முஸ்லிம் சமய விவகார அமைச்சின் விதந்துரை கடிதம் வேண்டும்


தம்புள்ளை பள்ளிவாசல் நிருவாகத்திடம் நகர அபிவிருத்தி அதிகார சபை கோரிக்கை 
நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை தம்­புள்ளை பள்­ளி­வா­ச­லுக்கு மாற்றுக் காணி வழங்­கு­வ­தற்­காக முஸ்லிம் சமய மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சின் விதந்­துரை கடி­த­மொன்­றினை பெற்றுத் தரு­மாறு தம்­புள்ளை பள்­ளி­வாசல் நிர்­வாக சபையின் உதவிச் செய­லாளர் எஸ்.எச்.எம்.ரவூப் தெரி­வித்தார்.

இது தொடர்­பாக நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை பள்­ளி­வாசல் நிர்­வாக சபைக்கு கடி­த­மொன்­றினை அனுப்பி வைத்­துள்­ள­தா­கவும் கூறினார்.

அமைச்சின் விதந்­துரை கடிதம் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபைக்கு அனுப்பி வைப்­பதில் ஏற்­பட்­டுள்ள தாமதம் தொடர்பில் அமைச்­சரின் செய­லாளர் எம்.எச். எம். பாஹி­மிடம் வின­வி­ய­போது, பள்­ளி­வாசல் மற்றும் வக்பு சொத்­து­களை வக்பு சபையே நிர்­வகித்து வரு­வ­தா­கவும் குறிப்­பிட்ட விதந்­துரை கடி­தத்தை வக்பு சபை விரைவில் அனுப்பி வைக்க ஏற்­பாடு செய்­யப்­ப­டு­மெ­னவும் அவர் தெரி­வித்தார்.

தம்­புள்ளை ஹைரியா ஜும் ஆ பள்­ளி­வாசல் விவ­காரம் 2012 ஆம் ஆண்­டி­லி­ருந்து தீர்க்கப்படாது இழுத்தடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Comments