இறக்காமம் கந்தூரி விவகாரம் : இரு சமையற்காரர்களுக்கு தொடர்ந்தும் தடுப்புக்காவல்
-விடி வெள்ளி
அம்பாறை இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வாங்காமத்தில் வழங்கப்பட்ட கந்தூரி உணவு நஞசானது தொடர்பில் கைது செய்யப்பட்டு அம்பாறை மாவட்ட நீதிமன்றத்தினால் இரண்டு இலசட்சத்து 50ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்ட இரு சமையல்காரர்களுக்கும் பிணையை ஏற்க எவரும் முன்வராததால் அவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட சரீரப் பிணைக்கு முன்வருவோர் தமனைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்டவராக இருக்க வேண்டும் என்ற நீதிமன்ற நிபந்தனையை அடுத்து இதற்கு இப்பிரதேசத்தைச் சேர்ந்த எவரையும் முன் நிறுத்தாததால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த புதன்கிழமை 5 ஆம் திகதி இறக்காமம் பிரதேசத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக திடீரென ஏற்பட்ட அனர்த்தத்தின்போது பாதிக்கப்பட்ட மக்கள் உண்ட உணவை சமைத்த சமையல்காரர்களான அக்கரைப்பற்று முதலாம் பிரிவைச் சேர்ந்த சுபைதீன் முன்சீக், அலியார் றிகாஸ் ஆகியோர் சந்தேகத்தின் பேரில் தமனை பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
இவர்கள் இருவரையும் எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, தமனை பொலிஸார் அன்னதானம் வழங்கிய வாங்காமம் முகையித்தீன் ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் மற்றும் செயலாளர் உட்பட சமையலுக்காக வழங்கப்பட்ட மாட்டு சொந்தக்காரர்கள் நால்வரையும் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.
அத்துடன் குறிப்பிட்ட மாடுகளை அறுத்த மௌலவியையும், மேலுமொரு நபரையும் பொலிஸார் விசாரணைக்குட்படுத்தியுள்ளதாக தெரிய வருகிறது.
இது இவ்வாறு இருக்க பகுப்பாய்வுக்காக பொலிஸாரால் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்ட சமையலுக்காக பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் மாதிரிகளின் அறிக்கை சித்திரைப் புத்தாண்டு விடுமுறையால் சற்றுத் தாமதமாகலாமென பொலீஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, இறக்காமம் பிரதேசத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.அலாவுதீன் தெரிவித்தார்.
தற்போது அம்பாறை, சம்மாந்துறை, கல்முனை, அக்கரைப்பற்று, பாலமுனை, அட்டாளைச்சேனை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் குணமடைந்து வருவதாகவும் மேலும் குறிப்பிட்டார்.
மேற்படி சம்பவத்தில் மூவர் மரணமடைந்ததுடன் 1000க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளானதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அம்பாறை இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வாங்காமத்தில் வழங்கப்பட்ட கந்தூரி உணவு நஞசானது தொடர்பில் கைது செய்யப்பட்டு அம்பாறை மாவட்ட நீதிமன்றத்தினால் இரண்டு இலசட்சத்து 50ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்ட இரு சமையல்காரர்களுக்கும் பிணையை ஏற்க எவரும் முன்வராததால் அவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட சரீரப் பிணைக்கு முன்வருவோர் தமனைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்டவராக இருக்க வேண்டும் என்ற நீதிமன்ற நிபந்தனையை அடுத்து இதற்கு இப்பிரதேசத்தைச் சேர்ந்த எவரையும் முன் நிறுத்தாததால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த புதன்கிழமை 5 ஆம் திகதி இறக்காமம் பிரதேசத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக திடீரென ஏற்பட்ட அனர்த்தத்தின்போது பாதிக்கப்பட்ட மக்கள் உண்ட உணவை சமைத்த சமையல்காரர்களான அக்கரைப்பற்று முதலாம் பிரிவைச் சேர்ந்த சுபைதீன் முன்சீக், அலியார் றிகாஸ் ஆகியோர் சந்தேகத்தின் பேரில் தமனை பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
இவர்கள் இருவரையும் எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, தமனை பொலிஸார் அன்னதானம் வழங்கிய வாங்காமம் முகையித்தீன் ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் மற்றும் செயலாளர் உட்பட சமையலுக்காக வழங்கப்பட்ட மாட்டு சொந்தக்காரர்கள் நால்வரையும் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.
அத்துடன் குறிப்பிட்ட மாடுகளை அறுத்த மௌலவியையும், மேலுமொரு நபரையும் பொலிஸார் விசாரணைக்குட்படுத்தியுள்ளதாக தெரிய வருகிறது.
இது இவ்வாறு இருக்க பகுப்பாய்வுக்காக பொலிஸாரால் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்ட சமையலுக்காக பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் மாதிரிகளின் அறிக்கை சித்திரைப் புத்தாண்டு விடுமுறையால் சற்றுத் தாமதமாகலாமென பொலீஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, இறக்காமம் பிரதேசத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.அலாவுதீன் தெரிவித்தார்.
தற்போது அம்பாறை, சம்மாந்துறை, கல்முனை, அக்கரைப்பற்று, பாலமுனை, அட்டாளைச்சேனை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் குணமடைந்து வருவதாகவும் மேலும் குறிப்பிட்டார்.
மேற்படி சம்பவத்தில் மூவர் மரணமடைந்ததுடன் 1000க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளானதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment