­போது உள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்­தலை காலந்­தாழ்த்த வேண்­டிய தேவை நல்­லாட்­சிக்கு ஏற்­பட்­டி­ருக்­காது, தேர்தல் தாம­த­மா­வ­தற்கு மஹிந்த அர­சாங்­கமே காரணம் என ஐக்­கிய தேசிய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் கொழும்பு மாவட்ட அபி­வி­ருத்திக் குழு இணை தலை­வ­ரு­மான முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.

அத்­துடன் முன்­னைய ஆட்­சிக்­கா­லத்தின் போது அதி­க­மான தொகு­திகள் சிறி­லங்கா சுதந்­திர கட்­சியின் வெற்­றிக்கு சாத­க­மான வகை­யி­லேயே எல்லை பிரிக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தல்­களில் ஏற்­பட்­டி­ருக்கும்  கால­தா­ம­தத்­தினால் நாட்டு மக்­களின் ஜன­நா­யக உரிமை பறிக்­கப்­ப­டு­வ­தாக எழுந்­துள்ள குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்
அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளி­னது தொகு­தி­க­ளுக்­கான எல்லை நிர்­ணய அறிக்­கையை தயா­ரிப்­பதில் ஏற்­பட்ட கால­தா­ம­தமே அத்­தேர்­தலை உரிய காலத்தில் நடத்­து­வதில் அர­சாங்­கத்­துக்கு பெரும் சிக்­கலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

கடந்த அர­சாங்­கத்­தினால் எல்லை பகுப்பு செயற்­பா­டுகள் முறை­யாக நடந்­தி­ருக்­கு­மாயின் தற்­போது உள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்­தலை காலந்­தாழ்த்த வேண்­டிய தேவை அர­சாங்­கத்­துக்கு ஒரு­போதும் ஏற்­பட்­டி­ருக்­காது. மேலும் கடந்த அர­சாங்கம் அதி­கா­ரத்­தி­லி­ருந்த போது அதி­க­மான தொகு­திகள் சிறி­லங்கா சுதந்­திர கட்­சியின் வெற்­றிக்கு சாத­க­மான வகை­யி­லேயே வகுக்­கப்­பட்­டி­ருந்­தது. இச்­செ­யற்­பா­டா­னது கட்­சி­க­ளுக்­கி­டை­யி­லான முரண்­பா­டுகள் ஏற்­ப­டு­வ­தற்கு வழி­வ­குத்­தி­ருந்­தது.

இந்­நி­லை­யி­லேயே புதி­தாக மீண்டும் எல்லை நிர்­ணயம் செய்­யப்­பட வேண்­டிய அவ­சியம் ஏற்­பட்­டது. இருப்­பினும் புதிய முறையில் தேர்தல் நடத்­தப்­பட்டால் தங்­க­ளுக்­கான பிர­தி­நி­தித்­துவம் குறையும் என சிறு­பாண்மை கட்­சிகள் தொடர்ந்தும் வலி­யு­றுத்தி வரு­வதால் சகல கட்­சி­களும் ஏற்­றுக்­கொள்ளும் வகையில் முன்­வைக்­கப்­படும் தேர்தல் முறை அமைய வேண்­டு­மென்­பதில் ஐக்­கிய தேசிய கட்சி உறு­தி­யா­ன­தொரு நிலைப்­பாட்­டுடன் இருக்­கின்­றது. இவ்­வா­றான கார­ணங்­களே தேர்தல் நடத்­தப்­ப­டாமல் இருப்­ப­தற்­கான கார­ணமே தவிர தேர்தல் வெற்றி மீது எமக்கு எவ்­வித அச்­சமும் இல்லை.  

குறித்த தேர்­தலில் ஏற்­பட்­டி­ருக்கும் கால­தா­ம­தத்தின் அடிப்­ப­டை­களை தெரிந்­துக்­கொள்­ளா­த­வர்கள் தேர்தல் வெற்றி மீது அர­சாங்­கத்­துக்கு இருக்கும் அச்­சமே அர­சாங்­கத்­தினால் தொடர்ந்தும் தேர்­தல்கள் புறக்­க­ணிக்­கப்­ப­டு­வ­தாக எம்­மீது பலர் போலி­யான குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து வரு­கின்­றனர். 

தற்­போது தயா­ரிக்­கப்­பட்­டி­ருக்கும் தொகு­தி­க­ளுக்­கான எல்லை நிர்­ணயம் அறிக்கை தொடர்பில் அதன் குறை­நி­றைகள் தொடர்ந்தும் ஆரா­யப்­பட்­டு­வ­ரு­கின்­றது.

எனினும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான கால எல்லை தற்போது நிறைவடைந்திருக்கும் நிலையில் விரைவில் அத்தேர்தலை  நடைமுறையிலிருக்கும் விருப்பு வாக்கு முறையினூடாக நடத்துவதற்கும் அடுத்த தேர்தலில் இருந்து புதிய தேர்தல் முறைகளை கையாள்வது குறித்தும் அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் அழுத்தங்களை வழங்கிவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

Comments