மாணிக்­க­மடு காணி சுவீ­க­ரிப்பு விவ­காரம் : தமிழ்--­முஸ்லிம் தரப்­புகள் இணைந்து செயற்­பட திட்டம்

ARA.Fareel

இறக்­காமம் பிர­தேச செய­ல­கத்­திற்­குட்­பட்ட மாணிக்­க­ம­டு–­மா­யக்­கல்லி மலை­ய­டி­வா­ரத்தில் பல­வந்­த­மாக விகாரை அமைக்கும் முயற்­சியை தடுப்­ப­தற்கு தமிழ் மற்றும் முஸ்லிம் தரப்­புகள் இணைந்து செயற்­பட தீர்­மா­னித்­துள்­ளன.

இது குறித்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புக்­கு­மி­டை­யி­லான சந்­திப்பின் பின்னர் பல இணக்­கப்­பா­டுகள் எட்டப்பட்டுள்ளன.

அத்­துடன், மாணிக்­க­ம­டு–­மா­யக்­கல்லி மலை காணிச் சுவீ­க­ரிப்பு மற்றும் விகாரை அமைக்கும் விவ­காரம் தொடர்பில் தான்
உட­ன­டி­யாக கவனம் செலுத்­து­வ­தா­கவும் அநீ­தி­யான செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்கு ஒரு போதும் இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டா­தெ­னவும் ஜனா­தி­பதி மைத்­திரி பால சிறி­சேன ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் நக­ரத்­திட்­ட­மிடல் மற்றும் நீர்­வ­ழங்கல் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன்,  கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் ஏ. நஸீர் அஹமட் ஆகி­யோ­ரிடம் உறு­தி­ய­ளித்­துள்ளார்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை பாரா­ளு­மன்ற வளா­கத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் எதிர்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன், கிழக்கு முத­ல­மைச்சர் ஏ. நஸீர் அஹமட் ஆகியோர் ஜனா­தி­ப­தியைச் சந்­தித்து மாயக்­கல்லி மலை­ய­டி­வார காணிச்­சு­வீ­க­ரிப்பு மற்றும் அங்கு விகாரை அமைக்கும் முயற்­சிகள் குறித்து முறை­யிட்­டனர்.

பௌத்த தேரர்­க­ளினால் முன்­னெ­டுக்­கப்­படும் இச் செயல்கள் அப்­பி­ர­தே­சத்தில் இன­நல்­லு­ற­விற்கும் பாதிப்­பினை ஏற்­ப­டுத்தும் என்­ப­தையும் விளக்­கி­னார்கள். தமிழ் மற்றும் முஸ்­லிம்கள் செறிந்து வாழும் பகு­தியில் முஸ்­லிம்­களின் 2½ ஏக்கர் காணியைச் சுவீ­க­ரித்து அவ்­வி­டத்தில் விகாரை நிர்­மா­ணிப்­ப­தற்கு அம்­பாறை மாவட்ட செய­ல­கத்தில் அர­சாங்க அதிபர்  தலை­மையில் நடை­பெற்ற கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்டு மறு­தினம் காணி அள­வீடு நில­அ­ளவைத் திணைக்­க­ளத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்­டது. இவ்­வி­வ­காரம் தொடர்பில் கடந்த வியா­ழக்­கி­ழமை அமைச்சர் ரவூப் ஹக்­கீமும் எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்­தனும் சந்­தித்து கலந்­து­ரை­யாடி இரு­வரும் இணைந்து செயற்­ப­டு­வ­தாகத் தீர்­மா­னித்­தனர். இதற்­க­மை­வா­கவே மறு­தினம் வெள்­ளிக்­கி­ழமை ஜனா­தி­ப­தியைச் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினர்.

மாயக்­கல்லி மலை­ய­டி­வா­ரத்தில் விகாரை அமைப்­ப­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள நட­வ­டிக்­கைகள், இத­னை­ய­டுத்து அப்­ப­கு­தியில் உரு­வா­கி­யுள்ள பதற்ற நிலை, தேரர்­களின் நட­வ­டிக்­கைகள் என்­பன இரு தலை­வர்­க­ளாலும் ஜனா­தி­ப­தி­யிடம் விளக்­கப்­பட்­டுள்­ளன.
மாயக்­கல்லி மலையை அடுத்து வாழும் தமிழ், முஸ்லிம் மக்­களின் காணி உறு­தியின் பிர­திகள் மற்றும் ஆவ­ணங்கள் ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளிக்­கப்­பட்­டன.

கடந்த கால அர­சாங்­கத்­தினால் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள நட­வ­டிக்­கை­க­ளி­லி­ருந்தும் மீட்சி பெறு­வ­தற்­கா­கவே நல்­லாட்சி அர­சாங்­கத்­துக்கும் ஜனா­தி­ப­திக்கும் முஸ்­லிம்கள் பூரண பங்­க­ளிப்பை வழங்­கி­னார்கள். என்­றாலும் அவ்­வா­றான அநீ­திகள் தொடர்ந்தும் நடை­பெற்று வரு­கின்­றன என்­பதை அமைச்சர் ஹக்கீம் ஜனா­தி­ப­தி­யிடம் விளக்­கினார்.

இவ்­வா­றான நிலை­மைகள் இந்த அர­சாங்­கத்தில் தொடரக் கூடாது என இரு தலை­வர்­க­ளாலும் கோரிக்கை விடுக்­கப்­பட்­டது.

“மாயக்­கல்லி” மலைப்­பி­ர­தே­சத்தைச் சூழ சிறு­பான்­மை­யி­னரே வாழ்­கின்­றனர். அவர்­க­ளிடம் சட்­ட­ரீ­தி­யான காணி உறுதிகள் உள்ளன. கிழக்குமாகாணசபையில் இது தொடர்பாக பிரேரணை ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆராய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. குழு தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும் வரை இவ்விவகாரத்தில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்பதையும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திப்பின் போது விளக்கினார்.

Comments