HIV AIDS ஆபத்து...
- எம்.எம்.ஏ.ஸமட் -
இனவாதிகளும் அவர்களின் செயற்பாடுகளும் சமூக நல்லிணக்கத்தை ஆபத்துக்குள் தள்ளிவிடும் சமகாலத்தில், புதிய தலைமுறையினரின் விழுமம் கடந்த செயற்பாடுகள் அவர்களை ஆபத்தின் எல்லைக்கு இழுத்துச் செல்கிறது.
மனித நடத்தையின் நன்மை, தீமைகளை நிர்ணயிப்பது விழுமியமாகும். மனிதனுக்குள்ள சுதந்திரம் காரணமாக அவனுடைய செயற்பாடுகள் விழுமியத் தன்மை பெறுகின்றன. விழுமியங்கள் மனித வாழ்வை நெறிப்படுத்தி வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகிறது. ஆனால், வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும் விழுமியச் செயற்பாடுகள் சமகாலத்தில் மக்களிடையே குறிப்பாக நாகரிக போதைக்குள் மூழ்கிக்கொண்டிருக்கும் பெரும்பாலான இளைஞர், யுவதிகளிடையே இல்லாமல் போய்விட்டது. அதனால், பலரின் வாழ்க்கைப் பயணங்கள் திசைமாறி ஆபத்துக்கள் நிறைந்ததான அழிவின் விளிம்பில் தொங்கிக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது.
மனிதன் வாழ்வில் முழுமைபெற வாழ்க்கை பற்றி சரியான மதிப்பீடுகளைக் கொண்டிருக்க வேண்டும். தனது வாழ்வோடு தொடர்புடைய யதார்த்த நிகழ்வுகளில் அறிவியல், ஆன்மீகம், ஒழுக்கம் ஆகிய நெறிகளில் வாழ்வை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியங்களை வகுத்துக்கொள்ள வேண்டும். வாழ்வு பற்றிய இலட்சியங்கள்தான் மனித சமூகத்திற்கு வளர்ச்சியையும், நிலையான தன்மையையும் கொடுக்கும்.
அந்த இலட்சியங்களை அடைந்துகொள்வதற்கான விழுமியங்கள் வாழ்வில் சரியான முறையில் கடைப்பிடிக்கப்படுவது காலத்தின் தேவையாகவுள்ளது. அவ்வாறு விழுமியங்கள் கடைப்பிடிக்கப்படாத நிலையில் அவை ஆபத்துக்களை விலையாக அடைந்து கொள்ளச் செய்துவிடுவதை அன்றாடம் நடந்தேறும் நிகழ்வுகள் மூலம் அவதானிக்க முடிகிறது.
19ஆம் நூற்றாண்டின் பின்னர் உலகில் ஏற்பட்ட சமூக, விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சியானது நாகரிகமுள்ள மனித வாழ்வின் விழுமியங்களை மாசுபடுத்தியதாக அமைந்துவிட்டது என்று கூறுவதில் தவறேதுமிருக்காது. நாகரிகம் என்ற மாயைக்குள் மனிதகுலம் புதைந்து, ஒழுக்கத்தையும் ஆன்மீகத்தையும் மறந்து, மனித வாழ்வுக்கும் மிருக வாழ்வுக்கும் வித்தியாசமில்லை என்றதொரு நிலையை ஏற்படுத்திக்கொண்டதன் விளைவாக, அஞ்சி ஒதுங்கக் கூடிய, கேவலமாகச் சித்தரிக்கப்படக்கூடிய பல விளைவுகளுக்கு மனித சமுதாயம் ஆளாகிக்கொண்டிருக்கிறது.
விழுமியம் மீறும் நாகரிகம்
மதங்களும், மதத்தலைவர்களும் போதிக்கும் ஒழுக்கவிழுமியமிக்க நல்வாழ்வுக்கான போதனைகளும், வழிகாட்டல்களும் பின்பற்றப்படாது, அவற்றினை உதாசீனம் செய்து, தமது மனவெழுச்சிகளுக்கு அடிமையாகி நாகரிகம் என்ற போர்வையில் அநாகரிகத்துக்குள் சிக்கிச் சீரழிந்ததன் விளைவாக ஆபத்துக்கள் நிறைந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு மானிட வர்க்கம் தள்ளப்பட்டுள்ளது.
புறக்கணிக்கத்தக்கதொரு கூட்டத்தைத் தவிர மதங்களை ஏற்றுக்கொள்பவர்கள், அந்த மதங்கள் வகுத்த நேரிய வழியில் தங்களது வாழ்க்கையை அமைத்துக்கொள்வதைத் தவிர்த்து, ஒழுக்க விழுமியமற்ற முறைமைகளை நாகரிகமென்றெண்ணி அவற்றையே கடைப்பிடித்து வாழ முற்பட்டதன் காரணமாக, குறிப்பாக இளைஞர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாதல், எயிட்ஸ், ஹர்பிஸ், கொனேரியா, சிபிலிஸ் போன்ற பாலியல் நோய்களுக்கு ஆளாதல், ஆளுமை உளக் கோளாறுகள் போன்ற உளரீதியான பிரச்சினைகளுக்கு உட்படுதல், வேலையில்லாத்திண்டாட்டம், பொருளாதாரப் பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகளுக்கு அவர்களை முகங்கொடுக்கச் செய்துள்ளது.
மதங்கள் அங்கீகரிக்காத அவை தடுத்த, பாவங்கள் எனப் பிரகடனப்படுத்திய விபசாரத்தையும், ஒருபால் பாலியல் தொடர்புகளையும் ஒரு சில உலக நாடுகள் அங்கீகரித்ததன் காரணமாக, இந்நாடுகளில் பாலியல் தொடர்பான நோய்கள் குறிப்பாக எயிட்ஸ் என்ற ஆட்கொல்லி நோய்த்தொற்று ஆபத்து அதிகரித்துக்காணப்படுவதையும் உலகளாவிய புள்ளிவிபரங்களின் ஊடாக அறிய முடிகிறது. உலகில் 77 நாடுகளின் சட்டங்கள் இந்த ஒருபால் உறவுக்கு தடை விதித்துள்ளதுடன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உட்பட 22 நாடுகளின் சட்டங்கள் இதற்கு அங்கீகாரம் வழங்கியிருக்கின்றன. இந்த 22 நாடுகளிலும் காணப்படும் பாலியல் நோய்களுக்கு பிரதான காரணமாக ஒருபால் உறவு காணப்படுவதையும் சுட்டிக்காட்டுவது அவசியமாகும்.
இவ்வாண்டின் ஆரம்பத்தில் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையற்ற வரப்பிரசாதங்களை வழங்குவதற்கு ஒருபால் உறவை அங்கீகரிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனையாக விதித்ததையும் அதனால், விழுமியங்களோடு வாழ விரும்பும் மக்களும், மதத்தலைவர்களும் அதற்கெதிராக கொதித்தெழுந்ததையும் அவற்றின் காரணமாக அரசியலில் வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டதையும் இங்கு நினைவு கூரத்தக்க விடயங்களாகக் கொள்ளலாம்.
மனித உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டுமென்ற போர்வையில் உலக நாடுகள் சிலவற்றில் அநாகரிகத்துக்கும் அசிங்கத்திற்கும் வழங்கப்பட்டுள்ள சுதந்திரமானது இத்தகைய ஆபத்துக்களினால் பெறுமதிமிக்க மனித வாழ்நாட்களைச் சுருக்கிக்கொண்டுவிட்டது என்பதே நிதர்சனமாகும்.
அசிங்கமான சுதந்திரங்களை சுதந்திரமாக அனுபவிக்க முற்படுவோர் ஆபத்துக்களை சுதந்திரமாக, சுயமாகவே வரவழைத்துக்கொள்கிறார்கள். குறிப்பாக தகாத பாலியல் உறவுகளுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் அல்லது திரைமறைவில் மேற்கொள்ளப்படுகின்ற ஒழுக்க விழுமியமற்ற தகாத பாலியல் தொடர்புகள் கொனரியா, சிபிலிசு, பாலுறுப்பு உண்ணிகள், ஹர்பீஸ் சிம்பிலெக்ஸ், இரய்கோ மொனாரிஸ், எயிட்ஸ் போன்ற பாலியல் தொடர்பான நோய் ஆபத்துக்களை ஏற்படுத்துகின்றன. இவை வாழ்வின் இலட்சியங்களைச் சிதைத்து அவமானத்தோடு வாழ்நாட்களை தொடரச் செய்கிறது. இறை தண்டனைக்கும் ஆளாக்குகிறது. விழுமியங்கள் அசிங்கப்படுத்தப்படுகின்றபோது இத்தகைய ஆபத்துக்கள் தொடர்கதையாகத் தொடர்கிறது என்றுதான் கூற வேண்டும்.
பாலியல் தொடர்பான நோய்களில் மனித ஆயுளை ஆட்டம் காணச் செய்யும் எச்.ஐ.வி. தொற்று அல்லது எயிட்ஸ் என்ற உயிர்கொல்லிப் பாலியல்தொற்று நோயானது உலகையே இன்று அதிர்ச்சிக்குள் தள்ளிக்கொண்டிருக்கிறது. ஆரோக்கியமுள்ள சமூகக் கட்டமைப்பை முடமாக்கிக்கொண்டிருக்கிறது.
2015ஆம் ஆண்டின் எயிட்ஸ் தொடர்பான சர்வதேச புள்ளிவிபரங்களின் பிரகாரம் இந்நோய் தொற்று அடையாளம் காணப்பட்ட காலம் முதல் உலக மக்கள் தொகையில் 78 மில்லியன் பேர் எச்.ஐ.வி எயிட்ஸ் நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருப்பதுடன் தற்போது 36.7 மில்லியன் மக்கள் உலகளாவிய ரீதியில் இந்நோய்த்தொற்றுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களில் 1.8 மில்லியன் பேர் சிறுவர்களாவர். 35 மில்லியன் பேர் எயிட்ஸுடன் தொடர்புபட்ட நோயினால் உயிரிழந்திருப்பதாகவும்; 2015ஆம் ஆண்டில் 2.1 மில்லியன் பேர் புதிதாக இந்நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளதுடன் அதில் 150,000 பேர் சிறுவர்கள் எனவும் அவ்விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அது தவிர, உலக சுகாதார ஸ்தபானத்தின் புள்ளிவிபரங்களின் பிரகாரம் வயது வந்த இளைஞர், யுவதிகளும் சிறுவர்களுமே இந்நோய்த் தொற்றுக்கு அதிகளவில் ஆளாகியுள்ளனர். இதன்நிமித்தம், ஆபிரிக்க நாடுகளில் 26.1 மில்லியன் பேரும் வட அமெரிக்க மற்றும் மேற்கு, மத்திய ஐரோப்பிய நாடுகளில் 2.3 மில்லியன் பேரும், இலத்தின் அமெரிக்காவில் 1.6 மில்லியன் மக்களும், கிழக்கு ஐரோப்பிய மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் 1.1மில்லியன் மக்களும் ஆசிய மற்றும் பசுபிக் நாடுகளில் 4.8 மில்லியன் வயது வந்தவர்களும் சிறுவர்களும் எயிட்ஸ் தொற்றுடன் வாழ்; நாட்களை எண்ணிக்கொண்டு வாழ்கிறார்கள்.
இலங்கையும் நாகரிகத்தின் ஆபத்துக்களும்
இலங்கையின் இளவயதினரின் நாகரிக நடத்தைகள் அநாகரிகத்தை நோக்கி நகர்ந்து செல்வதனால் பல்வேறு விளைவுகளுக்கு அவர்கள் முகம்கொடுத்துக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. குறிப்பாக ஆண், பெண் நட்பு என்பது பாலியல் உறவை அடைந்துகொள்வது என்ற அர்தத்திற்குள்ளாகி அதற்கான தவறான வழிகளைத் தேடிக்கொண்டு அலையும் இளைய சமூகத்தின் எண்ணிக்கையை அறைகள் வாடகைக்கு என்ற விளம்பரத்துடன் அதிகரிக்கப்பட்டுள்ள வியாபாரத்தை கணிப்பிட்டுக் கண்டு கொள்ள முடிவதுடன், ஒவ்வொரு வருடத்திலும் பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்ற காதலர் தினத்தில் வாடகைக்காகப் பதிவு செய்யப்படுகின்ற அறைகளின் எண்ணிக்கையைக் கொண்டும் மதிப்பிட்டுக்கொள்ள முடிகிறது.
இவ்வாறான தகாத உறவுகளினால் ஏற்படுகின்ற இந்நோய்களினால் பாதிக்கப்படுகின்றவர்களின் எண்ணிக்கையில் கணிசமான எண்ணிக்கையினர் இளவயதினராக உள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டுகிறது. இலங்கையில் 10 வயதிற்கும் 19 வயதுக்குமிடைப்பட்டவர்கள் பாலியல் நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர் என்ற அதிர்ச்சித் தகவல்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருப்பதோடு எதிர்கால சந்ததியினரின் இந்த ஆபத்தான நிலை குறித்து சகலரும் சிந்திப்பதையும் அவசியமாக்கியிருக்கிறது.
பாலியல் சம்பந்தமான நோய்களுக்காக சிகிச்சை பெற வருவோரில் பாடசாலை மாணவ, மாணவிகளும் இருப்பதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவை தொடர்பில் பெற்றோர்களும், ஆசிரியர் சமூகத்தினரும் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டுமென வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதுடன், எதிர்காலத்தில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் பாலியல் நோய்கள் பரவும் ஆபத்திருப்பதாக எச்சரித்துமுள்ளனர். அண்மையில் அளுத்கமைப் பிரதேசத்தைச் சேர்ந்த இரு பாடசாலை மாணவிகள் எயிட்ஸ் நோய்த்தொற்றுக்குள்ளாகி இருந்தமை அடையாளம் காணப்பட்டுள்ளதானது இந்த வைத்தியர்களின் எச்சரிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நோய்த்தொற்று அதிகளவில் தகாத பாலியல் நடத்தைகளின் காரணமாகவே ஏற்படுகிறது. விழுமியங்கள் அசிங்கப்படுத்தப்பட்டு இடம்பெறுகின்ற விபசாரமும், ஒருபால் உறவும் உலகில் மலிந்து கிடக்கிறது. மதங்களையும், கலாசாரத்தையும் மதிக்கின்ற நமது நாட்டிலும் விபசாரம் அதிகரித்துவிட்டது. மசாஜ் சிகிச்சை நிலையங்கள் என்ற போர்வையில் நடாத்தப்படுகின்ற பல விபசார நிலையங்கள் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் அவ்வப்போது கைது செய்யப்படும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன.
சமூக வலைத்தளங்கள் என்றும் கையடக்கத் தொலைபேசி என்றும் தொழில் நுட்ப வளர்ச்சி ஏற்படுத்தியுள்ள வசதிகளின் காரணமாக தகாத உறவுகள் ஏற்பட்டு அதனால் கட்டிக்காக்கப்பட வேண்டிய ஒழுக்க விழுமியங்கள் சிதைக்கப்பட்டு வருகின்றன.
தகாத பாலியல் உறவுகளினால் பாலியல் நோய்கள் மாத்திரமல்ல உயிர் பலிகளும் ஏற்படுகின்றமை இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தைக் கேள்விக்குற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிடுகின்றனர்.
இலங்கையில் 96 வீதமானோர் பாலியல் காட்சிகளைப் பார்ப்பதற்கும் பிறரின் குற்றங்களைப் பகிர்ந்து கொள்வதற்குமே இணையங்களைப் பயன்படுத்துவதாக களனிப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரோஹண லக் ஷ்மன் பியதாச அண்மையில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகின்றபோது குறிப்பிட்டுள்ளார்.
இதிலிருந்து நாகரிகத்தின் வெளிப்பாடுகள் அநாகரிகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதையும் தகாத பாலியல் உறவுகள் அவசியமற்ற கருக்கலைப்புக்களையும் சிசுக்கொலைகளையும் இலங்கையில் அதிகரிக்கச் செய்துள்ளமையைக் காண முடிகிறது.
வருடமொன்றுக்கு 400,000 பெண்கள் கருவுறுகின்றபோதிலும், இதில் 15,000 கருக்கள் சட்டவிரோதமாகக் கருக்கலைப்புச் செய்யப்படுகின்றன. இச்சட்டவிரோத கருக்கலைப்பினால் கருவுறுகின்ற பெண்களில் 10 வீதத்தினர் உயிர் இழக்கின்றனர். அத்தோடு, 24,000 இளவயதினரும் கர்ப்பமடைவதாகவும், இதற்கு போதிய கல்வி அறிவின்மை, வறுமை, தகாத உறவுகள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் என்பவை காரணமாக இருப்பதாகவும் நாளொன்றுக்கு சராசரி 650 சட்ட விரோதக் கருக்கலைப்புக்கள் இலங்கையில் இடம்பெறுவதாகவும் சுகாதாரத் தரப்புத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
திருமணமாகாத பல யுவதிகள் தகாத உறவின் மூலம் கருவுற்று கருக்கலைப்புச் செய்வதையும், கருவினைக் கலைக்க முடியாதவர்கள் பிள்ளைகளைப் பெற்று அச்சிசுக்களை வீதியோரங்களிலும், காடு, பற்றைகளிலும் எறிந்து விட்டுச் செல்வதையும் அதற்காக அத்தகையவர்கள் கைது செய்யப்படுவதும் இலங்கையில் இடம்பெறுகின்ற குற்றச் செயல்களின் பட்டியலில் ஒன்றாகக் காணப்படுகிறது. நாகரிகம் என்ற போர்வையில் விழுமியங்கள் மாசுபடுத்தப்படுகின்றமைய இந்நிலைமைகளுக்குக் காரணமாகிறது என்பதையும் சுட்டிக்காட்டுவது அவசியமாகும்.
விழுமியக் கல்வியும் ஆபத்துத் தவிர்ப்பும்
அநாகரிகப் போதைக்குள் விழுந்து தத்தளிக்கும் இளம் சமுதாயத்தினருக்கு ஒழுக்க விழுமியங்களாடு வாழ்வதற்கான வழிகாட்டல்கள் வழங்கப்படுவது அவசியமாகும். சமூக, பொருளாதார, குடும்ப சீரழிவை ஏற்படுத்தும் இத்தகைய ஒழுக்கவிழுமியமற்ற நடத்தைப் பிறழ்வுகளிலிருந்து எதிர்கால சமூகத்தைப் பாதுகாக்கவும் ஒழுக்கவிழுமியமிக்க எதிர்கால சமூகத்தை உருவாக்கவும் விழுமியக் கல்வித்திட்டமும் விரசமற்ற பாலியல் கல்வியும் முறையாக பாடசாலைகளில் நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை உணரப்படுவதும் அவசியமாகும்.
இலங்கையில் மாணவப் பருவத்திலுள்ளவர்களும் எயிட்ஸ் தொற்றுகைக்கு உள்ளாகியுள்ளமை தொடர்பில் அவதானம் செலுத்தப்படுகிறது. இது தொடர்பில் மாணவர்களை அறிவூட்டுவதற்காக பாடசாலைகளில் பாலியல் கல்வி நடைமுறைப்படுத்தப்படுகின்றபோது இக்கல்வி நடவடிக்கைகளும் அதன் பாடப்பரப்புக்களும் பாலியல் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாக அமைந்து விடாத வகையில் இப்பாடதுக்கான பாடவிதான அலகுகள் தயார்படுத்தப்படுவது அவசியமாகும்.
சமூக ஒழுங்குப் பிறழ்வுகள், பயில் நிலை வழியாகச் சீர்படுத்தப்பட வேண்டுமாயின் பாடசாலைக் கலைத்திட்டத்தில் அனுபவங்கள் உள்ளடக்கப்பட வேண்டும். பாடசாலைக் கலைத்திட்ட அமைப்பியலையும் அதன் சமகால செயல் நிலைகளையும் ஆராய்ந்து பார்க்கும்பொழுது மாணவர்களிடையேயும் ஒரு சில ஆசிரியர்களிடையேயும் ஆரோக்கிய மனவெழுச்சிக்குரிய பயிற்சிகள் போதாமல் இருப்பது தெளிவாகிறது.
ஆரோக்கியமான மனவெழுச்சிக்குரிய பயிற்சிகளும் விழுமியக் கல்வியும் ஒன்றிணைந்தவையாகக் காணப்படுவது அவசியமாகும். தற்கால மாணவ சமூகத்தின் மனவெழுச்சிகள், மனப்பாங்குகள், நடத்தைக்கோலங்களை உற்றுநோக்குகின்றபோது அவை ஆரோக்கியமானதாக அமையவில்லை என்பதோடு இந்நிலைமைகள் பாடசாலைகளில் விழுமியக் கல்வியை வலியுறுத்தும் நிலையை உருவாக்கியுள்ளதாக கல்வியிலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஏனெனில், ஒழுக்க விழுமியமுள்ள எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் கேந்திரத் தளமாக பாடசாலைகள் மிளிர்கின்றன. பாடசாலைகளிலிருந்து ஒழுக்கவிழுமியமுள்ள எதிர்கால சமூகம் உருவாக்கப்படுவது இன்றியமையாதது.
நடத்தைப் பிறழ்வுகளால், விழுமியமற்ற செயற்பாடுகளால் ஏற்படுகின்ற நோய்கள் முதல் ஏனைய சமூகம் அங்கீகரிக்காத சமூக விரோத நடவடிக்கைகள் சமூகத்தின் மத்தியிலிருந்து ஒழிக்கப்பட வேண்டுமாயின், அதன் ஆபத்துக்கள் அதிகரிக்கப்படாமல் தடுக்கப்பட வேண்டுமாயின் அவை தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முறையாக முன்னெடுக்கப்படுவதுடன் ஒழுக்க விழுமியங்களைப் பேணி நடக்கக் கூடிய ஆரோக்கியமுள்ள எதிர்காலச் சமூகம் கட்டியெழுப்பப்படுவதும் காலத்தின் கட்டாயமாகும். இந்தக் கட்டாயத் தேவை உணரப்பட்டு செயல் உருவப்பெறுகின்ற போதுதான் எதிர்கால சந்தததியினரை ஆபத்துக்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.
