பொலநறுவை - ஓனேகம முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல்


பொது­ப­ல­சேனா அமைப்பு, சிங்­கள ராவய மற்றும் சிங்­கலே அபி அமைப்­பு­களை ஒன்­றி­ணைத்துக் கொண்டே முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

கடந்த காலங்­களில் பொது­ப­ல­சேனா அமைப்பு முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களில் தனித்தே கள­மி­றங்­கி­யது. ஹலால் சான்­றிதழ் விவ­கா­ரத்தில் தனித்துக் கள­மி­றங்கி போரா­டி­யதை நாம் கண்டோம். அளுத்­கம வன்­செ­யல்­க­ளையும் பொது­ப­ல­சேனா அமைப்பு தனித்தே நெறிப்­ப­டுத்­தி­யது. ஆனால் அண்­மைய கால­மாக ஞான­சார தேரர், சிங்­கள ராவய மற்றும் சிங்­கலே அபி அமைப்­புடன் கை­கோர்த்­துக்­கொண்­டுள்ளார்.

அவ­ருடன் ஊடக மாநா­டு­களில் சிங்­கள ராவய அமைப்பின் செய­லாளர் மாகல்­கந்தே சுதந்த தேரர் மற்றும் சிங்­கலே அபி அமைப்பின் செய­லாளர் ஜம்­பு­ரே­வில சந்­த­ரத்ன தேரர் ஆகிய இரு­வரும் இரு­பக்­கங்­க­ளிலும் அமர்ந்­தி­ருப்­பதைக் காண முடி­கி­றது. அமைச்சர் மனோ­க­ணே­ச­னுடன் ஞான­சார தேரரின் நேரடிச் சந்­திப்பின் போதும் இவர்­களைக் காண முடிந்­தது. கடந்த 14 ஆம் திகதி பொல­ந­றுவை ஓனே­கம,  ஜல­கெ­லும்­மின்ன வன­பா­து­காப்பு பிர­தே­சத்தை அண்­மித்த பகு­தி­க­ளிலும் இவர்கள் மூவ­ரையும் காண முடிந்­தது.

பொல­ந­றுவை, ஓனே­கம பகு­திக்கு கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை அத்­து­மீறிப் பிர­வே­சித்த பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரரும், சிங்­கள ராவய அமைப்பின் செய­லாளர் மாகல்­கந்தே சுதந்த தேரர் மற்றும் சிங்­ஹலே அபி அமைப்பின் செய­லாளர் ஜம்­பு­ரே­வில சந்­த­ரத்ன தேரர் உட்­பட குழு­வினர் முஸ்­லிம்­க­ளுக்கு அச்­சு­றுத்தல் விடுத்­தனர்.

அப்­ப­குதி முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான 5 மாட்டுப் பண்­ணை­களை தாக்கி சேதப்­ப­டுத்­தி­ய­துடன் மட்­டு­மல்­லாது கொட்­டில்­களைக் கழற்­றி­யெ­றிந்­தனர். முஸ்­லிம்கள் அவ்­வி­டத்தைக் கைவிட்டு வெளி­யேற வேண்­டு­மெ­னவும் அச்­சு­றுத்தல் விடுத்­தனர்.

முஸ்­லிம்­க­ளையும் இஸ்­லாத்­தையும் அவ­தூ­றாகப் பேசி­னார்கள். அல்­லாஹ்வை நிந்­தித்­தார்கள். முஸ்­லிம்கள் சோமா­வதி வன­பா­து­காப்பு பிர­தேச எல்­லையில் அமைந்­துள்ள ஜல­கெ­லும்­மின்ன வன­பா­து­காப்பு பிர­தே­சத்தை ஆக்­கி­ர­மித்­துள்­ள­தாக குற்றம் சுமத்­தி­னார்கள். 
பௌத்த சைத்­திய நிர்­மா­ணத்­துக்குப் பயன்­ப­டுத்­தப்­பட்ட கற்­களைப் பயன்­ப­டுத்தி முஸ்­லிம்கள் மாட்டுத் தொழு­வங்­களை நிர்­மா­ணித்­தி­ருப்­ப­தா­கவும் குற்றம் சுமத்­தி­ய­துடன் மட்­டு­மல்­லாது ஞான­சார தேரர் அல்­லாஹ்வை கடு­மை­யாகத் தூற்­றி­யுள்ளார்.

