காலி ஸியாரம் உடைப்பு விவ­காரம் : உரிய விசா­ரணை நடத்த வேண்டும்


பாது­காப்பு செய­லாளரிடம் மு.கா.கோரிக்கை
காலி கோட்டை இரா­ணுவ முகாம் பாது­காப்பு வல­யத்­தினுள் கடற்­க­ரையில் அமைந்­துள்ள ஷெய்ஹ் ஸாலிஹ் வலி­யுல்லாஹ் ஸியா­ரத்தின் பாது­காப்பு மதில் இனந்­தெ­ரி­யாத நபர்­களால் சேத­மாக்­கப்­பட்ட சம்­பவம் குறித்து பாது­காப்பு செய­லாளர் உரிய விசா­ர­ணை­களை மேற்­கொள்ள வேண்­டு­மென தேசியப் பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எச்.எம்.சல்மான் கோரிக்கை விடுத்­துள்ளார்.

தற்­பொ­ழுது வெளி­நாடு சென்­றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர்  அமைச்சர் ஹக்­கீமின் பணிப்பின் பேரில் சல்மான் எம்.பி. பாது­காப்பு செய­லா­ள­ரிடம் இவ்­வாறு வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

காலி ஒல்­லாந்தர் கோட்டை நிர்­மா­ணிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­னி­ருந்தே  குறிப்­பிட்ட பிர­தே­சத்தில் ஸியா­ரமும், அதனை அண்­டி­ய­தாக சுத்­த­மான குடிநீர்க் கிணறும்  காணப்­ப­டு­கின்­றன. "பத்­தி­ரி­மலை" என்று அழைக்­கப்­படும் மேற்­படி ஸியாரம் சம்­பந்­த­மாக காலி நகர பூர்­வீக வர­லாறு  தொடர்பில்  பேரா­சி­ரியர்  பந்து சேன­கு­ண­சே­கர  எழு­தி­யுள்ள ஆய்வு நூலிலும்  குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

எமன் நாட்­டி­லி­ருந்து ஆன்­மீக நோக்­க­மாக இங்கு வந்த முஸ்லிம் பெரியார்  ஷெய்ஹ் ஸாலிஹ் வலி­யுல்லாஹ் அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக கூறப்­படும் இந்த ஸியாரம் அமைந்­துள்ள இடத்தை சேதப்­ப­டுத்த விஷ­மிகள் மேற்­கொண்ட முயற்­சி­யா­னது தொன்­மை­யான முஸ்லிம்களின் மரபுரிமை சார்ந்த அடையாளங்களை இல்லாதொழிப்பதற்கான இன்னுமொரு சதிமுயற்சியென பலமாக சந்தேகிக்கப்படுகிறது.

Comments