இனவாதிகளும் அவர்களின் செயற்பாடுகளும் சமூக நல்லிணக்கத்தை ஆபத்துக்குள் தள்ளிவிடும் சமகாலத்தில், புதிய தலைமுறையினரின் விழுமம் கடந்த செயற்பாடுகள் அவர்களை ஆபத்தின் எல்லைக்கு இழுத்துச் செல்கிறது.
மனித நடத்தையின் நன்மை, தீமைகளை நிர்ணயிப்பது விழுமியமாகும். மனிதனுக்குள்ள சுதந்திரம் காரணமாக அவனுடைய செயற்பாடுகள் விழுமியத் தன்மை பெறுகின்றன. விழுமியங்கள் மனித வாழ்வை நெறிப்படுத்தி வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகிறது. ஆனால், வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும் விழுமியச் செயற்பாடுகள் சமகாலத்தில் மக்களிடையே குறிப்பாக நாகரிக போதைக்குள் மூழ்கிக்கொண்டிருக்கும் பெரும்பாலான இளைஞர், யுவதிகளிடையே இல்லாமல் போய்விட்டது. அதனால், பலரின் வாழ்க்கைப் பயணங்கள் திசைமாறி ஆபத்துக்கள் நிறைந்ததான அழிவின் விளிம்பில் தொங்கிக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது.
மனிதன் வாழ்வில் முழுமைபெற வாழ்க்கை பற்றி சரியான மதிப்பீடுகளைக் கொண்டிருக்க வேண்டும். தனது வாழ்வோடு தொடர்புடைய யதார்த்த நிகழ்வுகளில் அறிவியல், ஆன்மீகம், ஒழுக்கம் ஆகிய நெறிகளில் வாழ்வை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியங்களை வகுத்துக்கொள்ள வேண்டும். வாழ்வு பற்றிய இலட்சியங்கள்தான் மனித சமூகத்திற்கு வளர்ச்சியையும், நிலையான தன்மையையும் கொடுக்கும்.
அந்த இலட்சியங்களை அடைந்துகொள்வதற்கான விழுமியங்கள் வாழ்வில் சரியான முறையில் கடைப்பிடிக்கப்படுவது காலத்தின் தேவையாகவுள்ளது. அவ்வாறு விழுமியங்கள் கடைப்பிடிக்கப்படாத நிலையில் அவை ஆபத்துக்களை விலையாக அடைந்து கொள்ளச் செய்துவிடுவதை அன்றாடம் நடந்தேறும் நிகழ்வுகள் மூலம் அவதானிக்க முடிகிறது.
19ஆம் நூற்றாண்டின் பின்னர் உலகில் ஏற்பட்ட சமூக, விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சியானது நாகரிகமுள்ள மனித வாழ்வின் விழுமியங்களை மாசுபடுத்தியதாக அமைந்துவிட்டது என்று கூறுவதில் தவறேதுமிருக்காது. நாகரிகம் என்ற மாயைக்குள் மனிதகுலம் புதைந்து, ஒழுக்கத்தையும் ஆன்மீகத்தையும் மறந்து, மனித வாழ்வுக்கும் மிருக வாழ்வுக்கும் வித்தியாசமில்லை என்றதொரு நிலையை ஏற்படுத்திக்கொண்டதன் விளைவாக, அஞ்சி ஒதுங்கக் கூடிய, கேவலமாகச் சித்தரிக்கப்படக்கூடிய பல விளைவுகளுக்கு மனித சமுதாயம் ஆளாகிக்கொண்டிருக்கிறது.
விழுமியம் மீறும் நாகரிகம்
மதங்களும், மதத்தலைவர்களும் போதிக்கும் ஒழுக்கவிழுமியமிக்க நல்வாழ்வுக்கான போதனைகளும், வழிகாட்டல்களும் பின்பற்றப்படாது, அவற்றினை உதாசீனம் செய்து, தமது மனவெழுச்சிகளுக்கு அடிமையாகி நாகரிகம் என்ற போர்வையில் அநாகரிகத்துக்குள் சிக்கிச் சீரழிந்ததன் விளைவாக ஆபத்துக்கள் நிறைந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு மானிட வர்க்கம் தள்ளப்பட்டுள்ளது.
புறக்கணிக்கத்தக்கதொரு கூட்டத்தைத் தவிர மதங்களை ஏற்றுக்கொள்பவர்கள், அந்த மதங்கள் வகுத்த நேரிய வழியில் தங்களது வாழ்க்கையை அமைத்துக்கொள்வதைத் தவிர்த்து, ஒழுக்க விழுமியமற்ற முறைமைகளை நாகரிகமென்றெண்ணி அவற்றையே கடைப்பிடித்து வாழ முற்பட்டதன் காரணமாக, குறிப்பாக இளைஞர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாதல், எயிட்ஸ், ஹர்பிஸ், கொனேரியா, சிபிலிஸ் போன்ற பாலியல் நோய்களுக்கு ஆளாதல், ஆளுமை உளக் கோளாறுகள் போன்ற உளரீதியான பிரச்சினைகளுக்கு உட்படுதல், வேலையில்லாத்திண்டாட்டம், பொருளாதாரப் பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகளுக்கு அவர்களை முகங்கொடுக்கச் செய்துள்ளது.
