சிலாவத்துறையில் மக்களது காணியை அளக்க முற்­பட்­ட­மைக்கு கடும் எதிர்ப்பு

தலை­மன்னார் நிருபர்

சிலா­வத்­துறை கடற்­படை முகாம் அமைந்­துள்ள பொது­மக்­களின் காணியை நில அளவை செய்ய நில அள­வை­யா­ளர்கள் முற்­பட்­ட­போது மக்கள் எதிர்ப்பு போராட்­டத்தில் ஈடு­பட்­டனர்.

மன்னார் சிலா­வத்­துறை பகு­தியில் பொது மக்­க­ளுக்கு உரித்­தான காணிகள் என தெரி­விக்­கப்­படும் நிலங்­களை திடீ­ரென நில அள­வை­யா­ளர்கள் நில அளவை செய்ய முற்­பட்­ட­போது அவ்வூர் மக்கள் வீதியில் இறங்கி "எங்கள் நிலங்­களை நில அளவை செய்ய வேண்டாம்" என கோரியும் சிலா­வத்­து­றையில் பொது மக்­களின் காணியில் இருக்கும் கடற்­ப­டையை அகற்ற கோரியும் ஆர்­பாட்டம் செய்­தனர்.

இச் சம்­பவம் மன்னார் சிலா­வத்­து­றையில் நேற்று காலை பத்து மணி­ய­ளவில் நடை­பெற்­றது.

மன்னார் மாவட்ட நில அளவைத் திணைக்­க­ளமும் முசலி பிர­தேச காணி கிளை­யி­னரும் முசலி பிர­தேச செய­லா­ளரின் வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்க, அப்­ப­கு­தி­யி­லுள்ள பொது மக்­க­ளுக்கு உரித்­தான காணி­களை நில அளவை செய்ய முற்­பட்­டனர். இதன்­போது சிலா­பத்­துறை பிர­தேச மக்கள், வர்த்­தக சங்க உரி­மை­யா­ளர்கள் மற்றும் காணி மீட்பு குழு­வினர் அனை­வரும் ஒன்­றி­ணைந்து கடற்­படை முகா­முக்கு முன்னால் பதா­தைகள் ஏந்­தி­ய­வர்­க­ளாக எதிர்ப்பு ஆர்­பாட்­டத்தில் இறங்­கினர்.

அதா­வது பொது மக்­களின் நிலங்­களில் நிலை கொண்­டி­ருக்கும் கடற்­படை முகாமை அகற்றக் கோரியும், அரச உட­மை­யாக்­கு­வ­தற்­காக பொது மக்­களின் காணி­களை நில அளவை செய்ய வேண்டாம் என கோரியே இவ் இப் போராட்­டத்தை மேற்­கொண்­ட­தாக தெரி­வித்­தனர்.
இது விட­ய­மாக இவ் பிர­தேச மக்கள் கருத்து தெரி­விக்­கையில்,

சிலா­வத்­துறை கடற்­படை முகாம் அமைந்­துள்ள காணி எங்­க­ளு­டைய பாரம்­ப­ரிய காணி­யாக இருக்­கின்­றது. இதில் இலங்கை அர­சாங்­கத்தின் கடற்­ப­டை­யினர் அத்­து­மீறி முகாமை அமைத்து  நிலை கொண்டு வரு­கின்­றனர். இவற்றில் தமிழ் முஸ்லிம் களின் நிலங்­களும் உள்ளன.

இது தொடர்பில் பல முஸ்லிம், தமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளிடம் கோரிக்­கை விடுத்த போதும் எங்கள் பிரச்­சினை தொடர்பில் இது­வ­ரைக்கும் உரிய தீர்­வினை பெற்று தர­வில்லை எனவும் விசனம் தெரி­வித்­தனர்.

இவர்­களின் இந்த எதிர்ப்பு ஆர்­பாட்­டத்தைத் தொடர்ந்து நில அள­வை­யா­ளர்கள் இது விட­ய­மாக நீங்கள் பிர­தேச செய­லாளருக்கு ஆட்­சே­பனை கடிதம் தரும்­படி கோரி­ய­துடன் முசலி பிர­தேச செய­ல­கத்­துக்குச் சென்று மக்கள் தங்கள் ஆட்­சே­பனை மகஜர் ஒன்­றையும் கையளித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து நில அளவை செய்வது தற்காலிகமாக  நிறுத்தப்பட்டு முசலி பிரதேச செயலாளருடன் இது விடயமாக கலந்துரையாடப்பட்டபின் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments