வில்­பத்து விவ­காரம் முஸ்லிம் எம்.பி.க்கள் உலமா சபை சந்திப்பு


ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் பாது­காக்­கப்­பட்ட வன பிர­தே­ச­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்ட வில்­பத்து வர்த்­த­மானி அறி­வித்தல் தொடர்பில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­ட­னான சந்­திப்­பொன்­றினை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை இன்று வெள்­ளிக்­கி­ழமை மாலை 7 மணிக்கு கொழும்பில் நடத்­த­வுள்­ளது. 


அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்­தியின் தலை­மையில் உலமா சபையின் தலை­மை­யக கேட்போர் கூடத்தில் நடை­பெ­ற­வுள்ள இச்­சந்­திப்பில் ஜனா­தி­ப­தியின் வன பிர­க­டன வர்த்­த­மானி தொடர்பில் கூடிய கவனம் செலுத்­தப்­ப­ட­வுள்­ளது. 

இச்­சந்­திப்பில் பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் உறுப்­பி­னர்கள், சிவில் சமூக அமைப்பின் பிர­தி­நி­திகள், சட்­டத்­த­ர­ணிகள் துறைசார் நிபு­ணர்கள் என்போர் கலந்து கொள்­ள­வுள்­ளனர்.வில்­பத்து விவ­காரம் உட்­பட சமூகம் சார்ந்த விட­யங்­களில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தமது கட்சி மற்றும் கொள்கை வேறு­பா­டு­களை மறந்து ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்டும் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை அறி­வு­றுத்­த­வுள்­ளது. 

அனை­வரும் ஒன்­று­ப­டு­வதன் மூலம் சமூ­கத்தின் பிரச்­சி­னை­களை தீர்த்­துக்­கொள்ள முடியும் என்­ப­த­னையும் தெளி­வூட்­ட­வுள்­ளது. 
நிகழ்வில் வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்ற உரி­மைகள் எவ்­வாறு மறுக்­கப்­பட்­டுள்­ளது என்­பது தொடர்பில் பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ்வும், இதனை சட்டரீதியாக எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வும் விளக்கமளிக்கவுள்ளனர். 

Comments