மதங்கள் அங்கீகரிக்காத அவை தடுத்த, பாவங்கள் எனப் பிரகடனப்படுத்திய விபசாரத்தையும், ஒருபால் பாலியல் தொடர்புகளையும் ஒரு சில உலக நாடுகள் அங்கீகரித்ததன் காரணமாக, இந்நாடுகளில் பாலியல் தொடர்பான நோய்கள் குறிப்பாக எயிட்ஸ் என்ற ஆட்கொல்லி நோய்த்தொற்று ஆபத்து அதிகரித்துக்காணப்படுவதையும் உலகளாவிய புள்ளிவிபரங்களின் ஊடாக அறிய முடிகிறது. உலகில் 77 நாடுகளின் சட்டங்கள் இந்த ஒருபால் உறவுக்கு தடை விதித்துள்ளதுடன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உட்பட 22 நாடுகளின் சட்டங்கள் இதற்கு அங்கீகாரம் வழங்கியிருக்கின்றன. இந்த 22 நாடுகளிலும் காணப்படும் பாலியல் நோய்களுக்கு பிரதான காரணமாக ஒருபால் உறவு காணப்படுவதையும் சுட்டிக்காட்டுவது அவசியமாகும்.
இவ்வாண்டின் ஆரம்பத்தில் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையற்ற வரப்பிரசாதங்களை வழங்குவதற்கு ஒருபால் உறவை அங்கீகரிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனையாக விதித்ததையும் அதனால், விழுமியங்களோடு வாழ விரும்பும் மக்களும், மதத்தலைவர்களும் அதற்கெதிராக கொதித்தெழுந்ததையும் அவற்றின் காரணமாக அரசியலில் வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டதையும் இங்கு நினைவு கூரத்தக்க விடயங்களாகக் கொள்ளலாம்.
மனித உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டுமென்ற போர்வையில் உலக நாடுகள் சிலவற்றில் அநாகரிகத்துக்கும் அசிங்கத்திற்கும் வழங்கப்பட்டுள்ள சுதந்திரமானது இத்தகைய ஆபத்துக்களினால் பெறுமதிமிக்க மனித வாழ்நாட்களைச் சுருக்கிக்கொண்டுவிட்டது என்பதே நிதர்சனமாகும்.
அசிங்கமான சுதந்திரங்களை சுதந்திரமாக அனுபவிக்க முற்படுவோர் ஆபத்துக்களை சுதந்திரமாக, சுயமாகவே வரவழைத்துக்கொள்கிறார்கள். குறிப்பாக தகாத பாலியல் உறவுகளுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் அல்லது திரைமறைவில் மேற்கொள்ளப்படுகின்ற ஒழுக்க விழுமியமற்ற தகாத பாலியல் தொடர்புகள் கொனரியா, சிபிலிசு, பாலுறுப்பு உண்ணிகள், ஹர்பீஸ் சிம்பிலெக்ஸ், இரய்கோ மொனாரிஸ், எயிட்ஸ் போன்ற பாலியல் தொடர்பான நோய் ஆபத்துக்களை ஏற்படுத்துகின்றன. இவை வாழ்வின் இலட்சியங்களைச் சிதைத்து அவமானத்தோடு வாழ்நாட்களை தொடரச் செய்கிறது. இறை தண்டனைக்கும் ஆளாக்குகிறது. விழுமியங்கள் அசிங்கப்படுத்தப்படுகின்றபோது இத்தகைய ஆபத்துக்கள் தொடர்கதையாகத் தொடர்கிறது என்றுதான் கூற வேண்டும்.
பாலியல் தொடர்பான நோய்களில் மனித ஆயுளை ஆட்டம் காணச் செய்யும் எச்.ஐ.வி. தொற்று அல்லது எயிட்ஸ் என்ற உயிர்கொல்லிப் பாலியல்தொற்று நோயானது உலகையே இன்று அதிர்ச்சிக்குள் தள்ளிக்கொண்டிருக்கிறது. ஆரோக்கியமுள்ள சமூகக் கட்டமைப்பை முடமாக்கிக்கொண்டிருக்கிறது.
2015ஆம் ஆண்டின் எயிட்ஸ் தொடர்பான சர்வதேச புள்ளிவிபரங்களின் பிரகாரம் இந்நோய் தொற்று அடையாளம் காணப்பட்ட காலம் முதல் உலக மக்கள் தொகையில் 78 மில்லியன் பேர் எச்.ஐ.வி எயிட்ஸ் நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருப்பதுடன் தற்போது 36.7 மில்லியன் மக்கள் உலகளாவிய ரீதியில் இந்நோய்த்தொற்றுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களில் 1.8 மில்லியன் பேர் சிறுவர்களாவர். 35 மில்லியன் பேர் எயிட்ஸுடன் தொடர்புபட்ட நோயினால் உயிரிழந்திருப்பதாகவும்; 2015ஆம் ஆண்டில் 2.1 மில்லியன் பேர் புதிதாக இந்நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளதுடன் அதில் 150,000 பேர் சிறுவர்கள் எனவும் அவ்விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அது தவிர, உலக சுகாதார ஸ்தபானத்தின் புள்ளிவிபரங்களின் பிரகாரம் வயது வந்த இளைஞர், யுவதிகளும் சிறுவர்களுமே இந்நோய்த் தொற்றுக்கு அதிகளவில் ஆளாகியுள்ளனர். இதன்நிமித்தம், ஆபிரிக்க நாடுகளில் 26.1 மில்லியன் பேரும் வட அமெரிக்க மற்றும் மேற்கு, மத்திய ஐரோப்பிய நாடுகளில் 2.3 மில்லியன் பேரும், இலத்தின் அமெரிக்காவில் 1.6 மில்லியன் மக்களும், கிழக்கு ஐரோப்பிய மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் 1.1மில்லியன் மக்களும் ஆசிய மற்றும் பசுபிக் நாடுகளில் 4.8 மில்லியன் வயது வந்தவர்களும் சிறுவர்களும் எயிட்ஸ் தொற்றுடன் வாழ்; நாட்களை எண்ணிக்கொண்டு வாழ்கிறார்கள்.
இலங்கையும் நாகரிகத்தின் ஆபத்துக்களும்
இலங்கையின் இளவயதினரின் நாகரிக நடத்தைகள் அநாகரிகத்தை நோக்கி நகர்ந்து செல்வதனால் பல்வேறு விளைவுகளுக்கு அவர்கள் முகம்கொடுத்துக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. குறிப்பாக ஆண், பெண் நட்பு என்பது பாலியல் உறவை அடைந்துகொள்வது என்ற அர்தத்திற்குள்ளாகி அதற்கான தவறான வழிகளைத் தேடிக்கொண்டு அலையும் இளைய சமூகத்தின் எண்ணிக்கையை அறைகள் வாடகைக்கு என்ற விளம்பரத்துடன் அதிகரிக்கப்பட்டுள்ள வியாபாரத்தை கணிப்பிட்டுக் கண்டு கொள்ள முடிவதுடன், ஒவ்வொரு வருடத்திலும் பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்ற காதலர் தினத்தில் வாடகைக்காகப் பதிவு செய்யப்படுகின்ற அறைகளின் எண்ணிக்கையைக் கொண்டும் மதிப்பிட்டுக்கொள்ள முடிகிறது.
இவ்வாறான தகாத உறவுகளினால் ஏற்படுகின்ற இந்நோய்களினால் பாதிக்கப்படுகின்றவர்களின் எண்ணிக்கையில் கணிசமான எண்ணிக்கையினர் இளவயதினராக உள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டுகிறது. இலங்கையில் 10 வயதிற்கும் 19 வயதுக்குமிடைப்பட்டவர்கள் பாலியல் நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர் என்ற அதிர்ச்சித் தகவல்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருப்பதோடு எதிர்கால சந்ததியினரின் இந்த ஆபத்தான நிலை குறித்து சகலரும் சிந்திப்பதையும் அவசியமாக்கியிருக்கிறது.
பாலியல் சம்பந்தமான நோய்களுக்காக சிகிச்சை பெற வருவோரில் பாடசாலை மாணவ, மாணவிகளும் இருப்பதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவை தொடர்பில் பெற்றோர்களும், ஆசிரியர் சமூகத்தினரும் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டுமென வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதுடன், எதிர்காலத்தில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் பாலியல் நோய்கள் பரவும் ஆபத்திருப்பதாக எச்சரித்துமுள்ளனர். அண்மையில் அளுத்கமைப் பிரதேசத்தைச் சேர்ந்த இரு பாடசாலை மாணவிகள் எயிட்ஸ் நோய்த்தொற்றுக்குள்ளாகி இருந்தமை அடையாளம் காணப்பட்டுள்ளதானது இந்த வைத்தியர்களின் எச்சரிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நோய்த்தொற்று அதிகளவில் தகாத பாலியல் நடத்தைகளின் காரணமாகவே ஏற்படுகிறது. விழுமியங்கள் அசிங்கப்படுத்தப்பட்டு இடம்பெறுகின்ற விபசாரமும், ஒருபால் உறவும் உலகில் மலிந்து கிடக்கிறது. மதங்களையும், கலாசாரத்தையும் மதிக்கின்ற நமது நாட்டிலும் விபசாரம் அதிகரித்துவிட்டது. மசாஜ் சிகிச்சை நிலையங்கள் என்ற போர்வையில் நடாத்தப்படுகின்ற பல விபசார நிலையங்கள் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் அவ்வப்போது கைது செய்யப்படும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன.
சமூக வலைத்தளங்கள் என்றும் கையடக்கத் தொலைபேசி என்றும் தொழில் நுட்ப வளர்ச்சி ஏற்படுத்தியுள்ள வசதிகளின் காரணமாக தகாத உறவுகள் ஏற்பட்டு அதனால் கட்டிக்காக்கப்பட வேண்டிய ஒழுக்க விழுமியங்கள் சிதைக்கப்பட்டு வருகின்றன.
தகாத பாலியல் உறவுகளினால் பாலியல் நோய்கள் மாத்திரமல்ல உயிர் பலிகளும் ஏற்படுகின்றமை இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தைக் கேள்விக்குற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிடுகின்றனர்.
இலங்கையில் 96 வீதமானோர் பாலியல் காட்சிகளைப் பார்ப்பதற்கும் பிறரின் குற்றங்களைப் பகிர்ந்து கொள்வதற்குமே இணையங்களைப் பயன்படுத்துவதாக களனிப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரோஹண லக் ஷ்மன் பியதாச அண்மையில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகின்றபோது குறிப்பிட்டுள்ளார்.
இதிலிருந்து நாகரிகத்தின் வெளிப்பாடுகள் அநாகரிகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதையும் தகாத பாலியல் உறவுகள் அவசியமற்ற கருக்கலைப்புக்களையும் சிசுக்கொலைகளையும் இலங்கையில் அதிகரிக்கச் செய்துள்ளமையைக் காண முடிகிறது.
