முசலி சத்­தி­யாக்­கி­ரகம் : தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்தம்

பைஸர், ரிஷாத் நேரில் சென்று உறு­தி­மொழி வழங்­கினர்
மாவில்லு வர்த்­த­மானி பிர­க­ட­னத்தில் தமக்கு இழைக்­கப்­பட்­டுள்ள அநீ­தி­களை போக்கி, பிர­க­ட­னத்தை இரத்துச் செய்ய வேண்­டு­மென கடந்த 44 நாட்­க­ளாக மறிச்­சிக்­கட்­டியில் கவ­ன­யீர்ப்புப் போராட்­டத்தை மேற்­கொண்ட பாதிக்­கப்­பட்ட மக்கள் தமது போராட்­டத்தை நேற்று மாலை தற்­கா­லி­க­மாக இடை நிறுத்­திக்­கொண்­டனர். 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் நேற்­று­முன்­தினம் காலை நடாத்­திய பேச்­சு­வார்த்­தையில் ஏற்­பட்ட புரிந்­து­ணர்வின் அடிப்­ப­டையில் மாவில்லு வர்த்­த­மானி பிர­க­ட­னத்தில் ஏற்­பட்­டுள்ள தவ­று­களை திருத்தும் வழி­வ­கைகள் ஏற்­பட்­டுள்­ளதால் போராட்­டத்தை 
தற்­கா­லி­க­மாக நிறுத்­து­மாறு அமைச்­சர்­க­ளான றிஷாட் பதி­யுதீன், பைசர் முஸ்­தபா மற்றும் முஸ்லிம் கவுன்சில் தலைவர் ஆகியோர் விடுத்த வேண்­டு­கோளை ஏற்­றுக்­கொண்டே இந்தப் போராட்டம் தற்­கா­லி­க­மாக கைவி­டப்­பட்­டது. 

அர­சியல் பிர­மு­கர்­க­ளான றிஷாட், பைசர் முஸ்­தபா, அசாத் சாலி மற்றும் சிவில் அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள் விமானம் மார்க்­க­மாக களத்­துக்குச் சென்று ஜனா­தி­ப­தி­யுடன் முஸ்லிம் சிவில் அமைப்­புக்­களும் தாங்­களும் ஒரு­மித்து இணைந்து நடாத்­திய பேச்­சு­வார்த்­தையின் விவ­ரங்­களை வெளி­யிட்­ட­துடன் மேற்­கொண்டு தங்­களால் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள நட­வ­டிக்­கைகள் குறித்தும் விப­ரித்­தனர்.
ஜனா­தி­ப­தியின் பணிப்­பு­ரையின் பேரில் எதிர்­வரும் 13 ஆம் திகதி ஜனா­தி­ப­தியின் செய­லா­ள­ருடன் நடாத்­தப்­ப­ட­வுள்ள பேச்­சு­வார்த்­தையில் தீர்க்­க­மான முடி­வொன்று கிடைக்­கு­மென்ற நம்­பிக்­கையை வெளி­யிட்டு, அர­சியல் முக்­கி­யஸ்­தர்­களும் சிவில் அமைப்­புக்­களின் முக்­கி­யஸ்­தர்­களும் போராட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்­களின் மத்­தியில் உரை­யாற்­றினர். இந்த நிகழ்வில் மஸ்தான் எம்.பி மக்கள் காங்­கி­ரசின் செய­லாளர் சுபைர்தீன், முஸ்லிம் கவுன்­சிலின் உப தலைவர் ஹில்மி அஹமட், சிரேஸ்ட சட்­டத்­த­ரணி என்.எம்.ஸஹீட் ஆகி­யோரும் பங்­கேற்­றி­ருந்­தனர். 

அமைச்சர் பைசர் முஸ்­தபா இங்கு கூறி­ய­தா­வது, உங்கள் துன்­பங்­க­ளையும் துய­ரங்­க­ளையும் நான் அறிந்து கொண்­டவன். நீங்கள் படும் கஷ்­டங்­க­ளை­விட உங்­க­ளுக்­காக அவர் படு­கின்­ற­பாடு பெரும்­பா­டாக இருக்­கின்­றது.

அமைச்சின் பணி­க­ளை­விட உங்­களின் பணி­க­ளுக்கு அவர் முன்­னு­ரி­மை­ய­ளித்து வரு­கின்றார்.

1990 ஆம் ஆண்டு நீங்கள் இந்­தப்­பி­ர­தே­சத்தில் எவ்­வாறு வாழ்ந்­தீர்­களோ அதே உரி­மை­யுடன் உங்­களை வாழ அனு­ம­திக்­கு­மாறு ஜனா­தி­ப­தி­யிடம் வலி­யு­றுத்­தி­யுள்ளோம். அவர் ஒரு இன­வா­தி­யல்ல, எனினும் சூழ­லைப்­பா­து­காக்கும் நோக்கில் சில தவ­றுகள் இடம்­பெற்­றுள்­ளதை சந்­திப்பின் போது ஒப்­புக்­கொண்டார். சரி­யான பதில் கிடைப்­ப­தற்­கா­கவே மக்கள் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ள­தா­கவும் இது நியா­ய­மா­ன­தெ­னவும் நாங்கள் உணர்த்­தினோம் என­வேதான் குழு­வொன்றை நிய­மித்து இதற்கு தீர்வு காண பணித்­துள்­ள­தாக அவர் கூறினார். அதன் வெளிப்­பாடே எதிர்­வரும் 13 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள உயர்­மட்­டக்­கூட்டம். உங்­களின் நில­வு­ரிமைப் போராட்­டத்­துக்கு உரிய தீர்வு கிடைக்­கா­விட்டால் நாம் இந்­தப்­பி­ரச்­சி­னையை இத்­துடன் விட்­டு­வி­டப்­போ­வ­தில்லை. புலி­க­ளினால் ஏற்­க­னவே பாதிக்­கப்­பட்ட உங்­களை அர­சாங்­கமும் விரட்­டி­ய­டிக்க இட­ம­ளிக்க மாட்டோம் என உறு­தி­ய­ளித்தார்.

அமைச்சர் றிஷாட் இங்கு உரையாற்றிய போது, அரசின் பலமின்றி மறிச்சிக்கட்டி பிரதேசத்தில் மீள்குடியேற்றத்தை ஆரம்பித்து இந்தப்பிரதேசத்தை அழகுபடுத்த தாம் மேற்கொண்ட முயற்சிகளை இனவாதிகளுக்கு காட்டிக்கொடுத்து வில்பத்துவை அழிக்கின்றார்கள் என்ற கருப்பொருளை அவர்களுக்கு வழங்கி எமது பிரதேசத்தின் மீள்குடியேற்றத்துக்கு தடையாக இருந்த ஒரு சிலர் தொடர்பாக தாம் வேதனையடைகியோம் என்றார்.

Comments