ஹஜ் முகவர்களுக்கு எதிரான முறைப்பாடு : விசாரணை நாளை பூர்த்தி
2016 ஆம் வருடம் ஹஜ் யாத்திரை மேற்கொண்ட ஹஜ்ஜாஜிகள் தாம் பயணித்த ஹஜ் முகவர் நிலையங்களுக்கு எதிராக சமர்ப்பித்துள்ள முறைப்பாடுகள் மீதான விசாரணைகள் நாளை புதன்கிழமை நிறைவு பெறவுள்ளதாக ஹஜ் முறைப்பாடுகளை விசாரிக்கும் குழுவின் செயலாளர் ரபீக் இஸ்மாயில் தெரிவித்தார்.
ஹஜ் முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் பற்றி கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், புதன்கிழமை (நாளை) விசாரணைகள் பூரணப்படுத்தப்பட்டு தயாரிக்கப்படும் அறிக்கை சில தினங்களில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திடம் கையளிக்கப்படும்.
2016 ஆம் ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்றிய ஹஜ்ஜாஜிகளினால் 17 ஹஜ் முகவர் நிலையங்களுக்கு எதிராக முறைப்பாடுகள் வைக்கப்பட்டுள்ளன.
விசாரணையின் போது குற்றவாளிகளாக நிரூபிக்கப்படும்ஹஜ் முகவர்களுக்கு எவ்வகையான தண்டனை வழங்கப்படும் என்பதையும் ஹஜ் முறைப்பாட்டு விசாரணைக்குழு சிபாரிசு செய்யும்.
ஹஜ் முறைப்பாட்டு விசாரணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதியும் வக்பு ட்ரீபியுனலின் தலைவருமான யு.எல்.ஏ.மஜீட் கடமையாற்றுவதுடன் குழுவின் அங்கத்தவர்களாக கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நிர்வாக சபைத்தலைவர் சட்டத்தரணி நத்வி பஹாவுதீன் மற்றும் ஓய்வுபெற்ற நீர்வழங்கல், நகரத்திட்டமிடல் அமைச்சின் செயலாளர் மொய்னுதீன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.


Comments
Post a Comment