ஞான­சார தேரர் அல்­லாஹ்வை தூற்றி அவ­தூ­றாகப் பேசி­ய­மைக்­காக அவ­ருக்கு எதி­ராக சிவில் சமூக செயற்­பாட்­டாளர் அன்வர் மன­துங்க, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் பொலிஸ் மா அதி­ப­ரிடம் முறைப்­பா­டு­களை பதிவு செய்­துள்­ளனர். ஞான­சார தேரர், சிங்­கள புரா­தன பிர­தே­சங்­களை முஸ்­லிம்கள் ஆக்­கி­ர­மித்­துள்­ள­தா­கவும் வெஹ­ர­கொ­டல்ல என்ற சிங்­கள புரா­தன இடம் இன்று பள்­ளி­ய­கொ­டல்­ல­வாக மாற்­றப்­பட்­டுள்­ள­தா­கவும் குற்றம் சுமத்­தினார்.

சுமார் 50 பேர் கொண்ட இன­வாத குழு­வினர் இப்­பி­ர­தே­சத்­துக்குள் அத்­து­மீறி பிர­வே­சித்தே இந்த அடா­வ­டித்­த­னங்­களை முன்­னெ­டுத்­தனர். 4 மாட்டுப் பண்­ணைகள் முற்­றாக சேத­ம­டைந்­துள்­ள­துடன் சுமார் 2 இலட்சம் ரூபா வரையில் நஷ்­ட­மேற்­பட்­டுள்­ள­தாக அப்­ப­குதி மக்கள் தெரி­விக்­கின்­றனர்.

இந்த மகா­வலி கங்கை கரை­யோர பிர­தே­சங்­களில் முஸ்­லிம்கள் பல தசாப்­தங்­க­ளாக வாழ்ந்து வரு­கி­றார்கள். இவர்­க­ளது பிர­தான வாழ்­வா­தாரம் விவ­சா­யமும் பண்ணை வளர்ப்­பு­மாகும். இப்­பி­ர­தே­சத்தில் முஸ்­லிம்கள் 1927இலி­ருந்து வாழ்ந்து வரு­வ­தற்கு ஆதா­ர­மாக அவர்­க­ளது காணி உறு­திகள் உள்­ளன. மாட்டுப் பண்­ணைகள் மற்றும் கொட்­டில்கள் தாக்கி சேதப்­ப­டுத்­தப்­படும் போது பொலிஸார் அங்கு பாது­காப்புக் கட­மையில் ஈடு­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

பொல­ந­றுவை, ஓனே­கம பகு­திக்­கான தனது விஜயம் தொடர்­பாக ஞான­சார தேரர் ஊட­கங்­க­ளுக்கு விளக்­க­ம­ளிக்­கையில் பின்­வ­ரு­மாறு தெரி­வித்­துள்ளார். 

பொல­ந­றுவை, ஓனே­கம பகு­தி­யை­ய­டுத்­துள்ள ஜல­கெ­லும்­மின்ன பகு­திக்கு நாம் சென்றோம். இது சோமா­வதி வன பாது­காப்பு பிர­தேச எல்­லை­யி­லுள்ள வன­பி­ர­தே­ச­மாகும்.  இது ஓர் புரா­தன தொல்­பொருள் பிர­தே­ச­மாகும்.  இப்­பி­ர­தே­சத்தில் முஸ்­லிம்கள் 2000 ஏக்கர் நிலத்தை காட­ழித்து விவ­சாயம்  செய்­துள்­ளார்கள். 

இப்­ப­கு­தியில் 21 பரி­வார சைத்­தி­யாக்கள் மற்றும்  விகா­ரைகள், தொல்­பொருள் வல­யங்கள் அடங்­கி­யுள்­ளன. விவ­சாயம் என்ற போர்­வையில்  காடு­களை அழித்­துள்ள முஸ்­லிம்கள் சைத்­தி­யாக்­களை சிதைத்­துள்­ளார்கள். இந்த சைத்­தி­யாக்கள் பொல­ந­றுவை யுகத்தில் அர­சர்­களால்  நிர்­மா­ணிக்­கப்­பட்­ட­வை­க­ளாகும். சைத்­தி­யாக்கள்  நிர்­மா­ணிக்­கப்­பட்­டி­ருந்த கற்­களைக் கழற்றி மாட்டுத் தொழு­வங்­களை அமைத்­தி­ருக்­கி­றார்கள். 