வருடமொன்றுக்கு 400,000 பெண்கள் கருவுறுகின்றபோதிலும், இதில் 15,000 கருக்கள் சட்டவிரோதமாகக் கருக்கலைப்புச் செய்யப்படுகின்றன. இச்சட்டவிரோத கருக்கலைப்பினால் கருவுறுகின்ற பெண்களில் 10 வீதத்தினர் உயிர் இழக்கின்றனர். அத்தோடு, 24,000 இளவயதினரும் கர்ப்பமடைவதாகவும், இதற்கு போதிய கல்வி அறிவின்மை, வறுமை, தகாத உறவுகள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் என்பவை காரணமாக இருப்பதாகவும் நாளொன்றுக்கு சராசரி 650 சட்ட விரோதக் கருக்கலைப்புக்கள் இலங்கையில் இடம்பெறுவதாகவும் சுகாதாரத் தரப்புத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
திருமணமாகாத பல யுவதிகள் தகாத உறவின் மூலம் கருவுற்று கருக்கலைப்புச் செய்வதையும், கருவினைக் கலைக்க முடியாதவர்கள் பிள்ளைகளைப் பெற்று அச்சிசுக்களை வீதியோரங்களிலும், காடு, பற்றைகளிலும் எறிந்து விட்டுச் செல்வதையும் அதற்காக அத்தகையவர்கள் கைது செய்யப்படுவதும் இலங்கையில் இடம்பெறுகின்ற குற்றச் செயல்களின் பட்டியலில் ஒன்றாகக் காணப்படுகிறது. நாகரிகம் என்ற போர்வையில் விழுமியங்கள் மாசுபடுத்தப்படுகின்றமைய இந்நிலைமைகளுக்குக் காரணமாகிறது என்பதையும் சுட்டிக்காட்டுவது அவசியமாகும்.
விழுமியக் கல்வியும் ஆபத்துத் தவிர்ப்பும்
அநாகரிகப் போதைக்குள் விழுந்து தத்தளிக்கும் இளம் சமுதாயத்தினருக்கு ஒழுக்க விழுமியங்களாடு வாழ்வதற்கான வழிகாட்டல்கள் வழங்கப்படுவது அவசியமாகும். சமூக, பொருளாதார, குடும்ப சீரழிவை ஏற்படுத்தும் இத்தகைய ஒழுக்கவிழுமியமற்ற நடத்தைப் பிறழ்வுகளிலிருந்து எதிர்கால சமூகத்தைப் பாதுகாக்கவும் ஒழுக்கவிழுமியமிக்க எதிர்கால சமூகத்தை உருவாக்கவும் விழுமியக் கல்வித்திட்டமும் விரசமற்ற பாலியல் கல்வியும் முறையாக பாடசாலைகளில் நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை உணரப்படுவதும் அவசியமாகும்.
இலங்கையில் மாணவப் பருவத்திலுள்ளவர்களும் எயிட்ஸ் தொற்றுகைக்கு உள்ளாகியுள்ளமை தொடர்பில் அவதானம் செலுத்தப்படுகிறது. இது தொடர்பில் மாணவர்களை அறிவூட்டுவதற்காக பாடசாலைகளில் பாலியல் கல்வி நடைமுறைப்படுத்தப்படுகின்றபோது இக்கல்வி நடவடிக்கைகளும் அதன் பாடப்பரப்புக்களும் பாலியல் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாக அமைந்து விடாத வகையில் இப்பாடதுக்கான பாடவிதான அலகுகள் தயார்படுத்தப்படுவது அவசியமாகும்.
சமூக ஒழுங்குப் பிறழ்வுகள், பயில் நிலை வழியாகச் சீர்படுத்தப்பட வேண்டுமாயின் பாடசாலைக் கலைத்திட்டத்தில் அனுபவங்கள் உள்ளடக்கப்பட வேண்டும். பாடசாலைக் கலைத்திட்ட அமைப்பியலையும் அதன் சமகால செயல் நிலைகளையும் ஆராய்ந்து பார்க்கும்பொழுது மாணவர்களிடையேயும் ஒரு சில ஆசிரியர்களிடையேயும் ஆரோக்கிய மனவெழுச்சிக்குரிய பயிற்சிகள் போதாமல் இருப்பது தெளிவாகிறது.
ஆரோக்கியமான மனவெழுச்சிக்குரிய பயிற்சிகளும் விழுமியக் கல்வியும் ஒன்றிணைந்தவையாகக் காணப்படுவது அவசியமாகும். தற்கால மாணவ சமூகத்தின் மனவெழுச்சிகள், மனப்பாங்குகள், நடத்தைக்கோலங்களை உற்றுநோக்குகின்றபோது அவை ஆரோக்கியமானதாக அமையவில்லை என்பதோடு இந்நிலைமைகள் பாடசாலைகளில் விழுமியக் கல்வியை வலியுறுத்தும் நிலையை உருவாக்கியுள்ளதாக கல்வியிலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஏனெனில், ஒழுக்க விழுமியமுள்ள எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் கேந்திரத் தளமாக பாடசாலைகள் மிளிர்கின்றன. பாடசாலைகளிலிருந்து ஒழுக்கவிழுமியமுள்ள எதிர்கால சமூகம் உருவாக்கப்படுவது இன்றியமையாதது.
நடத்தைப் பிறழ்வுகளால், விழுமியமற்ற செயற்பாடுகளால் ஏற்படுகின்ற நோய்கள் முதல் ஏனைய சமூகம் அங்கீகரிக்காத சமூக விரோத நடவடிக்கைகள் சமூகத்தின் மத்தியிலிருந்து ஒழிக்கப்பட வேண்டுமாயின், அதன் ஆபத்துக்கள் அதிகரிக்கப்படாமல் தடுக்கப்பட வேண்டுமாயின் அவை தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முறையாக முன்னெடுக்கப்படுவதுடன் ஒழுக்க விழுமியங்களைப் பேணி நடக்கக் கூடிய ஆரோக்கியமுள்ள எதிர்காலச் சமூகம் கட்டியெழுப்பப்படுவதும் காலத்தின் கட்டாயமாகும். இந்தக் கட்டாயத் தேவை உணரப்பட்டு செயல் உருவப்பெறுகின்ற போதுதான் எதிர்கால சந்தததியினரை ஆபத்துக்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.


Comments
Post a Comment