விகா­ரை­களைத் தோண்டி புதையல் தேடி­யி­ருக்­கி­றார்கள். எல்லா இடங்­க­ளிலும் மாடு­களின் எலும்­பு­களே காணப்­ப­டு­கின்­றன. யுத்த காலத்தில் கூட இவ்­வா­றான அழி­வுகள் ஏற்­ப­ட­வில்லை. காடுகள் அழிக்­கப்­ப­ட­வில்லை. காட்டில் அன்று யானைகள்  நிறைந்­தி­ருந்­தன. தற்­போது காடுகள் அழிக்­கப்­பட்­டி­ருப்­பதால் யானை­களால் பக்­கத்து கிராம மக்­க­ளுக்கு ஆபத்து ஏற்­பட்­டி­ருக்­கி­றது. 

நூற்­றுக்­க­ணக்­கான வரு­டங்கள் பழைமை வாய்ந்த மருத மரங்கள் சட்­ட­வி­ரோ­த­மாக வெட்­டி­யெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. இலங்­கை­யிலே இப்­பி­ர­தே­சத்­திலே 10 வகை­யான மரு­த­ம­ரங்கள் இருக்­கின்­றன. வட­மத்­திய மாகாண முத­ல­மைச்­சரின்  வீடு  நிர்­மா­ணிப்­ப­தற்கும் இப்­பி­ர­தே­சத்­தி­லி­ருந்தே மரு­த­ம­ரங்கள் கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளன. 

இப்­பி­ர­தே­சத்­தி­லுள்ள முஸ்­லிம்­களே வன பிர­தே­சத்­துக்குச் சொந்­தக்­கா­ரர்­க­ளாக செயற்­ப­டு­கி­றார்கள்; முஸ்­லிம்கள் இவ்­வாறு வனப் பிர­தே­சங்­களை தேசிய வனங்களை அழிக்­கி­றார்கள்; ஆக்­கி­ர­மிப்புச் செய்­கி­றார்கள். அர­சாங்கம் இவர்­க­ளுக்கு எதி­ராக எந்த நட­வ­டிக்­கையும் எடுப்­ப­தில்லை. ஏனென்றால் காட­ழிப்­ப­திலும் பெறு­ம­தி­யான  மரங்கள் வெட்­டப்­ப­டு­வ­திலும் அர­சி­யல்­வா­திகள் பின்­ன­ணியில் இருக்­கி­றார்கள். எனவே நாம் இந்த சட்­ட­வி­ரோத  செயற்­பா­டு­களை தடுப்­ப­தற்­கான முயற்­சி­களில் இறங்­கி­யுள்ளோம். 

தொல்­பொருள் ஆணை­யா­ள­ரினால் தொல்பொருள் பிரதேசங்கள் அழிக்கப்படுவதை தடுக்க  முடியாதென்றால் அவர் பதவி விலகிக் கொள்ளவேண்டும். அப்பதவிக்கு தகுதியான ஒருவர், கடுமையாக  நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடிய ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்றார். 

இதேவேளை வடமத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். அன்சார்  ‘இப்பகுதி மக்கள் தமது சட்டரீதியான காணிகளிலே விவசாயம் செய்துள்ளார்கள். அவர்களிடம் 1927 ஆம் ஆண்டு காணியுறுதிகள்  இருக்கின்றன எனத் தெரிவித்துள்ளார்.

பௌத்த தேரர்களின் சட்டத்துக்கு முரணான நடவடிக்கைகள் லங்காபுர பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மாகாணசபை உறுப்பினர் அன்சார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைத் தொடர்பு கொண்டு இவ்விவகாரத்தில் தலையிட்டு சுமுகமான தீர்வொன்றினைப் பெற்றுத்தருமாறு கோரியுள்ளார்.

Comments